புதன், 27 ஜனவரி, 2010

http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1264552048&archive=&start_from=&ucat=1&

ஜனவரி -11


"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."

தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்
யாழ் தீவகம் சாட்டியில் மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழிப்பு

யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் உள்ள சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாயக விடுதலைக்காக போராடி தம் இன்னுயிர்களை ஈகம்செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.


இந்நிலையில் சிறீலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கபட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்படாமல் இருந்த நிலையில், அண்மையில் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் வழிபாட்டுதலங்கள் என்பன சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் தீவகத்தில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைகளை பசில் ராஜபக்சவே முன்னின்று செய்வதாகவும், இப்படியான இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிறீலங்கப்படையினரின் போர் வெற்றி நினைவு தூபிகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது தமிழர்களின் இதயங்களில் என்றும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.








“நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

இதைப் பற்றி சில விளக்கங்களை சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

”புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.

புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

புலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.”

இந்த ஆண்டு மார்ச் கடைசியில் வெளிவந்த ஒருபேப்பரில் புலிக் கொடி குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் என்னிடம் ஒரு மாற்றமும் இல்லை. புலிக் கொடி என்பது தமிழர்களின் கொடி. அது தேசம் கடந்தது. தமிழர்களின் பண்பாட்டின் சின்னம் புலிக் கொடி.

ஆனால் தமிழீழத்தின் தேசியக் கொடியை நாடு கடந்த அரசு தன்னுடைய கொடியாக கொள்ள முடியாது. மக்கள் விரும்பினாலும் கூட நாடு கடந்த “அரசு” என்பதன் அடிப்படையில் மரபுகளும் உலகின் சட்டங்களும் அதை அனுமதிக்காது.

சோழ மன்னர்களும் தமது கொடியாக புலிக் கொடியைக் கொண்டிருந்தனர். வேறு சில மன்னர்களும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டிருந்தனர். தமிழீழ அரசும் தன்னுடைய நாட்டின் கொடியில் புலியை முக்கியமானதாக பொறித்திருந்தது. இந்தப் புலிக் கொடிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சோழர்களின் புலிக் கொடி பக்கவாட்டாக நிற்கின்ற புலியைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழீழத்தின் புலிக் கொடி உறுமிக் கொண்டு பாயும் புலியின் முகத்தைக் கொண்டிருக்கிறது.

அனைத்துமே புலிக் கொடிதான் என்றாலும், வேறுவேறு நாடுகள் என்பதனால் புலிக் கொடியின் தோற்றமும் வேறுவேறானதாக இருக்கின்றது.

22 அரபு நாடுகள் இருக்கின்றன. அனைத்திலும் அரேபிய மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அந்த நாடுகளுக்கு தேசியக் கொடிகள் இருக்கின்றன. அனைத்துமே வேறுவேறு தோற்றுங்களை உடையவை. சில கொடிகள் ஒத்த தன்மையை கொண்டவையாக இருப்பினும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு அரசும் தனித்துவமான கொடிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் அவுஸ்ரேலியாவில் குடியேறி அங்கே மண்ணின் மைந்தர்களை ஒடுக்கி விட்டு ஒரு புதிய அரசை அமைத்த பொழுது, அவுஸ்ரேலியாவிற்கு என்று தனியான கொடியையே உருவாக்கினார்கள். தமது பூர்வீகத்தையும், தமது நாட்டின் அரசராக இங்கிலாந்து அரசரை ஏற்றிருப்பதையும் குறிக்கும் பொருட்டு இங்கிலாந்தின் கொடியையும் அதன் மூலையில் பொறித்தார்கள். எப்படித்தான் இருந்தாலும் அவுஸ்ரேலிய அரசை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தனியான கொடியையே அந்த அரசுக்கு உருவாக்கினார்கள்.

இப்பொழுது நாம் அமைக்கவிருக்கின்ற நாடு கடந்த அரசும் தனித்துவம் மிக்க ஒரு அரசுதான். இந்த அரசு தனித்துவமான கொடியையும் அடையாளங்களையும் கொண்டிருப்பதுதான் மரபுகளுக்கும் உலகின் சட்டங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

தமிழீழப் புறநிலை அரசை அமைப்பதாக இருந்தால் தமிழீழத் தேசியக் கொடியே புறநிலை அரசின் உத்தியோகபூர்வமான கொடியாக இருக்கும். புறநிலை அரசு என்பது தமிழீழத்தில் இயங்கிய அதே அரசு வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து இயங்குவது. அந்த வகையில் அதன் கொடி மாறப் போவது இல்லை. ஆனால் நாம் “நாடு கடந்த அரசு” என்னும் புதிய வழிமுறை ஒன்றைய திட்டமிடுகின்றோம். தற்போதைய உலக ஒழுங்குக்கு இது ஏற்றதாக இருக்கும் என்றும் நம்புகின்றோம்.

புறநிலை அரசு வேறு, நாடு கடந்த அரசு வேறு என்பதை புரிந்து கொண்டால் இந்தக் கொடி பற்றிய சந்தேகங்கள் வராது. தமிழீழ அரசின் கொடியை புலம்பெயர் மக்கள் உருவாக்குகின்ற நாடு கடந்த அரசோ அல்லது வேறு கட்டமைப்புகளோ தமது உத்தியோகபூர்வமான கொடியாக கொள்ள முடியாது.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை ஆதரிப்பதையும், தமிழீழமே தமது தாய் நாடு என்பதை வெளிப்படுத்துவதையும், அந்த இலட்சியத்திற்காக போராடுவதையும் குறிக்கும் பொருட்டு தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதும், அதை உயர்த்திப் பிடிப்பதும் இயல்பான ஒரு விடயம். ஆனால் அதற்காக நாம் உருவாக்குகின்ற புது வகையான அரசு ஒன்றின் கொடியாக அதை பிரகடனப்படுத்த முடியாது.

நாடு கடந்த அரசின் கொடியிலும் புலி இடம் பெறலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் அது தமிழீழத் தேசியக் கொடியில் இருந்து வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக இருப்பதே சரியானது. வேண்டுமென்றால் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவுஸ்ரேலியக் கொடி போன்று, தமிழீழத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு கொடியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கலாம்.

நாடு கடந்த அரசுக்கு புதிய கொடி உருவாக்க வேண்டியதன் காரணம் பற்றி இம் முறை எழுதியிருப்பதை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

வி.சபேசன்

லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான்.

இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு பேப்பரில் இடம் பெற்று விட்டன. இந்திய எதிர்ப்புப் பரப்புரையை ஒரு பேப்பர் முன்னின்று நடத்துவது போன்று ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியிருக்கலாம்.

இதில் அப்படி ஒன்றும் தவறும் இல்லை. இந்தியா பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு வழங்குவது ஊடகங்களின் கடமை. இந்தியாவின் காலில் விழுந்தால் தமிழ் மக்களின் உரிமை கிடைத்து விடும் என்று நம்புகின்ற அரசியல் அறிவிலிகள் பல மட்டங்களில் காணப்படுகின்ற நிலையில் இது மிகவும் தேவையானது.

…………………………….

„இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தால்;, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா செல்வதற்கு விசா பெறுவது சிக்கலாகி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இப்படியான மனிதர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றியும்;, இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் சிக்குப்பட்டிருக்கும் பல இனங்களின் விடுதலை பற்றியும் பேசுகின்ற பொழுது தமது சுற்றுலா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதர்களும் எமக்குள் இருக்கின்றார்கள் என்பது வேதனையானது.

…………………………….

தமிழீழத்திற்கான ஆயதப் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று „இந்தியாவை மீறி தமிழீழத்தை எம்மால் அடைய முடியாது“ என்பது. ஆகவே தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்டு இந்தியா அனுமதிக்கின்ற ஒரு அரைகுறைத் தீர்வோடு தமிழர்களை இணங்கிப் போகும்படி இவர்கள் அறிவுறித்தினார்கள்.

அரைகுறைத் தீர்வுகள் தமிழினத்திற்கு நீண்ட கால நோக்கில் பலத்த அழிவையே கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்த விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். இப்பொழுதும் அப்பொழுதும் இந்தியாவை மீறி தமிழீழத்தை அமைப்பதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன.

இந்தியாவில் வெல்லப்பட முடியாத ஒரு படையணியை கட்டி எழுப்புவது என்பது அதில் ஒரு வழி. இதையே விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா தமிழீழத்தை அமைக்க விடாது என்பதிலும் ஒரு நேரத்தில் இந்தியாவோடு மோத வேண்டி வரும் என்பதில் தேசியத் தலைவர் தெளிவாகவே இருந்தார்.

முடிந்தவரை மோதலை தவிர்க்க முயல்வது என்பதன் அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களையும் அவர் செய்தார். ஆயினும் 87இல் இந்திய ஈழப் போர் மூண்டது. கரந்தடிப் போர் முறையில் சண்டையிட்டபடி ராஜதந்திர வழிகளையும் கையாண்டு அந்த நெருக்கடியில் இருந்து தமிழீழப் போராட்டத்தை தேசியத் தலைவர் காப்பாற்றினார்.

அதன் பின்பு நடைபெற்ற ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு நடவடிக்கையின் பயனாக இந்தியா ஒரு பத்தாண்டு காலம் தமிழீழப் போராட்டத்தில் தலையிடாமல் சற்றுத் தள்ளியே நின்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழப் விடுதலைப் புலிகளின் படைபலத்தை தேசியத் தலைவர் அதிகரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா மீண்டும் தலையிட்டு தமிழீழப் போராட்டத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கத் தொடங்கியது. ஓயாத அலைகள் மூன்றில் இந்தியாவின் தலையீட்டை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவோடு முடிந்தளவு நட்பாக போவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர். இந்தியாவால் வெல்லப்பட முடியாத பலத்தை அடையும் வரை இந்தியாவுடனான மோதலை தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளையும் கையாண்டனர். வெல்லப்பட முடியாத பலம் என்கின்ற இலக்கை அடைந்து விட்டால் இந்தியா வேறு வழியின்றி தமிழீழத்தை சகித்துக் கொள்ளும் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்திருக்கக் கூடும்

…………………………….

இன்றைக்கு இந்தியா சொந்தம் கொண்டாடும் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஒரு பகுதியை சீனா வைத்திருக்கிறது. இந்தியா வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவாவது இந்தியாவை விட பலமானது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா அளவிற்கு பலமானது அல்ல. அப்படியிருந்தும் பாகிஸ்தானுடனான போரில் தனக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை கணக்குப் போட்டு விட்டு இந்தியா வாயை மூடிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் காஸ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நின்று விடவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போராளிகளை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. மும்பை போன்ற இடங்களில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தானோடு போருக்குப் போகவில்லை.

இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.

இதைப் பற்றி பின்பு பார்ப்போம். இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். வெல்லுவது கடினம் என்றாலோ, போரில் தனக்கு ஈடு செய்ய முடியாத அழிவு வரும் என்றாலோ எதிரியை சகித்துக் கொண்டு இந்தியா பேசாது இருந்து விடும். தமிழீழ தேசத்தையும் வெல்லப்பட முடியாத ஒரு நாடாக விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றமும், தமிழீழப் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் இந்தியா காட்டிய உறுதியும் எமது இலக்கை நாம் அடைய முடியாதபடி செய்து விட்டது.

…………………………….

இந்தியாவை அனுசரித்தும் சமாளித்தும் குறுக்கால் ஓடி தமிழீழத்தை உருவாக்கும் எமது முயற்சி வெற்றியை தரவில்லை. மிகப் பெரிய அழிவுகளைத்தான் எமக்கு தந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் சிலர் இந்தியாவின் மனதை மாற்ற முடியும் என்று புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளியுறவு பற்றி வகுப்பெடுக்க முனைகின்றார்கள்.

சீனா சிறிலங்காவை பயன்படுத்தி இந்தியாவின் தென்பகுதியை அச்சுறுத்துமாம். ஆகவே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டுமாம் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் எழுதியும் கூறியும் வருகிறார்கள். இதனால் இந்தியாவின் மனது மாறி விடும் என்று நம்புகின்றார்கள். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காத ஒன்றை தாம் சிந்தித்து விட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவினை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையை பற்றி சிந்திக்காது, இந்தியாவை தமிழீழத்திற்கு ஆதரவாக மாற்றலாம் என்று நம்புவது மிகப் பெரும் ஏமாற்றத்தையே மீண்டும் கொடுக்கும்.

இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி தமிழீழத்தை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது இல்லை. அவர்கள் இந்தியா பற்றி தெளிவாகவே இருந்தார்கள். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி பலர் பலவிதமாகப் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி தோற்று பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தம்மை ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்பியதாக சிலர் கூறுகிறார்கள். இது மிகப் பெரிய தவறான கூற்று. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்படி நம்பியிருக்கவில்லை.

இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் பெரிதான மாற்றம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை என்பது விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயினும் விடுதலைப் புலிகள் காங்கிரஸ் கட்சி தோற்பதை விரும்பினார்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுவது போன்று அறைகூவலும் விடுத்தார்கள். ஆனால் இதற்கான காரணம் வேறு. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதன் மூலம் ஒரு வலுவற்ற ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்தியாவில் வலுவற்ற ஆட்சி உருவானால் அப்பொழுது ஏற்படும் குழப்பங்களை சமாளிப்பதற்கே இந்தியாவிற்கு நேரம் போதுமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கு துணியும் என்றும் அவர்கள் கணித்திருந்தார்கள். மேற்குலக நாடுகள் தலையிடுவதன் மூலம் அழிவுகளை தடுப்பதோடு ஒரு தற்காலிக ஓய்வையும் அமைதியையும் உருவாக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் நினைத்தார்கள். ஆனால் முன்பு இருந்ததை விட இந்;தியாவில் ஒரு வலுவான ஆட்சியே உருவானது. இதனால் மேற்குலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்னடித்தன.

…………………………….

மொத்தத்தில் இந்தியாவை அருகில் வைத்துக் கொண்டே அதைக் கையாள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தரவில்லை. எமது முதலாவது வழி முறை தோல்வியை தழுவி விட்டது. பலத்த அழிவையும் தந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ளாது மீண்டும் இந்தியாவை நம்பிக் கொண்டு யாராவது புறப்பட்டால் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தான் தெரிவிக்க முடியும்.

இப்பொழுது இரண்டாவது வழி பற்றி நாம் பேச வேண்டும். இரண்டாவது வழி என்பது இந்தியாவை இல்லாமல் செய்வதுதான். ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல நாடுகள் விருப்பத்தோடும் கட்டாயத்தோடும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் இந்தியா. தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து வடபகுதியில் உள்ள காஸ்மீர் வரை விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். ஒரிசாவில் இருந்து புதுடில்லிக்குப் போவதை “இந்தியாவிற்கு போகிறோம்” என்று சொல்கின்ற மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புதான் இந்தியா.

பீகாரில் இருந்து ஆந்திரா வரை மாவோயிச தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேறு இருக்கின்றது. இந்தியாத் துணைக் கண்டத்தின் பல காடுகளும் கிராமங்களும் இவர்களின் செல்வாக்கில்தான் இருக்கின்றன. சிறிலங்காப் படைகளின் முற்றுகை இறுக்கமடைந்திருந்த நிலையில் தேசியத் தலைவர் தப்பிச் செல்லக் கூடிய இடமாக மாவோயிச தீவிரவாதிகளின் காடுகள் சிலரால் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள்.

ஆயினும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் உள்ள போராளி இயக்கங்களோடு சரியான முறையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களின் காடுகளில் தமது தளங்களை உருவாக்கியருக்கவில்லை. இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், இந்தியாவை அதிகம் கோபப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையில் இவைகளை தவிர்த்து விட்டார்கள்.

இப்பொழுது நாம் விடுதலைப் புலிகள் செய்யத் தவறியவைகள் பற்றியும் பேச வேண்டும். இந்தியாவில் விடுதலைக்குப் போராடும் மக்களோடு இணைந்து வேலை செய்வது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழீழ தாகத்தை கைவிடாது விடுதலைக்கான வழிகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்.

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - லெப்.கேணல். நீலன்

ஆரையம்பதி மண்ணில் அவதரித்த நீலன்
ஆரையும் பகைக்காது அரவணைத்த நீலன்
வேரையே நம்பி நின்று விழுதான நீலன்
வீணரின் விருப்புக்கு விலை போகா நீலன்

ஆறும் அலைகடலும் அணையாகி நிற்கும்
ஆரையம்பதி மண்ணின் அசல்வீரன் நீ
நீறாகிப்; போனாலும் நிறைகாப்பேன் என்று
நீசர்க்கு வணங்காது நின்றுயிரை மாய்த்தான்

ஆளும் சிங்களமும் அயல்நாட்டார் அரசும்
ஆளார் இன்னென்று அலசித் தோற்றிருக்க
நாளும் பொழுதும் நாட்டுக்காய் உழைத்தவனை
நரிகள் சதிசெய்து நாசம் புரிந்ததுவே

தேனும் மீனும் தேட்டமுடை மண்ணாம்
தென்தமிழீழத்தின் தேச ஒளிர் விழக்காய்
தீனும் பொருளும் திருவென் றெண்ணாத
தீபம் தனையந்த தீயர் அணைத்தாரோ

கட்சி மாறென்ற கயமைக்கு மறுத்ததனால்
கையை முறித்தார்கள் காணார் பயனதனால்
பட்டினி கிடத்தி பதைக்க வைத்தார்கள்
பயந்தாய் அல்லன் நீ பலியாய் போனாயோ!

பெருமை சேர் தலைவன் பிரபாகரன் அண்ணன்
பிரபா அருமை அறிந்தாய் நீ அதனாற் சிறந்தாய் நீ
கருமை எல்லாம் கஸ்தூரி ஆகிடுமோ
எருமைகள் அறிந்திடுமா ஏந்தல் இவன் மகிமை

தலைவன் அவன் மட்டே தனி ஆள் வேறில்லை
மலையாம் அவன் முன்னே மண்ணாங்கட்டிக்கு
தலையான் சாய்ப்பேனோ தவறேன் என்கின்ற
நிலையாம் இலக்கோடு நின்றே உயிர் நீத்தாய்

வளர்த்த மாட்டுக்கு வந்தது ஒர் ஆசை
வளர்த்தோன் றனைக்குதறி வளயா உனில் அதனில்
வாலாட்டம் சொல்லாது விலையாய்ப்போகாத
வீரன் நினைக்கொன்றார்

கட்டியவள் பொட்டிழந்தாள் கன்றுகளும் நினையிழந்தார்
நட்டமது நினைச்சூழ்ந்த நால்வருக்கு மட்டுமல்ல
நாட்டுக்கே இழப்பாகும் நம் போர்க்கும் இழப்பாகும்

எமது மண்ணுக்காய் தமை ஈர்ந்த ஆரையம்பதி மாவீரர் பட்டியல்

NAMES REAL NAMES DATE OF BIRTH DATE OF MARTYR
Lt.Col.Neelan ( Senior Member ) Seenithamby Somanathan 28.05.1966 12.04.2004
Black Tiger. Major.Anthaman Vadivel Senthilkumar 17.07.1978 16.08.1999
Lt.Sutharshan Dr.Poopalapillai Sivagurunathan 13.05.1964 28.06.1987
Major.Ahaventhan Ponnampalam Thiyagarajah 28.05.78 20.12.2000
Major.Viduthalai / Sinthujan Sinnathamby Theyvaranjan 07.08.1971 27.02.1996
Major.Nalan or Dinesh Sinnathamby Jeyakaran 15.02.1969 03.03.1996
Major.Maran Sellathamby Suthaharan 10.06.1966 06.10.1996
Captain.Nakkeeran Thiyagarajah Sasikaran 17.09.1970 11.11.1993
Riyas or Aruna Thiyagarajah Satheeswaran 14.07.1968 13.09.1989
Vivae Pernando Uthayaraj Unknown Unknown
Captain. Luxman Thiyagarajah Varatharajan 16.11.1967 03.09.1991
2nd Lt. Mihunan / Sathees Nagalingam Thamilselvan 21.04.1972 21.06.1992
Lt.Sanjeevan / Shamini Kunjithamby Thayaparan 08.03.1969 21.09.1992
Thaarakan / Kennedy Pakiyarajah Nadeswaran 08.08.1971 11.11.1992
Lt. Iranjan / Sulakshan Antony Ganesh 06.06.1967 02.02.1993
2nd Lt. Vetri / Mayavan Sivapalasuntharam Vijajaraj 06.06.1975 06.02.1993
Lathangan Krishnapillai Uthayakumar 25.03.1977 26.04.1993
Lt.Varnan Seenithamby Mahendran 05.10.1951 26.07.1993
Manojan Sivachandran Yoganathan 10.09.1978 29.09.1993
Piremkumar Paramakuddy Karunakaran 11.07.1972 11.11.1993
Supankee Miss.Sinnathamby Priya 08.01.1976 11.11.1993
Lt. Mathan Kathirkarmar Paramanantham 12.06.1972 17.10.1994
Captain.Marahathan / Thileep Muththusami Chandrakumar 27.11.1969 10.12.1994
Murukananthan / Thamilarasan Elayathamby Kamalavaran 12.06.1978 28.12.1994
Alaguraj Somasuntharan Rajanikanth 14.11.1979 29.05.1995
Lt. Mano / Manokaran Kulanthaivel Premanathan 01.01.1975 06.06.1995
Lt.Navalan / Pirapa Sinnathamby Rajanayagam 08.08.1968 02.10.1995
2nd Lt. Theiventhiran / Nivethan Kulanthaivel Sunthararajan 27.08.1977 23.10.1995
2nd Lt. Sathiyasayee Kandaityah Selvarajah 29.12.1975 28.10.1995
Isaiyalan Ramachandran Vasanthakumar Unknown 29.10.1995
Rajamaran Suntharalingam Sureshkaran 10.01.1977 14.11.1995
Captain. Gowshihan Kanchakuddi Sivanathan 25.05.1970 27.11.1995
Pandithurai Mahalingam Suhitharan 24.06.1976 08.06.1997
Captain. Palakrishnan Sivasambu Sekaran 30.10.1974 01.08.1997
2nd Lt.Kenthiran / Anuraj Vinayagamoorthy Chandramohan 01.01.1979 02.09.1997
2nd Lt. Kajamohan Samithamby Vinotharajan 23.02.1980 05.10.1997
2nd Lt. Manokar Perinparajah Rajanikanth 19.12.1981 13.10.1997
Lt.Ulagavan Thambirajah Priyathas 08.01.1978 21.11.1997
2nd Lt.Kunakuntran / Premkumar Thamotharam Ahilan 01.11.1978 04.12.1997
Nesan Somasuntharanm Nesarajah Unknown 24.02.1991
Nisanthan Konamalai Kengatharan 01.07.1965 13.07.1986
Alvin Sivapalan Karunakaran 26.09.1974 21.07.1991
Alip / Kesavan Moorthathamby Uthayakumar 30.11.1965 15.10.1986
Jeyam / Sathees Sellathamby Mohanachandran 24.07.1968 01.12.1986
Lt.Dayan Sinnathurai Theyvalingam 11.06.1965 04.05.1987
2nd Lt.Gopi Nagamani Aanatharajah 09.10.1957 28.06.1987
2nd Lt.Vivey Samithamby Uthayachandran 06.04.1968 22.07.1987
2nd Lt.Kala Ponnampalam Sathanantharathinam 19.06.1961 19.04.1988
Lt.Mano Kathamuththu Sinnarajah 28.01.1958 01.06.1988
2nd Lt.Sankili / Sanjeevi Kasupathi Vadivel Unknown 03.07.1988
Nobert Nallaiyah Sripala 21.01.1969 03.07.1988
Lt.Anitha Miss.Thambirajah Inthirathevi 19.09.1970 28.11.1988
Murali Peethamparam Nanthakumar 07.10.1969 27.12.1988
2nd Lt.Arujun Sinnathamby Thayalan 30.12.1967 27.12.1988
2nd Lt.Ajith Subramaniyam Thevarajah 30.12.1967 Unknown
Thayan Sinnathamby Sakthivadivel 06.04.1971 27.12.1988
Easwaran 01.05.1972 16.07.1989
Subramaniyam Subramaniyam Keethakaran 01.01.1968 14.08.1989
Murali Krishnapillai Krishnamurali 28.03.1971 16.06.1990
Saravanan Unknown 16.06.1990
Asokan Unknown 16.06.1990
Lt.Anura Miss.Thambyiah Gowry 13.02.1972 05.08.1990
Piriyan Ponnaiyah Thayalan 19.08.1970 13.08.1990
Rubathan Arumugam Kamalraj 23.02.1982 26.05.1998
Capt.Maruthavanan / Siraivanan Mohanasuntharam Vasanthamohan 20.10.1977 21.06.1998
2nd Lt.Jeyapiriyan Konalingam Dineshwaran 18.09.1980 01.07.1998
Capt.Regan / Kunaregan Kiruparetnam Surenthiran 09.09.1978 10.09.1998
Lt.Perumathan / Aanathan Kanthasami Jegatheeswaran 02.10.1973 27.09.1998
Maharanthan Visvalingam Ragularajah 03.05.1981 27.09.1998
Ananthaa Miss.Subramaniyam Nirmala 15.11.1983 27.09.1998
2nd Lt.Arulnithi Elayathamby Kumar 06.04.1978 27.09.1998
2nd Lt.Rupalingam Sinnaiyah Amirthalingam 30.03.1973 27.09.1998
Lt.Jeevasuthan Nallathamby Thangavadivel 06.05.1982 18.04.2000
2nd Lt.Pavalapiriyan Thillaipodi Alagaiyah 22.04.1979 21.04.2000
2nd Lt.Regavaran Kanagasavai Kukenthiran 27.12.1984 20.12.2000
2nd Lt.Kanna / Keerhigan Nanthakumar Karunakaran 22.06.1974 22.02.1996
Arunan Selvanayagam Mohanachandiran 24.04.1968 12.11.1996
Capt.Arulkumar Ponnuthurai Varathan 05.10.1970 12.11.1996
Capt.Sathurukkan / Vimalan Thomsan Theyvathasan 29.10.1977 04.08.1999
Gowshigan Kanagasavai Unknown 1986 / 87
Ragu Unknown 1986

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் மூத்த போராளியான ரம்போ பிரசாத் என்று போராளிகளாலும் தமிழ் மக்களாலும் விரும்பப்பட்ட கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார் அவர்களின் வரலாறு தமிழீழ மண்ணில் எழிதில் அழிந்து விடாது. இவர் லெப்.கேணல். நீலனுடன் இந்திய மண்ணில் 5வது பயிற்சிப் பாசறையில் தனது பயிற்சியை நிறைவு செய்தார். இவரது போர்த் திறன் பற்றி கேணல். கிட்டு லெப்.கேணல். குமரப்பா அருணா அண்ணன் அவர்களால் பலமுறை பாராட்டப் பட்டிருக்கிறார். இருந்தும் ஒரு சிலரின் நயவஞ்சகத்தால் அமைப்பை விட்டு வெளியேறிய இவ் உயரிய போராளி எதிரியின் கையில் சிக்குண்டு சிதைக்கப்பட்டான். எம் மண்ணுக்காகவும் எம் மண்ணின் விடிவுக்காகவும் புறப்பட்ட இவ் வேங்கை வெங்களம் ஆடி அடங்கியது. இவரது குடும்பமே தமிழீழ விடுதலைக்காக கொடுத்த விலை அதிகம். இவரது இளைய சகோதரர் முரளி 16.06.1990 அன்று களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலில் மாவீரரானார்.

இவ் வீரனுக்கு எமது மக்களின் வீரவணக்கம்…