வியாழன், 11 மார்ச், 2010

மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!

[தமிழக நேரம் : March 8th, 2010 at 14:47]




வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

இதுவரைகாலமும் அந்தப் பகுதி மக்களால் புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டுவந்தது. குறிப்பிட்ட நினைவுக்கல்லே வன்னியின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கலாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப்பெற்றமையால்த்தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் சிதைக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்றின் ஊடகர் ஒருவர் ஊடாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் தமிழர் தாயகப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் துயிலிடங்களை அழித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து வன்னி மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளனர்.
மீண்டும் போருக்கு செல்வோம் -கண்மணி.


சீனத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட மார்க்சிய ஆசான் தோழர் மாவோ வெறும் போராளி அல்ல. ஒரு தலைச்சிறந்த கவிஞர், இலக்கியவாதி. எப்பொழுதும் கலகலப்பாக மக்களை வைத்திருப்பதில் மகா திறமை வாய்ந்தவர். நமது தேசியத் தலைவரும் சற்றேறக்குறைய அதேபோன்றே குணம் வாய்ந்தவராக இருந்தார். பேசும் போதெல்லாம் சிரிக்க சிரிக்க பேசும் ஒரு ஆற்றல் அந்த மாபெரும் போராளியின் மனதில் சம்மனம் இட்டு அமர்ந்திருந்தது. எதை எதிர்கொள்ளும்போதும் துணிவோடும், திட்டமிட்டும், தளராமலும் செய்யும் தேசிய தலைவர் ஒரு குழந்தைத் தனமான மனம் கொண்டவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குள்ளும் இலக்கியம் கரைபுரண்டு ஓடியது. அவர் உலகிலுள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து படித்தார். அந்த தேடல்தான் அவரை இந்த உலக மக்களை எல்லாம் தேட வைத்தது. நாம் தோழர் மாவோ பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா? தோழர் மாவோ, கதைகள், கவிதைகள், நாடகங்கள் மூலம் சீன விவசாய கம்யூனிஸ்ட் தோழர்களை தம்முடைய சொல்லாற்றலால் ஒருங்கிணைத்து தட்டி எழுப்பினார். ஒருமுறை தோழர் மாவோ தமது விவசாய தோழர்களிடம் ஒரு கதை கூறினார்.

''சீனாவில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலைக்குப் பின்னால் அழகிய, ஆராவாரத்தோடு ஓடும் ஒரு நதி மிகச் சிறப்பாக, ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி நீரின் தேவை கிராமத்திற்கு மிக மிக அவசியமானதாக இருந்தபோதும், அந்த நதியை கிராமத்திற்குள் விடாமல் மலை தடுத்து நின்றது. ஒரு முதியவர் எப்படியாகிலும் அந்த மலையை தகர்த்து நதிநீரை கிராமத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று செயல்படத் தொடங்கினார்.

தமது கிராமத்திற்கு தடையாக இருக்கும் அந்த மலையை தகர்த்தெறிய, தாம் முயற்சி செய்ய துவங்கினார். தம் கிராமத்தின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் அந்த மலையை உளியால் தினம்தினம் உடைக்க தொடங்கினார். காலையில் செல்லும் அந்த முதியவர் இரவு வரை தமது பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். இதை போகும், வரும் வழிப்போக்கர்கள் நின்று நிதானித்து அவரைப் பார்த்து கேலிப் பேசிவிட்டு செல்வது நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. சிலர் அந்த முதியவரிடம், கிழவா! நீ என்ன செய்கிறாய்? என்று நக்கலாக கேட்பதும், அதற்கு அந்த கிழவர் அமைதியாக இருப்பதும் சில நேரங்களில் பதிலளிப்பதுமாக இருந்தார். ஒவ்வொருமுறையும் அவர் சொல்வார், ''நான் இந்த மலையை உடைத்து நதியை என் கிராமத்திற்கு கொண்டுவரப் போகிறேன்" என்று.

இது அவரிடம் கேள்வி கேட்கும் பார்வையாளர்களுக்கு பரிகாசமாய் தோன்றியது. அவர்கள் அந்த முதியவரின் வார்த்தையைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். கிழவா! மலை எவ்வளவு பெரியது. இதை உடைக்கும்வரை நீ உயிரோடு இருப்பாயா? என்று அந்த முதியவரைப் பார்த்து அவர்கள் பெரும் அறிவாளிகள் போல் கேள்வியினை தொடுத்தார்கள். அதற்கு அந்த முதியவர் சொன்னார், ''நான் உயிரோடு இருக்கும்வரை இந்த மலையை உடைப்பேன், எனக்குப் பிறகு என் மகன் உடைப்பான். அவனுக்குப் பின் என் பேரனும், கொள்ளுப்பேரனும் தொடர்வார்கள். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாங்கள் வென்றேத் தீருவோம். ஒருநாள் இந்த மலை உடைத்தெறியப்படும்" என்று நெஞ்சுயர்த்தி, கம்பீரமாய் பதிலுரைத்தார்.

இதை வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதைகள், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். முதியவரின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் உள்ளார்ந்து நேசித்து அந்த மலையை தேவதைகள் அப்படியே தூக்கி வேறு இடத்தில் நிறுத்தினார்கள். நதி ஆராவாரத்தோடு அந்த கிராமத்திற்குள் புதுப்புனலாய் பாயத் தொடங்கியது".

கதையை இங்கு நிறுத்திய மாவோ இந்த கிராமிய கதையில் வரும் கிழவன் செய்யும் வேலையைத் தான் நாம் செய்கிறோம் என்று பதிலுரைத்தார். நெடிய மலைகள் பொடியாகும். இருமார்ந்த சிகரங்கள் தகரும். புதுவெள்ளம் பாய்ந்து வரும். இந்த மகத்தான உண்மையை மிக எளிய கதையால் புரிய வைத்த மாவோ நம்மிடம் சொல்கிறார், நமக்கான நாடு அமையப்போகிறது. அந்த பணியை தேசிய தலைவர் துவக்கி வைத்தார். அது அவருடைய தலைமையிலேயே நிகழும். அந்த தேவதைகளைப் போல காலம் தமிழீழத்தை மீட்டு, தமிழர் வாழ்விலே புதுப்புனலாய், பொன்னருவியாய், தேன்தென்றலாய், தெம்மாங்குப்பாடலாய், நம் உள்ளங்களை தாலாட்டப் போகிறது. அந்த காலம் மிக மிக அருகில் தான் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை எட்ட நாம் நமது கடந்தகால நிகழ்வுகளை பின்னோட்டமாய் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இந்த நேரமெல்லாம் நம்முடைய துயரின் எல்லை கடந்திருந்தது. எமது மக்கள் உடல் சிதறி ஆங்காங்கே இரைந்து கிடந்தார்கள். இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதாரப்பூர்வமாக செய்தியாக வந்திருக்கிறது. ஐ.நா.வில் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி நிறைந்த இத்தகவலை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், ''சிங்கள பேரினவாத அரசு, உலக நாடுகளை தமது சதி நிறைந்த திட்டத்தால் தவறாக வழிநடத்தியது. உலக நாடுகளிடம் சிங்கள பாசிச அரசு பெரும் பொய்களை கட்டவிழ்த்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்". 14 வருடங்களாக ஐ.நா. சபையில் பணியாற்றிய கோர்டன் வைஸ் தமது பதவியை விட்டு விலகியப் பின் அளித்த நேர்க்காணலில், நமது நெஞ்சங்களை பதறச் செய்யும் செய்திகளால் நிரப்பியிருக்கிறார். இறுதிக்கட்ட சமர் என்று சிங்கள பாசிச அரசு அறிவித்து நடத்திய இன அழித்தொழிப்பில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டதை அவர் உறுதி செய்திருக்கிறார்.

சிங்கள பேரினவாத அரசும், பார்ப்பனிய இந்திய அரசும் உலக பேராதிக்க அரசுகளும் ஒன்றிணைந்து அழித்தொழித்த தமிழின மக்களின் தொகை 10,000 தொடங்கி 40,000 வரை இருக்கும் என அவர் கூறும் செய்தி நம்மை நெஞ்சை உறையச் செய்கிறது.

''இந்தப்போரின் கடைசி நேரத்தில் சற்றேறக்குறைய 3 லட்சம் பொதுமக்களும், போராளிகளும் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் அளவே உள்ள சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டனர் என தெரிவித்த அவர், போரின் போது புலிகளை அடிப்பதற்காக சிறிய மற்றும் பலம் வாய்ந்த கருவிகள் தாக்கும் எல்லைக்குள்ளேயே அவர்கள் முடக்கப்பட்டார்கள் என்றும் இந்தநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உடல் சிதறி இறந்தார்கள்" எனவும் அவர் கூறுகிறார்.

இந்த தகவல் எந்த நிலையிலும் போராளிகளிடமோ, அல்லது பொதுமக்களிடம் இருந்தோ நாம் பெறவில்லை என்றும், இது போர் நடந்தபோது அங்கே இருந்த பார்வையாளர்கள் கொடுத்த தகவல்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு அனைத்துலக நாடுகளை தமது தவறான வழிக்காட்டுதலால் நடத்திச் சென்றது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட ஒரு பேரழிவை அம்மக்கள் சந்தித்தார்கள். ஆனால் திட்டமிட்டே இறந்த மக்களின் தொகையை மிகக் குறைத்து சிங்கள இனவாத அரசு கூறுகிறது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது நமக்கு அதிர்ச்சிக்குரிய தகவல் மட்டுமல்ல, நம்மை எழுச்சிக் கொள்ள வைக்கும் தகவலும் கூட. நம்மை முடக்கிப்போடும் தகவல் அல்ல. நம்மை முன்னேறத் தூண்டும் தகவலாக இது இருக்கிறது. காரணம் நாம் மாவோ கதையில் கேட்டதைப் போல உளி கொண்டு தொடர்ந்து செதுக்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம். இது, நமக்கான நாடு அமையும்வரை மாறப்போவது கிடையாது.

எம்மின மக்களுக்கு எமது எண்ணங்களையும், எழுச்சி நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து தருவதிலே நாம் களத்திலிருக்கப்போகிறோம். எந்த நிலையிலும் விழமாட்டோம் என்கின்ற உயரிய லட்சியம் அவர்களுக்குள் எழுச்சியோடு வளர வேண்டும். இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கும் எம்மின உறவுகளுக்கெல்லாம் லியூயாசி என்கின்ற சீனத்துக் கவிஞர் எழுதிய இந்த கவிதை வரிகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றோம்.

என் இதயம் உண்மையில் நிரம்பிவழிகிறது.
கடந்த காலத்திற்காக வருந்தமாட்டேன்.
ஓ! தெற்கிலிருந்தும் வெற்றி செய்தி வருகிறது.
என் ஊரும், பழக்கமான ஏரியும் தான்
என் உறைவிடம், ஒரு தவப்பீடம்.
என்னை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்றாலும்
நெடுநாள் அங்கே தங்கமாட்டேன்.
வீணாகி விட்டன என் வாழ்நாட்கள்
மெத்த வருந்துகிறேன் அதற்காக.

ஆம்! எம் இனிய உறவுகளே! நாம் நமது சொந்த மண்ணில் தலைசாய்த்து, அந்த காற்று பாடும் தாலாட்டை கேட்டு கண்ணுறங்கும் நாள்தான் நம்முடைய வாழ்நாளின் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். எப்போதும் தோற்றுப்போக நாம் பிறக்கவில்லை. வெற்றிப் பெறவே பிறந்திருக்கிறோம். அதற்காக நம்மை நாம் அர்ப்பணிக்கப்போகிறோம். ஆற்றலோடு களம் அமைக்கப் போகிறோம். எதற்கும் அஞ்சாமல் சமர் செய்யப் போகிறோம். ஏனெனில் நமக்கான ஒரு இலட்சியம் உண்டு.

நாம் எல்லோருக்குமான ஒரு கனவு உண்டு. அது தமிழீழம். நம் சொந்த நாடு. நம் தாய்நாடு. தாய் மடியிலே உண்டு, உறங்கி எழுவதிலிருக்கும் உண்மை மகிழ்ச்சி எந்நிலையிலும் அந்நிய மடியில் நமக்கு கிடைக்கப் போவதில்லை. அதற்காக எந்நிலையிலும் நம்மை நாம் தயாராய் வைத்துக் கொள்வோம். அதற்காக நம்மை நாம் தயாரிப்போம். நமக்கான ஒரு நாடு அமையும்போது என்ன செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிடுவோம். காரணம் நமது பயணம் இதோ விரைவில் முடிய இருக்கிறது. அந்த முடிவு நம்மை முடிவில்லா மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம். தோழர் மாவோ சொல்லியதைப் போல,

நாம் மீண்டும் எழுவோம்.
ரத்தத்தை துடைத்துக் கொள்வோம்.
வீழ்ந்த தோழர்களை புதைப்போம்.
மீண்டும் போருக்கு செல்வோம்.
தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!
by Admin » Tue Aug 11, 2009 6:39 pm

ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…

“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.

ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.

இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

தமிழில் ராணுவக் கல்வி!

தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.



இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.

இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…



இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.



புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.



வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:

[img width="200" height="200"]http://www.eelamhomeland.com/forum/postsimage/MM/44d.jpg[/img]

தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.

இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.

அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.
மற்றுமொரு அதிர்ச்சி தகவல்
11
06
2009
மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

ஈழதேசம்.கொம் நிருபர்

இந்திய ராணுவம் இலங்கை காடுகளில் விடுதலைப் புலிகளை தேடும் பணியில் உள்ளனர். இலங்கை ராணுவத்தின் வழிகாட்டலில் இந்திய ராணுவம் காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி வருகின்றனர். கைது செய்து….சட்டத்தின் முன் போர்க் கைதியாக நிறுத்த அல்ல …..கொன்று ஒழிப்பதற்காக …..

கடைசி 72 மணி நேர யுத்தம் பற்றிய பல செய்திகள் உலக பத்திரிக்கைகள் மற்றும் இந்திய ஊடகவியலாளர்களும் ஒரு மர்ம நாவல் எழுதுவதை போல் பல உண்மைகளையும் அங்கு நடைபெற்ற கொடூர யுத்த மீறல்களை மறைத்து விட்டு ராஜபக்க்ஷே, சோனியா மனம் குளிரும் படி செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டனர்.

உண்மையில் நடைபெற்றது என்ன ?

முள்ளிவாய்க்கால் முழுவதும் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது மூன்று அடுக்கு ராணுவ வியூகம் இந்திய ராணுவத்தால் திட்டமிடப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்… 50 ஆயிரம் மக்களை கொன்று ..யுத்த விதிமீறல்களை செய்து, …. போரில் தோற்கும் நிலையில் இருக்கும் பொழுது சரணடைவது என்பது பொதுவான யுத்த விதிகள்.. சங்க காலம் தொட்டு இன்று வரை..

முதல் ராணுவ வளையத்தில் சிங்கள ராணுவம் புலிகளுடன் யுத்தம் நடத்தினர். …
இரண்டாவது இந்திய ராணுவ வளையத்தில்….. கடற் புலிகள் மற்றும் காயம் அடைந்த புலிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறும் பொழுது அவர்களை கொன்று அழிப்பது….
மூன்றாவது இந்திய ராணுவ வளையத்தில் …. யுத்தம் நடைபெறும் பொழுது அங்கிருந்து வெளியேறும் ( மற்ற நாடுகளில் தஞ்சம் அடையும் ) மக்களை தடுத்து கொல்வது, இதுதான் கடைசி மாதங்களில் நடந்த துயரம் …. இதற்க்கு சான்றாக இன்று வரை இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் அகதிகள் வெளியேறாமல் போன துயர சம்பவம் நடந்தது….இவை எந்த யுத்த நாடுகளிலும் நடைபெறாத மிகப்பெரிய போர்க் குற்றம் …..

இவ்வளவும் இந்திய ஆளும் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு செய்த மகாபாதக செயல்… யுத்தம் முடிந்தவுடன் …சிங்கள ராணுவம் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தற்பொழுது இந்திய ராணுவம் முழு அளவில் அங்கிருக்கும்….அங்கிருந்து வெளியேறிய மக்களை …..வவுனியாவிற்கு மற்றும் வெவ்வேறான முகாம்களுக்கு வலுக்கட்டையமாக கொண்டு அடைக்கும் பணியில் ….இந்திய ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன…

.இந்த மாபாதக செயல்கள் போதாதுஎன்று ….தற்பொழுது இலங்கை காட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கொன்று அழிப்பதற்கு முழு மூச்சுடன் இந்திய பார்ப்பன ஆளும் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது….

இவையெல்லாம் ஆளும் போலி….. தமிழின தலைவராக தானே பட்டம் சூட்டிக் கொண்ட MNC கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்…. தற்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கிறார்கள் ஈழத் தமிழனுக்கு விரைவில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று…..இவர்கள் விவாதித்து முடிந்தவுடன் ராஜபக்க்ஷே சமஉரிமை கொடுத்து விடுவார் என்று மக்களிடம் சொல்வார்கள்… தனது ஊடகங்கள் வழியாக….
இவற்றையும் உலக சமூகமும்….ஐ.நாவும் ஒப்புக் கொண்டு விடுவார்கள்…


ஈழதேசம்


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இந்திய உளவுதுறை ‘ரா’ அதிர்ச்சி… கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல…
11
06
2009
இந்திய உளவுதுறை ‘ரா’ அதிர்ச்சி… கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல… கை ரேகை ஒப்பீடு நிரூபணம்!

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் “கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது. தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்துவந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, “பிரபாகரன் போர்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…” என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது! ·

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் ‘நெற்றிக்கண்’ புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு: ·

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவதத்hல் படுகொலை செய்யப்பட்டார். ஆப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை ‘முரசொலி’யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்! ·

புpரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! ‘மாவீரன்’ பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து… ·

‘மாவீரன்’ பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது! · · கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன் – சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு (ஊஊP) மாற்றப்படுகின்றது! · பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிஸ்னர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு யுனுஐ- சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க- அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை யுனுஐ சண்முகம் பதிவு செய்தார்! · இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது! ·

1986ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசண்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்! ·

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிஸ்னர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலிஸ் கமிஸ்னர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிஸார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்! ·

1982ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்…. · 1986ல் சென்னை போலிஸ் கமிஸ்னர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்… தமிழக ‘க்யூ’ பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது ‘க்யூ’ பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்! ·

சுpங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஐpனல் பிரபாகரன்தானா என்பதை உறதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது! · சுரூயுறு அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். \

இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை – இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ3 லட்சம். · சுரூயுறு இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே18ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்;ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்! ·

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுனர்களுன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே19ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுனர்களின் துனையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை! ·

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான சுரூயுறு அமைப்பின் தென் இந்திய அணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்தள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது, இந்தியா திரும்பினார்! ·

இது தொடர்பான விரிவான அறிக்ரகையை ‘ரா’ டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்! · இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது! · கொல்லப்பட்டது ‘மாவீரன்’ பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் அகியுள்ளது!


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும், மனிதாபிமானக் குரல்கள் உரத்து ஒலிக்கட்டும் – விடுதலைப் புலிகள்
9
06
2009
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது.


இச்சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு அறிக்கை:தமிழீழ மக்களாகிய நாம் இலங்கைத் தீவில் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கில் எமது பாரம்பரியத் தாயகத்தின் இறைமை பொருந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது அரசியல் இலக்கை நோக்கி ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடன் போராடி வருகின்ற மக்கள் நாம்.

எமது உரிமைப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமைதிமுறையில், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டதில் நாம் கண்ட பட்டறிவு சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை வென்றெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் இலகுவில் முன்வரப்போவதில்லை என்பதே. இந்தப் பட்டறிவின் விளைவே தந்தை செல்வா அவர்களை இறைமையுள்ள தமிழீழமே எமது அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என்று தீர்மானிக்கவைத்தது. இதற்கான ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆணையை நிலைநாட்டியவரும் அவரே.

இதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவந்துள்ள தேசிய விடுதலைக்கான ஆயுதப் போரில் இந்த மக்கள் ஆணையை எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தேசியத்தலைவருமான மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முழுமூச்சாக முன்னெடுத்து தமிழீழ அரசை எமது கண்முன்னே நிறுவி, அதன் விடுதலைக்கான போராட்டத்தை ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கூடாக வலுப்படுத்தி, தமிழீழ மக்களின் ஆணையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார்.

தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும்.

எமது தாயக மண் எதிரியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் தமிழீழத் தேசியத்தைப் பிரதிபலித்து அதன் இறைமைக்கும் சுதந்திரத்துக்குமான அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாகப் பெரும்பங்காற்றவேண்டிய நிலையில் உலகத் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது வரலாற்றுக் கடமையின் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் செயலாற்றவேண்டும்.

தாயகத்தில் சொல்லொணாத் துயருறும் எமது உடன்பிறப்புக்களின் துயர்துடைக்கும் மனிதாபிமானக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கும், உலக மனிதாபிமானத்தின் கண்களை எமது மக்களின் இன்னல்களை நோக்கித் திருப்புவதற்கும் முழுமூச்சாக காலதாமதமின்றி உழைக்கவேண்டிய உடனடிக்கடமை எம்முன்னால் உள்ளது.

மனிதாபிமானக் கட்டமைப்புக்களையும், பரப்புரை வேலைகளையும் உரிய முறையில் நெறிப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்படவேண்டிய காலம் இது.

இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பினூடான ஜனநாயகக் கட்டமைப்புக்களைப் பரிணமிக்கச்செய்யும் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் கிளைகள் இயங்கும் நாடுகளில் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் தயாராகிவருகின்றது.

போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது என்ற சிந்தனைக்கமைய, தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் புலம்பெயர் மக்களின் அரசியற் பங்களிப்பினூடாகக் கூர்ப்படைந்துசெல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்ந்தவர்களாக, இதயசுத்தியுடன் ஒருமித்த மக்கள் பங்களிப்போடு சங்கமித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்த ஓர் அனைத்துலகச் சக்தியாய் முன்னெழுவோம்.

இதற்கு முன்னோடியாக, அந்தந்த நாட்டிற்கேயுரிய அரசியற் சிறப்பியல்புகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பங்களிப்பை உறுதிசெய்கின்ற நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பைப் பரிணமிக்கச் செய்யும் பணியை மேற்கொள்ளுவதற்கும் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்குமான வேலைத்திட்டங்களை அந்தந்த நாட்டுக்கிளைகள் முன்னெடுக்கும்.

இந்த ஒழுங்குகளுக்கு தேசியப்பற்றுக்கொண்ட அனைவரையும் பாகுபாடின்றி இதய சுத்தியோடு பங்குகொண்டு ஊக்குவிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இத் தருணத்தில் வேண்டிநிற்கிறது.

இந்த வேலைத் திட்டங்களுக்கான கருத்துப் பரிமாறல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் கிளைப் பொறுப்பாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
பொ.செம்மலை
தாயக ஒருங்கிணைப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
பெங்களூரில் சீமானின் வீரம் செறிந்த உரை
8
06
2009
விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3




மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா? – சீமான் ஆவேசம்
8
06
2009
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” நேற்று ஞாயிறு காலை நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர் பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.
மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.

ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த தமிழக ஓவியர் நடராசா மரணம்
8
06
2009


தமிழீழ தேசிய புலிச்சின்னம் வரைந்து கொடுத்த தமிழக ஓவியர் நடராசா மரணம்

புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா “தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்’ என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார்.


இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத்துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே இலட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்” என்று முனகியபடியே இருக்கிறார். இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்” என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம்.
அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம், “”இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்ல, புன்முறுவலோடு மெது வாகத் தலையசைத்தார் பெரியவர். உடனே அந்த நண்பர் “”இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்து, மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு” என்று வருத்தப்பட்டார்.

அய்யா…’ என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில், “”தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச் சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்” என்று அடிக்குரலில் பேசினார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார். பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன்.

என்னோட புல்லட்டத் தர்றேன், நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாரு, “எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள இராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும். எங்கட மக்களுக்குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா… சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனால, துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்திய, மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக் கோம்’னாரு.

போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூட, அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சு, அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு. நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு.

இந்திய தேசியப் படையின் பிரிவு களுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும், அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சு, திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு. என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனா, வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும். இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல.

தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில… சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துடணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி “உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்’னு அவரே அறுத்தாரு. எதிரிக்கு சிம்ம சொப்ப னமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும்.

ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்ப, “அண்ணா… குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படி யிருந்தா நல்லதுன்னு சொல்வாங்கள்ல…’ என்று உற்சாகமாகச் சொல்ல… நானோ, “இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக’ என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன். தம்பியோ “அடப் போங்கண்ணா… என் அப்பா, என் அம்மா, என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடு, என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா… சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு’ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.

கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்” என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட, இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம், “”சற்று ஓய்வு எடுத்துக்கங்க…” என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டு, கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும்.

ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு” என்று கண்கலங்கினார். மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள… “அய்யா அழைக்கிறாரா?’ என்றோம். எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ… “”அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா…” என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள்.

தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந்திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க… வாசகர்களின் சார்பில் அம் மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்
6
06
2009
இலங்கையின் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பு காரியாலயம் தெரிவித்துள்ளது


அதேநேரம், இளைஞர்களும் யுவதிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிலையத்தின் தகவல்படி, வன்னியில் இருந்து 276 ஆயிரத்து 785 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் இந்தக் கணக்கெடுப்பு தகவல் வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் ஐ.நா. மன்றம் வெளியிட்ட கணக்கெடுப்பு விபரத்தின்படி 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல! பிரபாகரனின் மகன்களில் 2 சார்ள்ஸ் அன்ரனிக்கள்?
6
06
2009
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.



சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருக்கிறார்களாம்!

நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”.

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியும், அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்ற செய்திதான் அது.

சார்ள்ஸ் அன்ரனி பிணமாக காட்சியளிக்கும் வீடியோ படங்கள், டி.வி. சனல்களில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? என்று புருவங்களை உயர்த்து முன் அடுத்த கட்டமாக பிரபாகரனே கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

பிரபாகரன் ஒரு அசாதாரணமான மனிதர் என்று வர்ணிக்கப்படுபவர். கடந்த 33 ஆண்டுகளாக அவர் நடத்தி வரும் நீண்ட, நெடிய போராட்டத்தில் யார் கண்ணிலும் அகப்படாதவர்.

திட்டங்களை தீட்டி, கன கச்சிதமாக முடிக்கும் இந்த அமைப்பு பற்றி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது.

தற்போது சார்ள்ஸ் அன்ரனி மரணமடைந்ததாக சொல்லப்படுவதற்கும், பிரபாகரனின் “பிளாஷ் பேக்” கதைக்கும் பின்னணியில் சில “பகீர்” தகவல்கள் ஒழிந்து கிடக்கின்றன.

1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரன்- மதிவதனி தம்பதியினர் குடியிருந்தனர். இந்த தம்பதியருக்கு முதலில் பிறந்தவர்தான் சார்ள்ஸ் அன்ரனி.

இதே சமயத்தில் பிரபாகரனின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதில் விசேஷம் என்ன தெரியுமா? அந்த குழந்தைக்கும் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயர் சூட்டப்பட்டது தான்!

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்களும் ஒன்றாகவே பிரபாகரன் வீட்டில் வளர்ந்தார்கள். இது பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருப்பதை எப்போதும், யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இரு குடும்பத்தினருக்கும் கட்டளையிட்டிருந்தார் பிரபாகரன்.

இருவருமே வளர்ந்து, வாட்ட சாட்டமான வாலிபர்களானார்கள். இருவரும் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு விசேஷமான தாக்குதல் பயிற்சிகளை கற்றனர்.

இதன் பின்னர் லண்டனில் உள்ள மிகப் பிரபலமான கல்லூரி ஒன்றில் விமானம் பற்றிய ஏரோ நாட்டிகல் என்ஜினீயரிங் படப்படிப்பு படித்துள்ளனர்.

இதையடுத்து தனது உறவினர் மகனான சார்ள்ஸ் அன்ரனியை பிரபாகரன் தன்னுடன் இலங்கையில் வைத்துக்கொண்டார். தனது சொந்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்கச் செய்தார்.

இந்த நிலையில் தான் தன்னுடன் இருந்த சார்ள்ஸ் அன்ரனியை வான்படை தளபதியாக்கி போர்க்களத்தில் குதிக்கச் செய்தார்.

பலவிதமான போர் பயிற்சிகளை பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி 2 முறை விமானத்தில் பறந்து சென்று கொழும்பு நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவத்தை மிரட்டியவர்.

அந்த சார்ள்ஸ் அன்ரனியைத்தான் இலங்கை இராணுவம் கடந்த மாதம் சுட்டுக்கொன்றது.

அப்படியானால் நிஜமான சார்ள்ஸ் அன்ரனி? அவரது புகைப்படத்தை கூட இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் பத்திரமாக இருக்கிறார் என்கிறது புதிய தகவல்கள்.

அமெரிக்காவின் நேசநாடு ஒன்றில் பிரபாகரனும், சார்ள்ஸ் அன்ரனியும் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி விடுதலைப்புலிகளின் வீர வணக்க நாள் அன்று அவர்கள் இருவரும் உலக டி.வி.க்களில் தோன்றுவார்கள் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட இன்னும் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் ஆவேசத்துடன் போருக்கு காத்திருக்கிறார்கள். அவர்களின் புதிய தலைவராக தனது வாரிசு சார்ள்ஸ் அன்ரனியை அன்றைய தினம் பிரபாகரன் அறிவிப்பார் என்கின்றனர்.

தனக்கு வயதாகி விட்டதால் சில முக்கிய பணிகளை மட்டும் தான் மேற்கொள்ளப்போவதாக அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய தலைவர் ஒருவர் அவர்களுக்கு தக்க பாதுகாப்புகளை வழங்கி வருவதாக கூறுகின்றனர்.

ஒரு நீண்ட, நெடிய விடுதலைப்போரில் என்ன வெல்லாம் நடக்கும்? எத்தகைய நெருக்கடி சூழ்நிலைகள் ஏற்படும் என்பது போன்ற விஷயங்களை பிரபாகரன் நன்றாக அறிந்தவர்.எதையும் தீர்க்கமாக அறிந்து செயல்படுபவர்.

எனவே, அவர் விஷயத்தில் “சுட்டுக்கொலை” என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கிற விஷயமல்ல! அவர் இலங்கையில் இல்லாததை தெரிந்து கொண்ட சிங்கள அரசு நடத்திய நாடகம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உலகமே மிக ஆவலாக காத்திருக்க தொடங்கியிருக்கிறது, வருகிற 27-11-2009 அன்று தொலைக்காட்சிகளை காண!

ஒரு வேளை, அது மீண்டும் தமிழ் ஈழப்போர் ஏற்படும் நாளாகவும் இருக்கலாம்!

இத்தகவலை மாலைமலர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
கடைசி நாட்களில் 3000 முதல் 5000 வரையான மக்களே பலியாகினர்; இலங்கை அரசு: ஆசிய மனித உரிமை கண்காணிப்பு அதிகாரி பிரட் அடம்ஸ் மறுப்பு
6
06
2009
அரசு அறிவித்த போரற்ற பகுதியில், போரின் கடைசி நாட்களில் மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. என்று கூறியுள்ளார் இலங்கை பேரிடர் நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் ரஜீவ விஜேசிங்க.
அவர் கூறுகையில், மொத்தமே 3000 முதல் 5000 அப்பாவி மக்கள்தான் கடைசி நாட்களில் பலியாகியிருப்பார்கள். 20,000 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. அதேபோல ஏப்ரல் மாத கடைசியில் 7000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுவதிலும் உண்மை இல்லை. என்று இலங்கை அரசு பொயப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.கடைசி நாட்களில் 5000 பேர் கொல்லப்பட்டதற்கும் கூட இராணுவம் காரணம் அல்ல. அவர்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதே இந்த மரணத்திற்குக் காரணம்.
ஐ.நா. அறிக்கை கூறுவதை நம்ப முடியாது. காரணம், அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் இல்லை.

இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று ஜனாதிபதியே அறிவித்திருந்தார். நானும் இராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது.

81 எம்எம் மோர்ட்டர்களை மட்டுமே இராணுவம் பயன்படுத்தியது. ஆனால் விடுதலைப் புலிகளோ டாங்குகளை பயன்படுத்தி தப்பி ஓட முயன்ற தமிழர்களைக் கொன்றனர் என்றார் விஜேசிங்க.

ஆனால் விஜேசிங்கவின் இக்கூற்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய மனித உரிமை கண்காணிப்பு என்ற அமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் மறுத்துள்ளார்.

ஆயுதங்களில் கனரக ஆயுதம் என்பதை நிர்ணயிக்க எந்தவித அளவுகோலும் இல்லை. போரின் முடிவின்போது, மிகக் குறுகிய பரப்பளவுக்குள் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் முடக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் அது பேரழிவுக்கே வழி வகுக்கும்.

புலிகள் வசம் இருந்த பகுதியிலிருந்து போரற்ற பகுதிக்கு போகுமாறு அரசு மக்களை வற்புறுத்தியது. அதை நம்பி மக்கள் அங்கு பெரும் திரளாக சென்றனர். ஆனால் அங்கு வந்தவர்களையும் இராணுவம் கொடூரமாக தாக்கியது.

81 எம்எம் மோர்ட்டர் தவிர வேறு பல கனரக ஆயுதங்களையும் இராணுவம் பயன்படுத்தியது மறுக்க முடியாத உண்மையாகும். இதை அவர்கள் திரும்பத் திரும்ப மறுத்து வருகிறார்கள். இலங்கைப் படையினர் கடுமையான போர்க் குற்றத்தை செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்கிறார் பிரட் அடம்ஸ்.


மறுமொழிகள் : Leave a Comment »

வகைகள் : Uncategorized
கப்டன் அலி கப்பல் கடற்படையினரால் தடுத்து வைப்பு
6
06
2009
கப்டன் அலி கப்பல் கடற்படையினரால் தடுத்து வைப்பு;அரசின் அனுமதியுடன் பொருட்களை வழங்கவுள்ளவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு

வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த இக்கப்பலை பாணந்துறை கடற்பரப்புக்கு மேற்கே 150 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து நேற்றுக் காலை 4 மணியளவில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மேர்சி மிஷன் டூ வன்னி(வணங்கா மண்) எனும் பதாகையைத் தாங்கி சிரிய நாட்டுத் தேசியக் கொடியுடன் வந்த இக்கப்பலில் பயணம் செய்த 15 வெளிநாட்டு மாலுமிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வரும் இக்கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்பட்டன. இக்கப்பலில் பயணித்தவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை இலங்கை அரசின் உரிய அனுமதி பெற்று தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடக மேற்கொண்டுள்ளதாக வணங்கா மண் ஏற்பாட்டு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை

புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி புறப்பட்ட வணங்கா மண் கப்பல் நேற்று (04-06-2009) அதிகாலை இலங்கைக்கருகில் சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உணவும், மருந்துகளும் மட்டுமே இருப்பதனை உறுதி செய்த பின்னர் சிறிலங்கா கடற்படையினரால் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கடற்படையின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களை சிறிலங்கா அரசின் உரிய அனுமதி பெற்று, தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்கொண்டுள்ளோம் என்பதனை அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகிறோம்.