வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்


தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை தலைநகரதிற்கு அண்மையில் உள்ள கட்டுநாயக்க விமானபடைதளத்தின் மீது முதலாவது வான் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.உள்ளூர் இலங்கை நேரப்படி அதிகாலை 12.45 மணியளவில் புலிகளின் வான்படையை சேர்ந்த 2 இலகு ரக விமானங்கள் இத்தாக்குதலை நடாத்தியதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இவ் வீமான குண்டுவீச்சில் இலங்கை விமானபடையினர் மூவர் கொல்லப்பட்டும் 16 பேர் காயமுற்றும் உள்ளனர்.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களோ,ஒடுபாதைகளோ தாக்குதலில் சேதமடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
Cquote1.svg தமிழ் சிவிலியன்களை இலங்கை அரசின் வான் குண்டுதாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது Cquote2.svg

—இராசைய்யா இளந்திரயன் புலிகளின் படைதுறை பேச்சாளர்


இத்தாக்குதல் பற்றி இலங்கை தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையம் வெளியிட்ட அறிக்கையில் "நிலமை முழுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் அடைந்து வரும் தோல்விகளை மறைக்கவே இப்படியான கோழைத்தன்மான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புலிகளின் இராணுவ பேச்சாளரின் கருத்து வெளியிடும்போது "தமிழ் சிவிலியன்களை இலங்கை அரசின் வான் குண்டுதாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே,இதே பாணியிலான தக்குதல் மேலும் தொடவே செய்யும்" கூறினார்.

மேற்படி தக்குதலில் அருகே அமைந்துள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எந்த வோரு சேதமும் ஏற்படவில்லை என தெரியவரிகின்றது.

இதற்கு முன்னரும் 2001 மாண்டிலும் கட்டுநாயக்க விமான படைத்தளமும்,விமான நிலயமும் தரைவழியான ஊடறுப்புத் தாக்குதலில் மோசமான அழிவிற்கு உள்ளானது.

உலகிலே சொந்தமாக விமானப்படையினை வைத்திருக்கும் ஒரே ஒரு கெரில்லா அமைப்பாக தற்போது விடுதலைப்புலிகள் இருக்கின்றனர்.
பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2


பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் - 2 என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.


1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.

இந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.
[தொகு] தாக்குதல்

கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

நகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.

ஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் 'பெல் 212' ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.
[தொகு] இத்தாக்குதலில் கொல்லப்பட்ட கரும்புலிகள்

* கரும்புலி கப்டன் நவரட்ணம்
* கரும்புலி லெப். ரங்கன்
* கரும்புலி மேஜர் ஜெயம்
* கரும்புலி மேஜர் திலகன்
* கரும்புலி கப்டன் திரு