புதன், 22 செப்டம்பர், 2010

ஈழத்தின் போரியல் வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்

ஈழத்தின் போரியல் வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்
தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்) அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது.

தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர்

13.02.1985, அன்று கொக்கிளாயில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிறிலங்கா இராணுவத்தின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் தமிழீழ போரியல் வரலாற்றில் காலடி எடுத்து வைத்த பால்ராஜ். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய முயற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக முந்திரிகைக் குளம், கொக்கைச்சான் குளம், ஆகிய இடங்களில் ஏற்படவிருந்த சிங்களக் குடியேற்றங்களையும், படை நகர்வுகளையும் தடுத்து நிறுத்தி தனது போரியல் யுத்தியினை வெளிப்படுத்தினார்.

தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றில் இருந்த காலத்தில் அவரையும் போராளிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் வன்னியில் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினை நிறுவி மேஜர்.பசீலன், லெப்.கேணல்.நவம், லெப்.கேணல்.கிறேஸி, கரும்புலி லெப்.கேணல்.போர்க், ஆகியோருடன் இணைந்து மிகத்திறமையாகச் செயற்பட்டு வன்னியி;ல் இந்திய இராணுவத்தின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து தனது திறமையை நிலைநாட்டி தேசியத்தலைவரின் நம்பிக்கையையும் றெ;றதோடு இந்திய இராணுவத்தையும் வியப்பில் ஆழ்த்தியவர் பால்ராஜ்.

இந்திய இராணுவம் வெளியேறிய போது வன்னிக்கான ஒருங்கிணைப்புத் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றப்பட்டு வன்னியில் தடைக்கற்களாக இருந்த கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி, முகாம்களைத் தகர்ததோடல்லாமல் முல்லைத்தீவுத் தளத்தை விரிவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட கடற்காற்று போன்ற இராணுவ நடவெடிக்கையை தடுத்த சமருக்குத் தலமை வகித்தவர். மாங்குளம் முகாமிலேயே முதன்முதலில் 50 கலிபர் இயந்திரத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஜூலை யில் இடம்பெற்ற ஆகாயக் கடல்வெளிச்சமரில் (பலவேகய 01) இலங்கையில் இரண்டு இராணுவம் இருக்கின்றது. என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியதில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து முக்கிய பங்காற்றியவர். தென்முனையினூடாக ஊடுருவி சிறப்பான தாக்குதலை ஒருங்கிணைத்து நடாத்தி மரபுவழிப் படையணியாக மாற்றுவதில் பெரும்பங்கெடுத்தவர். இதன்மூலம் இவர் உலக இராணுவ விற்பணர்கள் வியக்கத்தக்க வகையில் புதிய புதிய யுத்திகளை அறிமுகப்படுத்தி தனது போரியல் திறமையை மரபுவழியாக மாற்றுவதில் வெற்றிகண்டார். புலிகள் இயக்கத்தில் புதிய யுத்த தந்திரோபாயங்களை அறிமுகப்படுத்தினார்.

இதன் வெளிப்பாடாக உருவான தேசியத்தலைவரின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்து 1991இல். முதலாவது சிறப்புப் படையணியான சாள்ஸ் அன்ரனிப் படையணியை உருவாக்கி அதன் முதலாவது சிறப்புத்தளபதியாக 1993 வரை செயற்பட்டார். 1991 களில் வவுனியா மாவட்டத்தில் நடந்த “வன்னிவிக்கிரம” படை நடவெடிக்கையை முறியடித்து தமிழீழப் போராட்டத்தில் முதன்முதலான மரபுவழி நேரடித்தாக்குதலை நடாத்தி உலங்குவான ஊர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தி தான் ஒரு தலைசிறந்த போரியல் ஆசான் என நிலை நிறுத்தினார். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய அனைத்துப் போரியல் வியூகங்களுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. 1995 – 1997 வரை மீண்டும் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாக விளங்கி அதனை பல உத்திகளும் உடைய சிறந்த படையணியாக கட்டியெழுப்பினார்.
அதன்பின் மணலாறில் நடத்தப்பட்ட “மின்னல்” படை நடவெடிக்கையை சிறப்பாக முறியடித்தார். அத்துடன் 1993இல் கிளாலியில் இடம் பெற்ற யாழ்தேவி நடவெடிக்கையில் தலமையேற்றிருந்த லெப்.கேணல்.நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய உடனடியாக அங்கு சென்று ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபத்pயாகச் தலமையேற்று அக்களம் தமக்குச் சார்பாக இல்லாதிருந்த போதும் குறுகிய நேரத்தில் எதிரிகளை முறியடித்து எதிரிக்கு பல இழப்புக்களை ஏற்படுத்தி சர்வதேச பேரியல் நிபுணர்களை அதிரவைத்தார். அச்சண்டையில் காலில் ஊனமுற்ற நிலையிலும் தொடந்து நடைப்பயணங்களை மேற்கொண்டு பல நூறு தால்குதல்களை நெறிப்படுத்தினார். அத்துடன் பல ஆயிரம் ஆயிரம் புலிகளையும் உருவாக்கி அவர்களுக்கு போரியல் கலை தொடர்பாக பல பயிற்ச்சிகளையும் வழங்கினார்.

இந்த இடத்தில் பிரபல இராணுவ ஆய்வாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்கள் 2003 இல் வீரகேசரிக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் அமெரிக்க இராணுவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிரிகேடியர் பால்ராஜ். அவர்கள் தலமையேற்று நடாத்திய யாழ்தேவி நடவெடிக்கை, குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை, ஆகிய சண்டைகளின் வழிநடத்தல்கள் ஆகியவை ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உலகில் குறுகிய நேரத்தில் படைநடவெடிக்கை ஒன்றை முறியத்த போரியல் வீரர்களில் பால்ராஜ் அவர்களும் ஒருவர் என அவ்ஆய்வுக்கட்டுரை தெரிவித்ததாக சிவராம் அவர்கள் எழுதி அன்றைய தினமே பால்ராஜூக்கு புகழாரம் சூட்டினார்.

அதன்பின் இடம் பெற்ற முன்னேறிப்பாய்தல் நடவெடிக்கையையும் தலமையேற்று முறியடித்து தலைவர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் முல்லைத்தீவு தளம் தாக்கியழித்த நிகழ்வில் ஒருங்கிணைப்புத் தளபதியாகவும். பின் இடம்பெற்ற சத்ஜெய நடவெடிக்கையில் நேரடியாக களத்தில் வழிநடத்தினார். பின்னர் தாண்டிக்குளம், பெரியமடு, ஆகிய இடங்களில் இடம்பெற்ற செய் அல்லது செத்துமடி என்னும் ஊடறுப்புத் தாக்குதல் இவரது போரியல் திறமைக்குக் கட்டிளம் கூறி நிற்கின்றன.

பொதுவாக தமிழ|Pழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த ஊடறுப்புத் தாக்குதல் அனைத்தையும் தலமையேற்று சிறப்பாக வழிநடத்தியவர். சிங்கள தேசம் எந்த ஊடறுப்புத் தாக்குதல் நடந்தாலும் அது பால்ராஜின் தலைமையில் நடந்தது அல்லது பால்ராஜ் அந்த இடத்தில் நிற்கின்றது என்று கூறம் அளவுக்கு அவரது போரியல் வல்லமை பாராட்டத்தக்கது. இலங்கையிலேயே தலைசிறந்த பேரியல் வல்லுணன் பால்ராஜ் என்றால் அது மிகையாகாது. தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பராட்டையும் பெற்றிருந்தவர் இவர்.

அதன்பின் நடந்த ஜயசிக்குறூய் இராணுவ நடவெடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டளைத் தளபதியாகவும் விளங்கினார். பின்னர் ஓயாதஅலைகள் :03 இடம்பெற்றபோது அதில் பெரும்பங்காற்றியதோடு மட்டுமல்ல ஆனையிறவுத்தளம் மீட்புக்காக விடுதலைப்புலிகள் ஒரு தரையிறக்க மூலம் தமக்குச் சாதகமில்லாத எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடாத்தி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் ஊடறுப்புச் சமரும் நடாத்தி அங்கு 34 நாட்கள் அங்கு எதுவித வழங்கல்களும் இல்லாமல் எதிரியின் தளங்களுக்குள்ளேயே நின்று புலிகள் ஆனையிறவை மீட்டு பளை வழியாக இத்தாவிலில் வந்து கைகுலுக்கும் வரை நின்று புலிகளின் போரியல் வியூகத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் நிகழ்த்தி ஆணையிறவு வெற்றியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். பால்ராஜ் தீச்சுவாலையின் ஒருங்கிணைப்புத் தளபத்pயாகவும் இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் வரை போர் அரங்கில் கட்டளைத்தளபத்pயாக விளங்கியவர்.

சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகர் பால்ராஜ். உதாதரணமாக பூநகரி, யாழ்தேவி, ஆகாயக்கடல் வெளிச்சமர் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவர் முதுபெரும் போரியல் ஆசான் மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனிதனும் கூட போராளிகளுடன் அன்பாக பழகும் சுபாவம் மூலம் அனைத்துப் போராளிகளையும் அன்பால் கட்டிப் போட்டவர். அவர் களமுனையில் நிற்பது அறிந்தால் போராளிகள் உறுதியுடனும் உத்வேகத்துடனும் போராடுவார்கள். அடேல் பாலசிங்கம் அவர்கள் கூட பால்ராஜ் அவர்களை தனது சுதந்திர வேட்கை நூலில் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட முதுபெரும் போரியல் ஆசானை நாம் இழந்திருப்பது மாபெரும் துயரமே இதனால் சிங்கள தேசம் மிகவும் மகிழ்ந்திருக்கின்றது. இப்படிப்பட்ட சரித்திர நாயகனுக்கு தலைதாழ்ந்த இறுதிப் பிரியாவிடையினை வழங்கி மன ஆறுதல் அடைவோம்.

பிரிகேடியர் பால்ராஜ்

பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மே 20, 2008 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்.

மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான்.
அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் ”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த இராணுவத்தை புலோப்பளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்.

அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு இராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ இராணுவ வரலாறுகளைப் படித்திருக்கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங்களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமையுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள்.

சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற்குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு இராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ... என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கிலமும் கலந்து உடைக்கிறார். ”பயப்படாதீர்கள் பால்ராஜ்... “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்' சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போதேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த இராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் இராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?” என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான இராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்' சண்டையை “ஹாலிவுட்' திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாகவோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க்கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.
அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்' சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன். கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி இராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 இராணுவத்தினர், வடமேற்கில் பளை இராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 இராணுவத்தினருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 இராணுவத்தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயுதங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்டவெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் “ப', “ட' வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் “குடாரப்பு-பாக்ஸ் சண்டை” என்கிறார்கள்... அப்படி “ப' “ட' வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து A9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறுரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளிகள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 இராணுவத்தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள்-3ன் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: “”திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை”. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார்.

எளிய மனிதனாய், சாரம் கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். ”சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே...?” என்றேன். சிரித்தார். ”பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட்டால் போர்க்களத்தில் சுகம்” என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பிலேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதி வைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

“இத்தாவில்”, “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்' சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்” என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

”மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி “பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வத்திராயன் -குடாரப்பு பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா' என்றார். (”ரெக்கி' என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வத்திராயன்,குடாரப்பு பகுதிக்கு இராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். “கவனமா பார்த்து வா பால்ராஜ்... யாழ்ப்பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்'. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ”.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் 3 நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். “”பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ' என்றார். “”நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோதனைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ A9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீரனென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து 9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியிலிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்” என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளிகளையும் தளபதி பால்ராஜையும் தாளையடி-குடாரப்பு- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும் போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். “”இறங்கேக்கெயே கடும் சண்டை... சக்கை அடி அடிச்சான்... நாங்கள் மெதுவா நகர்ந்து வத்திராயனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத்தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை... வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்... விமானத்தாலெ அடிப்பான்... டாங்கு கொண்டு அடிப்பான்... எறிகணை அடிப்பான்...”

“”என்ட ராசா... பழைய தமிழ் இலக்கியங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், “இன்டு போய் நாளெ வா' என்டு... அதுபோலத்தான் வத்திராயன் சண்டையும். வத்திராயன் இண்டைக்கு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப்பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள்ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்... நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்குகளெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த்திருப்பிங்கதானே... அப்பிடித்தான் சண்டை நடந்தது.”

“”ரெண்டுநாள்... எட்டுநாள்... பத்துநாள்... சப்ளை துப்புரவா இல்லாத நிலை... கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது... சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்... என்ட ராசா... சண்டையென்டா இதுதான் சண்டை...” -அப்படியொரு ரசனையுடன் வத்திராயன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வத்திராயனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் A9 நெடுஞ்சாலையை இடைமறித்தார்கள். பல்லாயிரம் இராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள இராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். A9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதியையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப்பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் குடாரப்பில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

பிரபாகரனும், பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபாகரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால்ராஜையே பார்த்தவர்... ”என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக்கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு “வாக்மேன்' (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போதைய இராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக்கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென்னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்குமென்ற அச்சத்தில் பலாலி இராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் இராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். ”வேசி மகன்களே... 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? த்தூ...” இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் ”ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக் கூட சமாளிச்சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது” -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். “”உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வெண்டுட்டெ பால்ராஜ்” என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் 1-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் 2-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி இராணுவ முகாமைத் துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனையிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட “அக்னிஹேலா' பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ், 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார். பணமும் மனமுடைய தமிழர் எவரேனும் இம்மாவீரனை திரையில் பதிவு செய்வீர்களா?

படைத்துறையின் பாடப்புத்தகம் பால்ராஜ் இழப்பினை முன்வைத்து சில பதிவுகள்

படைத்துறையின் பாடப்புத்தகம் பால்ராஜ் இழப்பினை முன்வைத்து சில பதிவுகள்
படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம்.

ஆனால், பால்ராஜின் இழப்பை தமக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பார்க்கும் தமிழ் மக்களில், ஒரு பகுதியினர் அது எமது போராட்டத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவும் நோக்கி நொந்து கொள்கிறார்கள் என்று அண்மையில் பால்ராஜ் நினைவு நிகழ்வில் சந்தித்த நண்பர் ஒருவரின் கேள்வி மூலமாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

எனது நண்பர் கொண்டுள்ள இந்த கவலையின் நியாயப்பாட்டை விரிவாக நோக்கும் முன் பால்ராஜை பற்றிய ஒரு பார்வை.

ஈழமண் மீது போர் தொடுக்கும் எதிரி எவனுக்கும் வயிற்றில் புளிகரைக்கும் சொல் ~பால்ராஜ்|. பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு பல முனைகளில் முன்னேற முயலும் இராணுவத்திருக்கு, பால்ராஜின் படைகள் எங்கு நிற்கின்றன என்று அறிந்து கொள்வதுதான் முதல் வேலையாவும் பின்னர், பால்ராஜன் படைகளை தவிர்த்து வேறு முனைகளை உடைத்துக்கொண்டே சண்டையிடுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது என்று பால்ராஜின் பாசறையில் பயின்ற போராளி ஒருவன் பெருமையுடன் கூறினான்.

பால்ராஜ் என்பவன் சிங்களப் படைத்தளபதிகள் போல கொழும்பில் இருந்து கொண்டே கப்டன், மேஜர், லெப்ரினன்ட் கேணல் என்ற பதவிநிலைகளை கடந்து வந்தவன் அல்லன். ஒவ்வொரு களத்திலும் எதிரியை புரட்டி எடுத்து, அவனது திட்டங்களை துவம்சம் செய்து, எத்தனையோ விழுப்புண்களை அடைந்துதான் இத்தனை பெரிய தளபதியாக வளர்ச்சி பெற்றான். போர்க்களத்தையே தனது வதிவிடமாகக் கொண்டவன் அவன்.

'ஜெயசிக்குறு" படை நடவடிக்கைக்கு முன்னர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் பெரும் எடுப்பிலான நகர்வு முயற்சியொன்றை முன்னெடுத்திருந்தது. இதனை இருமுனைகளால் எதிர்கொண்ட புலிகள், கண்டி வீதிக்கு கிழக்காக ஒரு அணியையும் மேற்காக மற்றைய அணியையும் நிறுத்தி எதிர்ச்சமரில் ஈடுபட்டனர். இந்த இரு அணிகளில் பால்ராஜ் தலைமையிலான அணி எங்கு நிற்கின்றது என்பதை வானலைகளை ஒற்றுக்கேட்டு அறிந்துகொண்ட இராணுவம், அந்தப்பிரதேசத்தை விட்டுவிட்டு மற்றைய முனையாலேயே தாக்குதலை மேற்கொண்டது.

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவரது தலைமையின் கீழ் சண்டையிட்ட போராளி ஒருவர், பால்ராஜ் அண்ணா களத்தில் நின்றால் அங்கு தமது பருப்பு வேகாது என்ற பயம் இராணுவத்தினருக்கு மட்டுமல்ல அவர்களை வழிநடத்தி கூட்டி வரும் தளபதிகளுக்கும் தெரியும் என்றார்.

'எந்த ஒரு கட்டத்திலும் பதற்றப்படாமல் திட்டங்களை செயற்படுத்தும் திறமை என்பது பால்ராஜ் அண்ணா தலைவரிடமிருந்து படித்த மிகப்பெரிய பாடம். எதிரி எம் படைகளை முற்றாக தனது முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டாலும் கூட பதற்றப்படாமல், அணிகளை ஒருங்கிணைந்து, தனது திட்டத்தை செவ்வனே முன்னெடுத்து, சாதுரியமாக எதிரியின் கண்ணில் மண்தூவும் வித்தை பால்ராஜ் அண்ணா சண்டைகளிலும் காண்பிக்கும் சாகச விளையாட்டு.

'தாம் போட்ட திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போனவுடன், மாற்றுத்திட்டத்தை உடனடியாக வகுக்க முடியாமல் எமது வலையில் வீழ்ந்த எத்தனையோ சிங்கள தளபதிகளிலிருந்து பால்ராஜ் அண்ணா விலகி நிற்பது இந்த இடத்தில்தான். களநிலைமைகளுக்கு ஏற்ப திட்டங்களை முன்னெடுப்பதும் தலைவரின் நெறிப்படுத்தலை நேர்த்தியாக செயற்படுத்துவதும் அவர்பால் வியக்க வைக்கும் ஆற்றல்கள். அவரது போரியல் அனுபவமும் ஒவ்வொரு போராளியினதும் திறமையை குறிப்பாக அறிந்து வைத்திருக்கும் பக்குவப்பட்ட படைத்துறை அறிவும்தான் எமது வெற்றிகள் பலவற்றுக்கும் பலமான அடித்தளமாக அமைந்தன.

'களமுனையில் கடமையிலிருக்கும் போராளிகளை தினமும் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து நிலவரங்களை மதிப்பீடு செய்வதென்பது பால்ராஜ் அண்ணனின் அன்றாட கடமைகளில் ஒன்று.

'ஒவ்வொரு போராளியினதும் திறமைகளை அறிந்து அவற்றை தலைவரிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குரிய பணிகளை ஓதுக்குவதில் பால்ராஜ் அண்ணனின் பங்கு மகத்தானது" - என்று பால்ராஜின் பெருமை பற்றி அடுக்கிச்சென்றார் இன்னொரு போராளி.

இத்தகைய ஒரு தானைத்தளபதியை இன்று தமிழினம் இழந்திருக்கிறது. உண்மை. ஆனால், தமிழர்களின் போராட்டத்துக்கு இது ஒரு இழப்பா என்ற எனது நண்பரின் கேள்விக்கு வருவோம்.

அவரது கேள்விக்கு விடையை, அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வில் பேசிய அவுஸ்திரேலிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் நித்தியகீர்த்தியின் பேச்சுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

'தனிமனித இழப்புக்கள் எமது தமிழீழப் பயணத்துக்கு ஒருபோதும் தடையாக அமையாது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் எமது போராட்டம் தொடரும். பிரிகேடியர் பால்ராஜின் இந்த எண்ணத்துக்கு செல்வடிவம் கொடுப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி" - என்று நித்தியகீர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையை, இழப்புக்களால் துவண்டு போயுள்ள எம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டம் எத்தனையோ பல சாதனை வீரர்களை இழந்திருக்கிறது. எதிரியின் சதிவலையில் சிக்கி பல தளபதிகள் வீரச்சாவை தழுவியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தமிழினம் துவண்டு போயிருந்தால் இன்று சர்வதேசமே அங்கீகரிக்குமளவுக்கு எமது போராட்டம் இவ்வளவு தூரம் பரிணமித்திருக்காது.

இழப்புக்களால் மனம் உடைந்துபோயுள்ள இந்த மக்களின் மனநிலை, அன்று தனது உற்ற நண்பன் சீலன் வீரச்சாவடைந்த போது தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்டிருந்தால் எமது விடுதலைப் போராட்டம் இவ்வளவு தடைகளை கடந்திருக்குமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த இழப்புக்களின் பின்னர் விடுதலைப் புலிகள் படைத்த வீர வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அன்று எதிரியால் ஊடுருவித்தாக்கி படுகொலை செய்யப்பட்டதால் புலிகளின் வான்படை படுத்து விடவில்லை. அனுராதபுரத்திலும் சிங்களத்தின் தலைநகரிலும் வான் வழியால் வந்து குண்டுவீசுமளவுக்கு இன்று புதுவீச்சையடைந்துள்ளது.

யாழ். மக்களின் செல்லப்பிள்ளையான மன்னார், யாழ். மாவட்டங்களின் முன்னாள் தளபதி ராதாவின் இழப்பு உயிரைப்பிசையும் உணர்ச்சி மிக்கதுதான். ஆனால், அவரது பெயரிலான விமான எதிர்ப்புப் படையணிதான் இன்று சிங்களப் படைகளின் உயிர்குடிக்கும் வல்லூறுகளை சுட்டுவீழ்த்தி கூறுபோடுகின்றன.

வன்னிக் காட்டுப்பகுதியால் தலைவரின் செய்தியுடன் வந்துகொண்டிருந்த மூத்த உறுப்பினர் ஜொனியை சதிசெய்து கொன்றார்கள். தலைவருடன் பேசி ஒரு தீர்வைப்பெறலாம் என இந்தியாவிலிருந்து கிட்டு கொடுத்த உறுதிமொழியை கேட்டுவிட்டு, இங்கு வன்னி காட்டுக்குள் சதிவலையை பின்னி சாதனை படைத்ததாக எண்ணினார்கள். எதிரி இன்றுவரை அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறான். ஜொனியின் பெயரில் வடிவமைக்கப்பட்ட மிதிவெடியால் அன்று மணலாறு காட்டுப்பகுதிக்குள் இந்திய இராணுவத்தை காலடி எடுத்து வைக்கவில்லை. இன்று அதன் பிந்தைய வடிவங்கள் முகமாலையில் இராணுவத்தின் கால்களை எண்ண வைத்திருக்கின்றன.

இம்ரான் - பாண்டியன் படையணி, மாலதி படையணி, சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, குட்டிசிறி மோட்டார் பீரங்கிப் படையணி, விக்டர் கவச எதிர்ப்பு அணி, கிட்டு பீரங்கிப் படையணி என்று தரையிலும் கடலிலும் எண்ணிக்கொண்டே போகலாம்.

சாவை தழுவிக்கொண்ட சாதனையாளர்களின் கனவுகளை சுமந்து சக போராளிகள் தமது வீரத்தால் நனவாக்கிக்கொள்வதுதான் தமிழினத்தின் வரலாறு. அவ்வாறான ஒரு இழப்புத்தான் இன்று பிரிகேடியர் பால்ராஜினுடையதும் என்பதை தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும்.

எண்பதுகளில் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய சாதனைத் தளபதி கேணல் கிட்டு. அப்போது பால்ராஜ் அவர்கள் புலிகள் அமைப்பில் இளநிலை போராளியாக இருந்தார். ஆனால் 90 இல் மாங்குளம் முகாம் தாக்கியழிப்பு, 96 இல் முல்லைத்தீவு முகாம் தாக்கியழிப்பு ஆகியவற்றின் பின்னர்தான் பால்ராஜ் என்றால் யார் என்றும் 2000 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடாரப்பு தரையிறக்கத்தின் பின்னர்தான் பால்ராஜ் என்னவெல்லாம் செய்வார் என்று எமக்கு மட்டுமல்ல எதிரிக்கும் தெரியவந்தது.

அதுபோலவே, தலைவனின் பாசறையில் இன்று எத்தனையோ பால்ராஜ்கள் எதிரியைப் புரட்டி எடுப்பதற்கு காத்திருக்கின்றனர். அவர்களின் வீரம் செறிவடையப்போகும் களம் எதுவென்று எதிரியே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

தமிழினம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இருபதினாயிரம் மாவீரர்களின் தியாகத் தீயின் முன் சத்திய வேள்வியாக கொழுந்து விட்டெரியும் எமது போராட்டம், தனிமனித இழப்புக்களால் நின்று விடப்போவதில்லை. தலைவர் பிரபாகரனின் பெருவெற்றியே அதுதான்.

எத்தனையோ படையணிகள், எத்தனையோ தளபதிகள் என தமிழீழ இராணுவம் இன்று இந்தப் போராட்டத்தை எத்தனை சந்ததிக்கும் தாங்கிச் செல்லக்கூடிய வகையில் தலைவரால் கட்டமைக்கப்பட்டு விட்டது.

இந்த சுதந்திர தாகம் கொண்ட தேசத்தின் பயணத்தில் எந்த தடை வரினும் அதனை எதிர்கொள்ளக்கூடிய - வளம்மிக்க - எழுச்சி உணர்வு மிக்க - சமுதாயமாக எமது மக்களும் சிலிர்த்தெழ வேண்டும். அந்த எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமே எமது விடுதலையின் ஆன்ம பலமும் ஆகும். நன்றி: தமிழ் நாதம்

[ Leave a comment ] [ No comments ] [ ]

# Posted on Tuesday, 07 July 2009 at 8:32 PM

வீரர்கள் மதிக்கும் வீரன்

வீரர்கள் மதிக்கும் வீரன்
அது 1984 ஆம் ஆண்டு.

செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.

அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர்.

விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர்.

லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும்.

செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர்.

நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும். உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில்.

செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம்.

பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள்;; தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத ஒரு பதுங்கித் தாக்குதல்.

சுதாகரிக்கவோ.... நிதானிக்கவோ முடியாத அளவுக்கு; கடுமையான தாக்குதல். பெரும் எதிர்பார்க்கையோடு பயணித்த் அந்தப் புதிய போராளிகளை; எதிரி ஒவ்வொருவராகச் சரித்து வீழ்த்தினான். விடுதலைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியிலேயே சந்தித்த பெரும் இடர்; அந்தத் தாக்குதலில் தப்பிப்பிழைப்பதென்பதே பெரும் கெட்டித்தனமான் அதிஸ்டவசமான செயல்.

வீழ்ந்தவர்கள் பிணங்களாகச் சரிய உயிரோடு அதிலிருந்து தப்பியவர்கள்; இரண்டே இரண்டு பேர்தான்.

அந்த இரண்டு பேரில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். பயிற்சிக்காக வண்டியேற வேண்டியவர்; மருத்துவச் சிகிச்சைக்காக வண்டியேற வேண்டியதாயிற்று.

தமிழ்நாட்டில்; காயத்தைக் குணமாக்கி அங்கேயே ஒன்பதாவது பயிற்சி முகாமில்; பயிற்சி முடித்து வெளியேறினார் தளபதி பால்ராச்.

அந்தத் தாக்குதலில் தளபதி பால்ராச்சைப் போராளியாக இணைத்த லெப்.காண்டீபன் வீரச்சாவடைந்து விட அதுவே அவரின் முதல் துயராகவும்; முதற்களமாகவும் அமைந்தது.


மரணவலயம்

மேஜர் பசீலன்.
வன்னியின் சண்டைக்காரர்களில்;; முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்த லையில் குட்டிவிடுவதில்; வல்லவன்.

வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில்; புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள்; நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில்; தளபதி பால்ராச் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு; திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்குபடுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி; அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு; போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.

போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்;; திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும்; அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில்; போராளிகள் நிலையெடுக்க வேண்டும்;. ஒரு திகிலூட்டும் திட்டத்தை; மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள்;; கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி; நிலையெடுப்பர்; அந்தப் பகுதியை; தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு. அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும்;- அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும்;; இராணுவ ஆற்றலும்; வேண்டும்.

யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்; அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி ~பால்ராச்|. தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி; பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை; தளபதி பால்ராச் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.


சூட்சமம்

இளம் போராளிகளுக்கான் பயிற்சிக் கல்லூரி அது. அங்கே பல்வேறு நிலைப்பட்ட போராளிகளும் இருந்தனர்.

களம் என்பது சாதாரணமானதல்ல மரணத்தோடு விளையாடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக் வெற்றியைச் சுவீகரிக்க வேண்டிய வீரத்திடல். அந்த வீரத்திடலில்; எதிரியோடு விளையாடி அனுபவம் பெற்ற எமது பல தளபதிகள்; நிறைந்த அனுபவங்களையும், போர்ப்பட்டறிவுகளையும் கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலமுறை வெற்றியோடு விளையாடிய தளபதிகளுள் ஒருவர் தளபதி பால்ராச்;; தன்னுடைய போர்க்கள அனுபவங்களை இந்த இளம் வீரர்களுக்கு புகட்டினார். அவர்கள் முன்னிலையில் பல விடயங்கள் குறித்தும் பேசினார்.

எதிரிகளின் நோக்கம் - போர்க்களத்தின் எதிர்பாரா தருணங்கள் - சண்டையில் எதிரிகளை வீழ்த்தும் வியூகம் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்;தார். தான் களத்தில் கற்றவற்றையும் - சந்தித்தவற்றையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த இளம் வீரர்களுக்கு இந்த வீரனைப் பார்க்கவும் - அவர் சொல்வதைக் கேட்கவும் வியப்பாக இருந்தது அதிக விருப்பமாகவும் இருந்தது.

தளபதி பால்ராச்; அந்த இளம் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்து முடிய அவர்கள் தமக்கிருந்த சந்தேகங்களை - விருப்பங்களை தளபதியிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினர். அப்போது ஒரு இளம் வீரன்;; தளபதி பால்ராச்சிடம் கேட்டான்; உங்களுக்குச் சண்டையில் பயம் வருவதில்லையா?

போர் வீரர்களுக்கு இருக்கக்கூடாத அம்சம்; பயத்தை நீக்கி வீரத்தைப் பெற அவர்கள் கேட்டுணர வேண்டிய ஆரம்பப் பாடம்;; அதை மாவீரன் பால்ராச்சிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த இளம்வீரன் விரும்பினான்.

தளபதி பால்ராச்; அந்த இளம் வீரனை நோக்கி கூறினார். 'எனக்குப் பயம் வருவதில்லை... அது போல உங்களுக்கும் பயம் வரக்கூடாது" அப்போது பயத்தை வென்று துணிவைப் பெறும் மந்திரத்தின் சூட்சுமத்தை; அவிழ்க்கத்தொடங்கினார் தளபதி பால்ராச்.

நீங்கள் முதலில் எந்தவேளையிலும்;; எந்த ஆபத்தையும்; எதிர்கொள்ளக்கூடியவாறு முழுத் தயார்நிலையில் இருக்கப் பழக வேண்டும்.

நான் காடாக இருந்தாலும் சரி... பெரும் வெளியாக இருந்தாலும் சரி... எந்தக் களச் சூழலில் இருக்கிறேனோ அந்தக் களச்சூழலில் எதிரி திடீரென எதிர்ப்பட்டால்; அவனை எப்படி எதிர்கொள்ளலாம் எனச் சிந்திப்பேன்.

சிந்திப்பதோடு மட்டும் நின்று விடாது அத்தகையதொரு எதிர்பாராத தாக்குதலை தடுக்கக்கூடியவாறு எனது மனதிற்குள் ஒரு கற்பனையான தாக்குதல் திட்டம் ஒன்றை ஒத்திகை செய்து... பார்ப்பேன். என்னை நான் எந்த நெருக்கடி நிலைக்கும் ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருப்பேன்...

அதனால் எதிரி எப்படி வந்தாலும்;.. பயமின்றி; பதட்டமின்றி எந்த என்னால் சூழலிலும் சிறப்பாகச் செயற்பட முடியும்.

இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்றார்; இளம் வீரர்களை நோக்கி; அந்தப் பயமறியாத் தளபதி.


பெருமை

சிங்களப்படைகள் தமது முழுப்பலத்தையும்... வளத்தையும் ஒன்று திரட்டி யாழ்ப்பாணம் மீது படையெடுக்க தமிழர் படையை வன்னியை நோக்கி பின்னகர்த்தினார்; தலைவர். யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்துபோனதால்;; போராடும் திறனை; அவர்கள் இழந்து போனார்களென எக்காளமிட்டது சிங்களம்.

யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வன்னி மீது போர் தொடுக்க தன்னைத் தயார்ப்படுத்தியது சிங்களம்.

அமைதியாய் - ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி; உள்ளே குமுறும் எரிமலை போல் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்; தலைவர்.

வெற்றி மமதையெடுத்து புலிகள் அடியோடு அழிந்தார்கள் என்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தலைவர்.

1996 யூலை 18

நந்திக் கடலோரம் அமைந்திருந்த முல்லைத்தளத்தை வீழ்த்த தலைவர் முடிவெடுத்தார்; தளத்தை அழிக்கும் முழுப் பொறுப்பையும்; தளபதி பால்ராச்சிடம் ஒப்படைத்தார். புலிகளின் அசுர அடி தளம் ஆட்டம் கண்டு வீழ்ந்துபோனது.

ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட சிங்களப் படைகளை அழித்து தமிழர் படை எதிரியிடமிருந்து அந்த தளத்தையும் அங்கிருந்த ஆட்லறிகளையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியது.

போராட்டச் சக்கரம் புதையுண்டு போனதாய் புலம்பியவர்களெல்லாம்;; வாயடைத்துப் போனார்கள்.

வெற்றிப் பெருமிதத்தோடு; தலைவரின் தளம் நோக்கி விரைந்தார்; தளபதி பால்ராச். தலைவர் நினைத்ததை நினைத்தபடியே களத்தில் செய்துவிட்டு; தளபதி பால்ராச் வர தலைவர் மகிழ்ச்சியுடன்; தளபதியுடன் பால்ராச்சின் ஒரு கரத்தைப் பற்றிப் பாராட்டினார்.

*******

2000 மார்ச் 26.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் போக்குத் திசையை எதிரியின் பிடியிலிருந்து புலிகளின் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தார்; தலைவர்.

இடிமுழக்கம்.... சூரியகதிர்.... சத்ஜெய.... எடிபல... ஜெயசிக்குறு என அடுத்தடுத்துப் படையெடுத்து புலிகளின் கதை முடிக்க முயன்றவர்களின்; கதை முடிக்கும்; ஓயாத அலைகள் படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார் தலைவர்.

வன்னியின் தென்முனை நோக்கிப்படை நடத்திய தலைவர்; சடாரென திரும்பிய புயல் போல் வன்னியின் வட திசையில் போர்ப்புயலை; வீசச் செய்தார். ஆனையிறவைச் சூழவிருந்த படை முகாம்கள் ஒவ்வொன்றாய் வீழகளம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஓயாது வீசிக் கொண்டிருந்தவர்கள் ஓயாத அலை படை நடவடிக்கையின் மகுடமாய்;; நீண்ட காலமாக கைகளுக்கெட்டாமல்; நழுவி நிமிர்ந்து நின்ற ஆனையிறவுப் பெருந்;தளத்தை அடியோடு சாய்க்கத் தலைவர் வியூகமிட்டார்.

திட்டம் புலிகளுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான திட்டம். அகன்று விரிந்து கிடக்கும் பகைவனின் முற்றத்தில்; புலிகள் கூடாரமடித்து எதிரிகளை வேட்டையாட வேண்டும். சிங்க வேட்டைக்குத் தலைவர் தேர்ந்தெடுத்த இடம்;; இத்தாவில். அதை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்த தளபதி; பால்ராச்;. முப்பத்து நான்கு நாட்கள்; இத்தாவில் மட்டுமல்ல தளபதி பால்ராச்சும்... போராளிகளும்; நெருப்பில் குளித்து நிமிர்ந்தனர்.

முடிவு இனிமேல் எங்களால் முடியாது என்ற பகைவன்;; ஆனையிறவிலிருந்த தமது சகாக்களையும்;; ஆனையிறவை நோக்கிப் பலாலியிலிருந்து அனுப்பிய தனது படைகளையும் பின்னிழுக்கச்;; சிங்களச் சிங்கங்கள் குந்தியிருந்த் அந்தப் பெருங்கோட்டை உக்கி உப்பு வெளிக்குள்; உதிர்ந்து போனது.

அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த அந்த முப்பத்து நான்கு நாள் இத்தாவில் சமரை பால்ராச் வென்று ஏ-9 சாலையால் தலைவரின் தளம் விரைய தலைவர் மீண்டும் கைகொடுத்தார்; அந்தத் தளபதியைப் பாராட்ட ஆனால், ஒரு கையை அல்ல இரு கைகளையும் சேர்த்து.

*******

பகைவன் கூட பாராட்டும் வகையில்; படை நடாத்திய அந்தப் பெருந்தளபதி... எத்தனையோ சண்டைகளை.... சமர்களை.... வென்ற வீரன்.

எதிரிகளோடு தனித்துச் சண்டை செய்து.... குழுவாகச் சண்டை செய்து... பெரும் படையாகச் சண்டை செய்து... அந்தப் பெரும் படையையே வழிநடாத்தும் பெருந்தளபதியாய் உயர்ந்து எங்கள் புருவங்களை உயரச் செய்த அந்த உன்னத தளபதி; முடியாது என்ற களத்தில்கூட தன்னால் முடியும் எனச் சாதித்துக் காட்டிய அந்தத் தளபதி.

பெருமையோடு தான் பெற்ற இந்த இரண்டு பெரும் பாராட்டுக்களையும் மனமிளகி மகிழ்ச்சியோடு தோழர்களிடம் நினைவு கூறுவராம்.


சமயோசிதம்

தளபதி பால்ராச் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கிய புலி வீரர்களும் வீராங்கனைகளும்; எதிரியின் முற்றமான இத்தாவிலில் ~பெட்டிகட்டி| சடு...குடு... ஆடினார்கள்.

திகைத்துப்போன பகைவன்; இருந்தவர்களையும் - கிடந்தவைகளையும் வாரிச்சுருட்டிக் கொண்டு; புலிகளோடு மூர்க்கமாக மோதத் தொடங்கினான். தாக்குதலின் கடுமை இத்தாவில் சமர் சரித்திரம் மறவாத் சமராக மாறியது.

பல்லாயிரக்கணக்கான எதிரிகளுக்கு எதிராக சுமார் ஆயிரத்து இருநூறு போராளிகள் மட்டுமே எதிர்ச் சமராடினர்.

பகைவனின் இரும்புக்கோட்டையைச் சரிக்க தலைவரின் எண்ணத்தில் உதிர்த்த அற்புதமான போரியல் திட்டம்; அதைத் தளத்தில் அரங்கேற்றும் நாயகன்; எங்கள் பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் நம்பிக்கையான தெரிவு எப்போதும் தலைவர் எதிரிகளை கலங்கடிக்க எய்யும்; சக்திமிக்;க அம்பு.

உள்ளே பால்ராச் நிக்குதாம்; அறிந்து கொண்ட எதிரி; எரிச்சலோடும் மூர்க்கத்தோடும்; மோதினான்.

எப்படியாவது... எங்காவது ஒரு மூலையில் சிறு உடைப்பை ஏற்படுத்த முடியாதா என எதிரி திணறினான்.

படையணிகளை மாற்றி... படையதிகாரிகளை மாற்றி... மூர்க்கத்தோடு முட்டிமோதிய போதும்; அவனால்; முன்னேற முடியாமற் போயிற்று.

உள்ளே மோதிக் கொண்டிருக்கும் போராளிகள்; குறைந்த எண்ணிக்கையாலானவர்கள்;; அவர்கள் வசமிருந்த படைக்கலங்களும்; குறைந்த எண்ணிக்கையிலானவை.

தாக்குதல் களம்; எதிரியின் முற்றம். போராளிகள் நினைத்தவுடன்; எந்தப் பற்றாக்குறைகளையும் தேவைகளையும்... நிவர்த்தி செய்துவிட முடியாது.

அதற்கு எதிரி; களத்தில் வாய்ப்பளிக்கப் போவதுமில்லை. இப்படித்தான்; களத்தில் எதிரி மோதிக்களைத்த நிலையில்; ஒருநாள் நேரடி மோதுகையைத் தவிர்த்து அகோரமான எறிகணைத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.

அந்த முப்பத்துநான்கு நாள் சமரின் ஒருநாள்; போராளிகள் நிலைகொண்டிருந்த அந்தக் களமுனை முழுவதையும்; எறிகணைகள் துடைத்தழித்துக் கொண்டிருந்தன.

அப்போது எதிரி ஏவித்தொலைத்த அந்தப் பல்லாயிரக்கணக்கான எறிகனைகளில் ஒன்றோ சிலவோ அங்கே தாக்குதலுக்காகக் களஞ்சியப்படுத்தியிருந்த போராளிகளின் ஆயுதக்களஞ்சியம் மீது வீழ்ந்து வெடிக்கத்; தொடங்கியது திருவிழா!

உள்ளேயிருந்த் அத்தனை வெடிபொருட்களும்;; கடாம்... புடாம்... டமால்... எனப் பெரும் வெடியோசையோடு; தொடர் குண்டோசையாக் வெடித்துச் சிதறியது.

உள்ளே என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிரியும் கூடக் குழம்பிப் போனான்.

குண்டுமழை ஓய்ந்தது போல் அந்தக் களமுனை சற்று அமைதியுற அங்;கு நிலைமையின் விபரீதம் கண்முன்னே விரிந்து கிடந்தது.

உள்ளே இருப்பவர்களின் இருப்பு இந்த வெடிபொருட்களின்; இருப்பிலும் தான் இருக்கிறது. அவை எதிரிகளை அழிக்காமலே அழிந்து போகுமானால் நிலைமையைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையதொரு நிலைமைதான் அந்தக் களத்தில்; தளபதி பால்ராச்சின் முன் ஏற்பட்டுவிட்டது.

எத்தகைய படைகளையும்... எந்த உறுதி மிக்கத் தளபதிகளையும்... படையதிகாரிகளையும்; குழம்பச் செய்துவிடக்கூடிய அழிவு.

களமுனையில் நின்றவர்கள்; ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து பதட்டத்தோடு தொலைத் தொடர்புக் கருவியில்; தளபதி பால்ராச்சை அழைத்தனர்.
லீமா... லீமா...
என்ன மாதிரி...?
ஏதும் சிக்கலோ...?
அறிந்து கொள்ளும் அவசரம்; எல்லோருக்கும்;; நிதானமாக் எந்தக் குழப்பமுமற்று அழைத்த எல்லாக் குரல்களுக்கும் லீமாவின் பதில் வந்தது தெளிவாக. அது ஒண்டுமில்லை நாளைக்கு நாங்கள் செய்யப்போகும் 'ஒழுங்குக்கு" இண்டைக்கு ஒத்திகை நடக்குது. என தொலைத் தொடர்வுக்கருவியில் ஒலித்தது. உறுதிகுலையாத ஒரு தளபதியின்; சமயோசிதக் குரலாக.


சுனாமி..!

2004 ஆம் ஆண்டு காலப்பகுதி...... தளபதி பால்ராச் அப்போது தென்தமிழீழத்தின்; வாகரையில் நின்றார். வடதமிழீழத்தின்; அனேகமான போர்க்களங்களில் நடமாடிய அந்தத் தளபதி; இப்போது தென்தமிழீழத்தில்...

அது ஒரு அமைதிக்காலம்; போர் ஒய்ந்திருக்க அந்தத் தளபதியும்; ஓய்வாக இருந்தான். அழகான கடற்கரையோரம்... அழகூட்டும் ஊர்மனை... கல...கலவெனச் சிரிக்கும் ஏதுமறியாச் சனங்களின் வீடுகள் என எல்லா இடமும்; அந்தத் தளபதி; பயணித்தான்.

வாகரையின் கடல்மணல் தொடும்; அந்தக் கடற்கரையோரம்;; தென்னைமரக் கூடலுக்குள்;; தளபதி பால்ராச்சின் பாசறை இருந்தது. 2006 டிசம்பர் 26 விடிகாலை. சத்தம் சந்தடி ஏதுமின்றி; இயற்கை மகள் சீறிச்சினக்க கரையோர மக்கள்; தண்ணீருக்குள்;; கண்ணீரோடு தவித்தனர். தென்னாசியாவின் கரையோரம் எங்கும்;; மனித உயிர்கள்; மண்மேடாய் குவிந்தன. எல்லோரும் அழுதார்கள்;;; ஏதேனும் ஒரு அசுமாத்தம் தெரிந்திருந்தால் கூட ஓடிப் பிழைத்திருப்போமே என குமுறிக் குழறினர்.

இயற்கை ஏன் எங்களை எச்சரிக்கவில்லை; கடலைச் சபித்து மண்ணள்ளித் தூற்றினர். சின்ன எச்சரிக்கை எங்களுக்காக் எங்கள் மீது பரிவுகொண்டு; எவரேனும் எங்களை எச்சரித்திருக் கூடாதா?; ஆதங்கத்தால் ஏங்கினர்.

இயற்கையின் விபரீதத்தை; உணரமுடியாமற் போனதா அல்லது இயற்கையின் எச்சரிக்கையை உணரத் தவறினோமா?; எவருக்கும் விடை தெரியாத அந்த நாளில்; குமுறி எழுந்த அந்தச் சுனாமி அலை கடலைவிட்டுத் தரைக்குத் தாவியபோது கரையோர மக்களுக்கு விபரீதத்தின் விளைவு புரியவில்லைத்தான்.

நின்று... நிதானித்து... சுதாகரிக்க எந்த அவகாசமும்; எவருக்கும் இருக்கவில்லைத்தான். வாகரையின் கரையோரத்தை நோக்கி; மலை போல சீறிவந்த கடலலை சூழ்ந்துகொள்ள அங்கிருந்த தளபதி பால்ராச்சின் பாசறையையும்;; கடல் நீர் விழுங்கத் தொடங்கியது.

இந்தக் கடல்நீர் வெளியேற்றம்;;; வழமைக்கு மாறானது ஆபத்தானது புரிந்து கொண்ட தளபதி பால்ராச்; இயற்கை விளைவித்த அந்த ஆபத்திற்கு மத்தியிலும்; ஒரு களத்தின் நடுவே நின்று செயற்படும் வீரனைப் போல் துரிதமாகத் துணிவோடு செயற்பட்டார்.

கடல்நீர் காலளவு... கையளவு தாண்டி கழுத்தளவு வந்துவிட அந்த முகாமிலிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும்; நீரிழுத்துப் போகாமல்; இருக்க தளபதி பால்ராச்; பெரும் போராட்டத்தையே நடாத்த வேண்டியிருந்தது.

அங்கிருந்த கனரக மோட்டரொன்றைக்; கயிற்றில் இணைத்து தென்னை மரத்தோடு கட்டியதோடு, ஏனைய போராளிகளை ஏவி; இயக்கத்தின் உடமைகளையும்; தமிழ்மக்களின் பாதுகாப்புக் கேடயங்களையும் காப்பதில்; முன்னின்றான் அந்தத் தளபதி.

சீறியெழுந்து; சுழன்றடித்துக் கொண்டிருந்த அந்த அலையின்; கொடூரப் பிடியின் நடுவே நின்றுகொண்டும்; தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டுமெனக் கொஞ்சமேனும் நினையாத அந்தத் தளபதி; ஆபத்திற்கு மத்தியிலும் அந்த முகாமிலிருந்த ஒரு துப்பாக்கியை கையிலெடுத்து வானை நோக்கி; ரவைக்கூட்டிலிருந்த அத்தனை துப்பாக்கி ரவைகளும் தீரும் வரை சுட்டுத் தீர்த்தாராம்.

துப்பாக்கி ரவையின் சத்தத்தையும்; அலையின் பேரிரைச்சலையும் கேட்டுச்; சனங்கள் ஏதோ ஆபத்து வருகிறதென எச்சரிக்கையடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடித்தப்பட்டும். சனங்களின் மீது அன்புகொண்ட எங்கள் தளபதி...


நம்பிக்கை..!

'சிங்கமுகச்" சிலந்தி போல் ஆனையிறவுப் படைத்தளம்; தனது பாதுகாப்பு வலைப் பின்னலை இறுக்கமாகப் பின்னி; குடாநாட்டின் தொண்டைக்குழிக்குள்; விரிந்துகிடந்தது. ஆயிரக்கணக்கில் போராளிகளை விதையாக்கிய பின்னும்; அந்தப் படைத்தளம் வீழாது வீங்கிப் பெருத்திருந்தது.

ஆனையிறவுச் சிலந்தியின்; ஒவ்வொரு பாதுகாப்பு வலைப் பின்னலையும்;; அது அகல விரித்திருந்த அதன் ஒவ்வொரு கால்களையும் அறுத்தெறிந்து பிணமாக்கத் தலைவர் முடிவெடுத்தார்.

ஒரு பகற்பொழுது; பரந்தனில் தொடங்கிய சண்டை விறுவிறுவென உமையாள்புரம் வரை அகன்று நின்ற ஆனையிறவின் கால்களையும்; மறுபுறம் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, புல்லாவெளிவரை நீண்டு கிடந்த கால்களையும் அறுத்தெறிய ஆனையிறவு ஒடுங்கிப் போனது. புலிகளுக்கேயுரிய திகிலூட்டும் ஒரு அதிரடி முயற்சியின் மூலம்; ஆனையிறவை அடியோடு வீழ்த்துவதே தலைவரின்; திட்டம். குடாரப்பில் தரையிறங்கி; இத்தாவிலில் உறுதியாக நின்று கொண்டு; ஆனையிறவின் கழுத்தை நெரிக்க வேண்டும்.

திட்டத்தை நிறைவேற்றும் அதிபதியாக் பால்ராச்சைத் தேர்ந்தெடுத்தார் தலைவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; மிகப் பெரும் தரையிறக்க நடவடிக்கை தரைப் புலிகளும்... கடற்புலிகளும் இணைந்து மேற்கொள்ளப் போகும்; கூட்டு நடவடிக்கை.

எதிரியின் பயணப் பாதையில் சூறாவளியென சுழன்றடிக்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டித்; தலைவர் அனுப்பிவிட வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரையோரம் போராளிகள் ஒன்றுசேர்ந்தனர் ஒரு பெரும் வரலாற்றுப் பயணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்போகிறது.

வெயில் பளீரெனச்; சுட்டெரிக்கும் ஒரு பகற்பொழுது அந்தக் கடற்கரையோரம்; தரையிறக்கத் தளபதி பால்ராச்சும்; கடற்படைத் தளபதி சூசையும்; ஒன்றாக அமர்ந்திருந்தனர். வந்திருந்த உணவுப் பொதியொன்றைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்க தளபதி சூசை மெதுவாக உரையாடலை ஆரம்பித்தார்.

அக்காலம்; மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டம்;; இயக்கம் ஒரு பெரும் தொடர்ச்சியாக போருக்கு முகம் கொடுத்து வந்ததால்; வளப் பற்றாக்குறைகளைப் பெரியளவில் எதிர்கொண்டபடியிருந்தது. போராயுதங்களுக்கும்;; போரைப் பின்னின்று இயக்கும் பல அடிப்படைப் பொருட்களுக்கும் கூட பெரும் தட்டுப்பாடு.

இந்த நிலையில் கடற்புலிகளைப் பொறுத்த வரையில் தரையிறங்கப் போகும் ஆயிரக்கணக்கான போராளிகளையும்;; அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதத் தளபாடத் தொகுதிகளையும்; உள்ளே தரையிறக்குவதென்பது இமாலய சாதனை.

அதற்காக கடற்புலிகளின் கையிருப்பிலிருந்த பெருந்தொகை எரிபொருட்களையும்; படகுத் தொகுதிகளையும்; அவர்கள் செலவளிக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில்; கடற்புலிகளின் வசம் குடாரப்பில் தரையிறக்கப்பட வேண்டிய தளபதி பால்ராச் தலைமையிலான ஆயிரத்து இருநூறு போராளிகளையும்; அவர்களின் ஆயுதத் தளபாடங்களையும்; ஏற்றிச்செல்லக்கூடிய அளவு எரிபொருள் மட்டுமே தளபதி சூசையின் கையிருப்பில் இருந்தது.

சண்டை ஏதாவது சிக்கலாகி; நிலைமை நெருக்கடிக்குள்ளாகுமிடத்து அவ்வளவு தொகை போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும்; மீளவும் தளம் திருப்ப வேண்டும். ஆனால் அதற்கு தேவையான எரிபொருள்; கையிருப்பில் இல்லை.

நிலைமையின் தன்மையை கடற்படைத் தளபதி; தளபதி பால்ராச்சிற்கு சங்கடத்தோடு உரைக்க ஏற்கெனவே நிலைமையை நன்கு அறிந்திருந்த அந்தத் தளபதி; தனது இதழ்களில் தவழ்ந்த மெல்லிய புன்னகையோடு கண்களில் நம்பிக்கைத் தெறிக்க தளபதி சூசையை நோக்கிக் கூறினாராம்.

'என்னை உள்ள இறக்கி விட்டாக்காணும்.... நான் தரையால வருவன்" என்று.


கைதி..!

1983 க்கும் 1984 க்கும்; இடைப்பட்ட காலம். வன்னியில் புலிகள் இயக்கம்; வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பால்ராச் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள்...

அதாவது போராட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாக.... பகுதி நேரப் போராளியாக அவர்; இயங்கிக் கொண்டிருந்தார்;. ஒருநாள்.........

இயக்க வேலையாக் தண்ணீரூற்று.... முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு; மிதிவண்டியில்; முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்; இளைஞனாக இருந்த தளபதி பால்ராச்சை இடைமறித்தனர்.

அப்பாவி இளைஞனாக் காட்டிக்கொண்ட போதும்;; அவரைச் சிங்களப் படைகள் கைது செய்தனர்.

தளபதி பால்ராச் முல்லைத்தீவு முகாமில்; மூன்று நாட்கள்; சிறை வைக்கப்பட்டார்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும்;; சிறிலங்காப்; படையினரும் பொறுப்பதிகாரிகளும்... அவரை மிரட்டியும்... வெருட்டியும்; பல்வேறு உபதேசங்களைச் செய்தனர்.

தளபதி பால்ராச்;சைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன் என்றோ... அல்லது பகுதிநேரப் போராளியென்றேர் அடையாளம் காணாத சிங்களப்படைகள்;; சின்னப் பெடியள் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது என போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை; விதைக்க விளைந்தனர்.

தளபதி பால்ராச் எல்லாம் அறிந்தும்;; அறியாதது போல மௌனம் காக்க சிங்களப் படைகள் அவரை விடுவித்தது. பின்னர், தளபதி பால்ராச்; போராளியாகி; தளபதியாகி; சிங்களப் படைகளுக்கு எதிராகத்; தொடர் போராட்டங்களையே நடாத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக் தளபதி பால்ராச் எந்த இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாரோ அந்த இராணுவ முகாம் பின்னாளில் தளபதி பால்ராச் தலைமையில்; தாக்கியழிக்கப்பட்டு வரலாற்றில் பதிவாகியது. ஒரு முன்னாள் கைதியின் எழுச்சி; ஒரு இராணுவ முகாமின்; அழிவாகிப் போனது.


போரியல் புத்தகம்..!

போராட்டம் வளர்ந்துவிட்டது. போர்க்கலையில் வல்ல புலிகளாக் போராளிகளும் வளர்ந்து விட்டார்கள்.

ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த விடுதலைப் போராட்டம்;; ஆட்லறிகளையும்... டாங்கிகளையும் கொண்ட பெரும் படையாக உயர்ந்து நிற்கிறது.

காலமும்... சூழலும் மாற... மாற... போரும் அதன் தன்மைக்கேற்ப மாறிவிட்டது.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர்;; மரவுவழிப்படை நடத்தலை மேற்கொள்ளும்; அளவுக்கு வளர்ந்தாயிற்று.

காலத்திற்கு ஏற்ப போராளிகளும் மாறவேண்டும்;; அவர்களை மாற்றவேண்டும்.

வெறும்; சண்டைக்காரர்களாக மட்டுமல்ல அதிகாரிகளாக... தளபதிகளாக... சண்டைத்திறன் கொண்ட நிபுணர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

தலைவர்; இந்த விடயத்தில் எப்போதும் அதிக கரிசனை எடுப்பார்;. அவரே நேர்நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவார்.

நவீன கால போர் என்பது சாதாரணமானதல்ல ஆயுதங்களும் அதன் பயன்பாடுகளும் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம்; தந்திரங்களும்... உத்திகளும் செல்வாக்குச் செலுத்தும். ஆயுதப்பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வசதி; உத்திகளையும்... தந்திரங்களையும்; அறிந்துகொள்ளக் கிடைப்பதில்லை.

அது வெறுமனே எழுத்தில் வடிக்கப்பட்ட நூல்களிலிருந்து மட்டும்; கற்றுத்தெரிந்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு போர் அனுபவமும்... தந்திரமும்... உத்தியும்;; அதனதன் பௌதீகச் சூழலுக்கும் புவியல் அமைப்புக்கும் ஏற்ப மாறுபடும்; தளபதிகளின் திறமைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும்.

இதற்கேற்ப போரியல் அறிவை வளர்த்தெடுத்து இளம்புலி வீரர்களுக்கு புகட்ட வேண்டும். தலைவர்;; இளம் வீரர்களுக்கான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியொன்றை ஆரம்பித்திருந்தார். தகுதியானவர்களைக் கொண்டு; பல்துறை சார்ந்த போரியல் பாடங்களை அவர்களுக்கு ஊட்டினார்.

அங்கு உள்நாடு தொட்டு... வெளிநாடு வரையான போர்க்களங்களையும் போரியல் அனுபவங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஒருநாள்; தலைவர்; பிரிகேடியர் பால்ராச்சை அழைத்தார்;. அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் கற்கும்; போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால்; ஒரு நிபந்தனையோடு...

நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம்; நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் பெரிய பாடம் என்றார். அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராச்; தலைவரின் பார்வையில்; மிளிர்ந்தார்.


திசைகாட்டி..!

இந்திய - புலிகள் போரின் உக்கிரம்; மணலாற்றுக் காட்டுக்குள் தீவிரம் பெற்றிருந்த காலம். தலைவரின் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில்;; இந்தியர்களுக்கு உற்சாகம். தமது சிறப்புப் படையணிகளை ஒன்றுதிரட்டி மணலாற்றுக் காட்டைச் சுற்றிவளைத்து தலைவரைக் கொன்றுவிடத் துடித்தனர்.

தலைவரை அழிக்கும் படை நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டிய பெயர்;; ~செக்;மேற்.| இந்தியர்கள் அந்தப் பெரும் நடவடிக்கையை; மணலாற்றுக் காட்டுக்குள் மேற்கொண்ட போதும்;; தலைவர் அங்கிருந்து பின்வாங்கவோ இடம்மாறவோ விரும்பவில்லை. இந்திய - புலிகள் போரின் இறுதி முடிவை இந்த மணலாற்றுக் காட்டுக்குள்; வைத்து தீர்மானிக்க அவர் விரும்பினார்.

வேட்டையாட வந்தவர்கள்; அங்கே வேட்டையாடப்பட்டார்கள். அது ஏறத்தாழ கோலியாத்துகளுக்கும்; தாவீதுகளுக்கு மிடையிலான யுத்தம். இந்த யுத்தம் அரங்கேறிய இடமோ பெரும் வனாந்தரம்.

அக்காலம்; காடு முழுவதுமாக போராளிகளின் உள்ளங்கைகளுக்குள்; அகப்பட்டுவிடவில்லை. ஒருபுறம்; இந்தியர்களோடு போராடிக்கொண்டு; காட்டின் விசித்திரங்களையும் விடுபடாத முடிச்சுகளையும் அவர்கள் அவிழ்க்க வேண்டியிருந்தது. காடு எந்தச் சலனமுமற்று இருளால் மூடிக்கிடந்தது. எங்கோ கத்தித் தொலைக்கும் விசித்திரப் பறவைகள்;; எட்டுமுட்டாகச் சந்தித்தால் துள்ளிப் பறந்தோடும் காட்டு விலங்குகள்; எவருக்கும் வளைந்து கொடுக்காது இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் காட்டு மரங்கள்;; எனக் காடு காடாகவிருந்தது.

மனிதர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கும் இந்தக் காட்டுக்குள்தான்;; தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்;; ஒரு வல்லரசிற்கெதிரான போர்; நடந்து கொண்டிருந்தது. உள்ளே தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட இந்தியர்கள்; பேராசையோடு காட்டைச் சூழ்ந்தார்கள்;; காட்டுக்குள் குவிந்தார்கள்.

பெரும் வல்லரசு ஒன்றின்; ஒருமுகப்படுத்தப்பட்ட படை அவர்களுக்கு எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் தலைவரின் தலைமையில் நின்ற போராளிகளுக்கு...? போராளிகளைப் பொறுத்த வரையில்; காடு நண்பனாகவும் இருந்தது எதிரியாகவும் விளங்கியது. அது இயற்கையின் ஒரு விந்தையான படைப்பு.

ஆற்றல் உள்ளவர்களுக்கும்;; அனுபவம் கொண்டவர்களுக்கும் மட்டுமே வழிகாட்டும். அது எத்தனை ஆற்றல் படைத்தவர்களையும்; அனுபவம் கொண்டவர்களையும் கூட சிலவேளைகளில் சறுக்கி விழுத்தி விடும்.

காட்டு அனுபவம் இல்லாது எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும்;; காட்டுக்குள் நிறைந்து கிடக்கும் எதிரியிடமோ மாட்டிவிடும். அந்த வனத்துக்குள் அனாதையாய் அலையவிட்டு; வேடிக்கை பார்த்து நிற்கும். அனுபவத்தின் மனக்குறிப்பைக் கண்களுக்குள் விரித்து காடு முறித்து பாதையெடுத்தால் மாத்திரம் தான்; போராளிகளின் பயணங்கள் இலகுவாகும். மற்றும்படி பயணத்தை இலகுவாக்கப் போராளிகளிடம்; போதிய திசையறி கருவியும் கிடையாது வரைபடக் குறிப்பும் கிடையாது. இத்தனைக்கும்; எதிரிகளின் சுற்றிவளைப்புக்குள்ளும் முற்றுகைக்குள்ளும்; தொடரவேண்டிய பயணங்கள்.

அந்த நேரங்களில்; திசையறிகருவி இல்லாமலேயே காடுமுறித்து மனக்குறிப்பால் போராளிகளை அழைத்துச் செல்லும்; காட்டனுபவம் உள்ளவர்கள் வேண்டும். ஆம்; மணலாற்றுக் காட்டுக்குள்; காட்டனுபவமும்-ஆற்றலும்-அறிவுமுள்ள பல திறமைசாலிகளை தலைவர் தன்வசம் வைத்திருந்தார். அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்; பிரிகேடியர் பால்ராச். அக்காலம்; தளபதி பால்ராச் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒரு திசையறிகருவி.


முற்றுகை..!

இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேறியிருந்தன இல்லை வெளியேற்றப்பட்டிருந்தன. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சிங்களப் படைகள் திமிர் எடுத்து மண் பசியுடன்; தமிழர்களை வேட்டையாட வெடித்தது இரண்டாம் கட்ட ஈழப்போர். விளைவு சிங்களப் படைகளிற்கு எதிரான போர்; தீவிரம் பெறத் தொடங்கியது.

அந்தநேரம் கொக்காவில்... மாங்குளம்... முல்லைத்தீவு என பல இடங்களிலும்; சிங்களப் படைகள்; குந்தியிருந்தன. இவ்வாறு வன்னியை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படை முகாம்கள்;; எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அதேநேரம். அவர்களுக்கெதிராக பதுங்கித் தாக்குதல்கள்... கண்ணிவெடித் தாக்குதல்கள்... காவலரண்கள் தகர்ப்பு... மினிமுகாம்கள் கைப்பற்றல் என போரின் பரிமாணம் மாறத்தொடங்கியிருந்தது. ஈழப்போர் இரண்டாம் கட்டத்திற்குத் தாவியிருந்த அதேநேரம்;; இயக்கம் வளப்பற்றாக் குறைகள்... ஆளணிப் பிரச்சினைகளென இல்லாமைகளோடு மோதியபடி தான் முன்னேறியது.

ஆயினும்;; நம்பிக்கையை முதலீடாக்கி; கொஞ்ச நஞ்சமாக இருந்த ஆயுத இருப்பைத் துணையாகக்; கொண்டு; பல சிங்களப் படைத் தளங்களை புலிவீரர்கள்; ஒவ்வொன்றாக வீழ்த்தத் தொடங்கினர்.

முல்லைத்தீவில்... நீண்ட நெடுநாட்களாக ஒரு இராணுவ முகாமை நிறுவி; அந்த மக்களின் அன்றாடச் சீவியத்தில்;; மண்ணள்ளிக் கொட்டினர் சிங்களப் படைகள். எப்படியும் இந்த இராணுவ முகாமை தாக்கியழிக்க வேண்டும்.

இயக்கம் முடிவெடுத்து... வேவு எடுத்து... சின்ன ஒத்திகை பார்த்து... முன்னேறித் தாக்கத் தொடங்கியபோது இல்லாத அந்த வளப் பற்றாக்குறைகள் இயக்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்தது.

முகாமைச் சுற்றிவளைத்து வீழும் என்ற நம்பிக்கையோடு போராளிகள் தாக்கிய போதும்;; அது கைநழுவிப் போனது.

முகாமில் குந்தியிருந்த சிங்களப் படைகள்;; தாம் பலமாக அமைத்து வைத்திருந்த காவலரண்களுக்குள்ளும்... காப்பகழிகளுக்குள்ளுமிருந்து கடுமையாகத் தாக்கினர். தாராளமாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி; பலமாகத் தாக்கினர்.

போதாததற்கு முள்ளிவாய்க்கால் பக்கமாக் கடல் வழியாகப் படைகளைத் தரையிறக்கம் செய்ய நிலைமை கைமீறிப்போனது.

முகாம் மீதான தாக்குதலுக்கே பற்றாக்குறை என்கிற நிலையில்தான் வெடிபொருட்கள் இருந்தன. இந்த நிலையில்; தரையிறக்கப்பட்டிருக்கும் படைகளுக்கு எதிரான சண்டைக்குத் தேவையான வெடிபொருட்களுக்கு; எங்கே போவது?

இருந்த பலமும்; வந்த பலமும் ஒன்றுசேர திரண்ட பலத்தோடு; உக்கிரமாக மோதத் தொடங்கினான்;; எதிரி.

இந்தளவுக்கும்; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளின் பல அணிகள் தளத்தின் முற்றத்திற்குள்; கடுமையாக மோதிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்; தரையிறக்கப்பட்ட சிங்களப் படைகள்;; தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளைச் சுற்றிவளைத்துவிட்ட நிலையில்; அணிகளைப் பின்னிழுக்க வேண்டியதாயிற்று.

ஆனால்; முகாமின் மையப்பகுதியில் மேஜர் றொபேட் தலைமையிலான அணியொன்று தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அந்த அணி தாக்குதலை நிறுத்தி வெளியேற முயல்கையில்; அவர்களை தனது இறுக்கமான முற்றுகைக்குள்; வளைத்துவிட்டான் தமது முகாமைத் தாக்க வந்த புலியணியொன்றை சுற்றிவளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன சிங்களப் படைகள்.

மீளமுடியாத நெருக்கடிக்குள்; அணி திணறியது. உள்ளே நிற்பவர்கள் வெளியில் வரவேண்டுமானால் வெளியிலுள்ளவர்களின் உதவி தேவை. உள்ளே இருப்பவர்களால்; முற்றுகையை உடைக்க முடியாத நிலை.

அப்படியாயின் முற்றுகையை உடைக்க யாரால் முடியும்...? தொலைத்தொடர்புக் கருவி; நம்பிக்கையோடு அழைத்தது. லீமா... லீமா...
லீமா...லீமா... ரொபேட்.
அழைத்த ரொபேட்டின் குரலுக்கு தளபதி பால்ராச் குரல் கொடுத்தார்.

'அப்படியே சண்டை பிடிச்சுக் கொண்டிருங்கோ இப்ப வாறன்..." சொன்னதோடு நிற்கவில்லை அந்தத் தளபதி. நெருப்பு மழையில் நீந்தி; முன்னேறி; நெருக்கடிக்குள்ளாகிய அணியோடு சேர்ந்தபோது உடைந்து நொருங்கியது எதிரியின் முற்றுகை.


ஓய்வறியாத் தளபதி..!

பூநகரிப் படைத்தளம் மீதான தாக்குதல். புலிகள் இயக்கத்தின் அனைத்துப் படையணிகளும் ஒன்றிணைக்கப்பட்டு; கடும் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

போராளிகள்-தளபதிகள்-பொறுப்பாளர்கள் என எல்லோரும் ஒரு சேர உழைத்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில்; புலிகள் இயக்கம் மேற்கொள்ளும்; பாரிய படை நடவடிக்கை. ஆகாய கடல்வெளி படை நடவடிக்கையின் பின்னர்; புலிகள் இயக்கத்தின் அனைத்து படையணிகளும்; பங்கு கொள்ளப்போகும் ஒரு நடவடிக்கை பெரியளவில் மேற்கொள்ளப்படும் ஒரு ஈரூடகத்தாக்குதல்.

தளபதி பால்ராச் உட்பட அனைத்து தளபதிகளும், போராளிகளும் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகளிலும்; ஒழுங்குபடுத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க முந்திவிட்ட எதிரி ~யாழ்தேவி| படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டான்.

ஆனையிறவிலிருந்து - கிளாலி நோக்கி எதிரியின் முன்னகர்வு யாழ்தேவி வேகமெடுக்க முதல் அதன் பயணப்பாதையிலேயே தடம்புரளச் முன்பு செய்ய வேண்டும். அதுவும் பூநகரி படைத்தளம் மீதான தாக்குதல் ஏற்பாடுகளுக்கு எந்தப் பழுதும் ஏற்படாத வகையில்; யாழ்தேவியை தடம்புரளச் செய்யவேண்டும்.

தலைவர் தளபதி பால்ராச் தலைமையில் படையணிகளை; யாழ்தேவி களத்திற்கு அனுப்பி வைத்தார்.

படையணிகள் களத்திற்கு விரைய ~யாழ்தேவி| படை நடவடிக்கையை வழிநடத்திக் கொண்டிருந்த சிங்களத்தின் தளபதிகளுக்கு பிடித்தது ~அட்டமத்து சனியன்| தளபதி பால்ராச் அவர்களும்- தளபதி தீபன் அவர்களும் களச்சூழலுக்கு ஏற்ப ஒரு அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டனர்.

பரந்து கிடந்த அந்த மணற்பாங்கான பகுதியில்; மணலைக் கிளறிப் போராளிகளை உள்ளே புதைத்த வேகமாக முன்னேறி வரும் பகைவன் நெருங்கி வந்தவுடன்; மண்ணுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்து புயலெனத் தாக்க எதிரி ஆடிப்போனான்.

சண்டை வெகு கலாதியாக சூடுபிடிக்க எப்போதும் போல் கட்டளைப் பீடத்துள்ளிருந்து வழிநடத்தவேண்டிய தளபதி பால்ராச்; சண்டை தொடங்கிய வேகத்தோடு; போராளிகளோடு போராளிகளாக களத்தில் குதித்து விட டாங்கியிலிருந்து எதிரி ஏவிய ஒரு குண்டு வீழ்ந்து வெடித்ததில்; தளபதி பால்ராச் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் கிடக்க வேண்டியதாயிற்று.

எவ்வேளையிலும் களத்தில் சுழன்றாட வேண்டும் என்ற எண்ணம் தளபதி பால்ராச்சிற்கு நோய்ப்படுக்கையில் கிடப்பதென்பது மரண வேதனையாக இருந்தது. அதிலும் பூநகரி தளம் மீதான நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்; ஓய்வாகக் கிடப்பதென்பது கடினமாக இருந்தது.

களத்தின் நினைவுகளோடு; படுக்கையில் தளபதி பால்ராச் இருந்த ஒருநாள் பூநகரி தளம் மீதான தவளை நடவடிக்கையை ஆரம்பித்தார் தலைவர்;. போராளிகள் கடலாலும் - தரையாலும் உள்நுளைந்து தளத்தை வீழ்த்த மோதிக் கொண்டிருந்தனர். சண்டையின் போது பல இடங்களில் தடைகள் உடைந்தும்- உடையாமலும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. நிலையில்; தொலைத் தொடர்புக்கருவியில் இடையிடையே தளபதி பால்ராச் அவர்களின் குரலும் வந்து... வந்து போனது.

வைத்தியசாலையில் படுக்கையில் கிடக்கும் தளபதி பால்ராச்; எங்ஙனம் தொலைத் தொடர்புக்கருவியில் உரையாட முடியும்; வைத்தியசாலையில் தொலைத்தொடர்புக் கருவி இல்லையே. கேள்விகள் குழப்பத்தைத் தந்தன. தவளை நடவடிக்கையின் மையக்கட்டளைப் பீடத்தில்; நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவர்; உசாரானார்.

தளபதி பால்ராச் வைத்தியசாலையில் இரகசியமாக ஏற்படுத்திக்கொண்ட தொலைத்தொடர்புக் கருவியினூடாகவே உரையாடுகின்றார்; என்பதைப் புரிந்துகொண்டு; உடனடியாகவே ஒரு போராளியை அங்கு அனுப்பி; தாக்குதல் தொடர்பான களநிலைமையை உடனுக்குடன் தெரியப்படுத்த தான் ஏற்பாடு செய்யலாம் என்றும்; வைத்தியசாலையிலிருந்து கொண்டு தொடர்புக்கருவியில் உரையாடுவது பாதுகாப்பு இல்லையெனவும் கூறித்தான்; அந்த ஓய்வறியாத் தளபதியை ஓய்வெடுக்கச் செய்யவேண்டியிருந்தது. நன்றி: விடுதலைப் புலிகள், 04.07.08




நான் பால்ராஜ் குறூப் என்று சொல்லிக் கொள்வதில் உலகத்தை வென்றுவிட்ட பெருமை

நான் பால்ராஜ் குறூப் என்று சொல்லிக் கொள்வதில் உலகத்தை வென்றுவிட்ட பெருமை
விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 25 வருடங்களாக போர்க்களங்களில் சாதனைகள் படைத்திட்ட ஒரு ஈடு இணையற்ற தலைசிறந்த தளபதியை இயற்கைக்கு பறிகொடுத்துள்ளனர் விடுதலைப்புலிகள்.

சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை விமானப்படையின் தாக்குதலில் தமது அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை இழந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜை இழந்துள்ளனர். மிகக் குறுகிய காலத்துக்குள் இரு பிரிகேடியர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு இழந்துள்ளது. தமிழ்ச்செல்வனின் மறைவு அரசியல் ரீதியிலும் பால்ராஜின் இழப்பு இராணுவ ரீதியிலும் புலிகளுக்கு வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 25 வருடங்களாக போர்முனைகளில் வித்தகம் புரிந்த ஓர் போரியல் விஞ்ஞானியாகவே பால்ராஜ் விளங்கினார். அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் போரியல் வரலாற்றில் மட்டுமன்றி சர்வதேச இராணுவ போரியல் வரலாற்றில் கூட தனது மதிநுட்பமான, தாக்குதல் திட்டங்களை பதிய வைத்த ஓர் அபரிமிதமான திறன் படைத்த இராணுவ நிபுணராகவும் பால்ராஜ் காணப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் 1983 ஆம் ஆண்டு பால்ராஜ் தன்னை இணைத்துக்கொண்ட போது அவருக்கு வயது 18. பாலசேகரம் என்ற இயற் பெயரைக் கொண்டவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட பெயரே பால்ராஜ். 21-11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜின் சிறுபராயம் அவரின் தாயாரான இராசமின் ஊரான வடமராட்சி கரவெட்டியிலே கழிந்தது. ஆனால், பின்னர் தந்தை கந்தையாவின் ஊரான முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்க்கு பால்ராஜின் குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.

அங்கு தனது கல்வியை தொடர்ந்த பால்ராஜ் 1983 இல் கொழும்பில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் கொடூர நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்று வேண்டுமென்ற வேட்கையில் ஆயுதப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ் ஆயுதப் போராட்டக்குழுக்கள் இருந்த போதும் பால்ராஜின் தெரிவு பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பாகவே இருந்தது.

1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பால்ராஜை ஆயுதப் பயிற்சிக்காக விடுதலைப்புலிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 9 ஆவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட பால்ராஜ் தனது அதீத திறமைகள் காரணமாக அணித்தலைவராக பயிற்சிக்கு பொறுப்பானவரினால் நியமிக்கப்பட்டதுடன் புதியவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் பணிக்கப்பட்டார்.

பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பால்ராஜ் வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகளுக்கெதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை பால்ராஜ் நடத்தினார். 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப் படைகளுக்கெதிரான போர் மூண்டிருந்த நிலையில் மணலாற்றில் வைத்து மேஜர் பசீலனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பால்ராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதன் பின்னர் அப்போது மணலாறுப் பகுதியில் தங்கியிருந்த பிரபாகரனை பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் அவர் மரணமடைந்த பின்னர் லெப்டினன்ட் கேணல் நவத்துடனும் செயற்பட்டார். வன்னிக் காட்டில் வைத்து இந்தியப் படைகளை சின்னாபின்னமாக்கி, விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்தியாவும் இந்தியப் படையும் வைத்திருந்த தப்பபிப்பிராயத்தை தகர்த்த நடவடிக்கைகளில் பால்ராஜின் பங்கு அளப்பரியது.

மேஜர் பசீலனின் மறைவுக்கு பின்னர் வன்னி மாவட்ட இராணுவத் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட பால்ராஜ் இந்தியப் படைகளுக்கு வன்னி மண்ணையே புதைகுழியாக்கினார். ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள் விடுதலைப்புலிகளை அழிப்போமென சபதமிட்ட இந்தியப் படைத்தளபதிகள் வன்னி மண்ணில் தமது ஜவான்களை தினமும் பலிகொடுத்தமைக்கு பால்ராஜே காரணமாகவிருந்தார்.

விடுதலைப்புலிகளை அழிக்க வந்த இந்தியப்படைகள் தாம் அழிவடைந்த நிலையில் இந்தியா திரும்பிய பின்னர், தொடங்கிய அடுத்தகட்ட ஈழப்போரில் வன்னியிலுள்ள இலங்கை இராணுவத்தின் முகாம்கள் விடுதலைப்புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன. துல்லியமான தகவல்கள், தெரிவு செய்யப்பட்ட இலக்குகளென பால்ராஜ் மேற்கொண்ட தாக்குதல்கள் இம்மியளவு கூட பிசகியதில்லை.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய மையப் பகுதிகளிலிருந்த இராணுவ முகாம்கள் பால்ராஜ் தலைமையேற்று நடத்திய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. முல்லைத்தீவை விரிவாக்கும் இராணுவத்தின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தி வெற்றிகண்டவர் பால்ராஜ்.

வவுனியாவிலிருந்து படையினர் மேற்கொண்ட "வன்னி விக்கிரம" நடவடிக்கையை முறியடித்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றையும் சுட்டுவீழ்த்தி இராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலையும் வழிநடத்தியர் பால்ராஜ்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் உக்கிரமடைந்த சமரை எதிர்கொள்ள விடுதலைப்புலிகள் சிறப்புப் படையை அமைத்த போது விடுதலைப்புலிகளின் முதலாவது சிறப்புப் படைப் பிரிவான சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முதலாவது விஷேட கட்டளைத் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். முல்லைத்தீவில் ஒரு பிரிகேட் இராணுவ படையணியை முற்றாக அழிக்கும் திறன்பெற்ற விடுதலைப்புலிகள் ஆனையிறவில் ஒரு டிவிசன் படையினரை அழிக்கும் வகையில் திறன் பெற்றதற்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவே காரணமாகவிருந்தது.

எந்தக் களமுனையில் விடுதலைப்புலிகளுக்கு தொய்வு ஏற்பட்டாலும் அங்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் பால்ராஜும் களமிறக்கப்படுவார்கள். திடீரென நடத்தப்படும் சிறப்புத் தாக்குதல்களுக்கும் பால்ராஜும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுமே களமிறக்கப்படுவார்கள்.

1993 ஆம் ஆண்டு பூநகரி தளம் மீதான தவளைப் பாய்ச்சலுக்கு புலிகளின் சிறப்புப் படைகள் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் கிளாலியை நோக்கி "யாழ்தேவி" படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இராணுவத்தின் கிளாலி நோக்கிய யாழ்தேவியை தடம்புரளச் செய்வதற்கு உடனடியாக பால்ராஜும் அவரது படைப்பிரிவுமே களமிறக்கப்பட்டனர். களம் விரைந்த சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவினர் பொட்டல் வெளிகளில் மண்ணுடன் மண்ணாக உருமறைப்பு செய்து கிடந்து, இராணுவம் 10 அடி எல்லைக்குள் வந்த நிலையில் எழுந்து நடத்திய தாக்குதலால் யாழ்தேவி தடம்புரண்டதுடன் இராணுவமும் பேரழிவை சந்தித்து இராணுவ நடவடிக்கையை கைவிட்டு திரும்பியது.

இதன் பின்னர் இடம்பெற்ற புலோப் பளைச் சமரில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவினரின் தாக்குதல்களை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஷெல் ஒன்று மிக அருகாக விழுந்து வெடித்ததில் முழங்கால் பகுதியில் படுகாயமடைந்தார். இத்தாக்குதலின் போது பால்ராஜின் உயிரைக் காப்பதற்காக சில போராளிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இதன் பின்னரே பால்ராஜின் ஒரு கால் சற்று ஊனமடைந்தது.

வன்னியில் மட்டுமன்றி யாழ்.குடாநாட்டில் படையினர் மேற்கொண்ட "முன்னேறிப் பாய்ச்சல்" நடவடிக்கைக்கெதிராக `புலிப் பாய்ச்சல்' நடவடிக்கையை நடத்தி ஒரு `புக்காரா' ரக போர் விமானத்தையும் பால்ராஜ் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சுட்டுவீழ்த்தியது. அதேபோன்று ஆனையிறவு போர் முனையிலும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்காக கப்டன் கலைஞன் என்ற போராளி பால்ராஜால் பாராட்டப்பட்டு பின்னர் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். சிறந்த போராளிகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் பால்ராஜ் பின்னிற்காதவர் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணமாகும். கலைஞன் என்ற இப்போராளி முதலில் பால்ராஜின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராகவே இருந்தார்.

யாழ். குடாநாட்டில் படையினர் நடத்திய `முன்னேறிப் பாய்தல்' நடவடிக்கையின் பின்னர் 40 ஆயிரம் படைகளை பயன்படுத்தி படையினர் மேற்கொண்ட `சூரியக் கதிர்' இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் பால்ராஜ் களமிறக்கப்பட்டார். ஆனால், நில அமைப்புகளையும் போரியல் தந்திரங்களையும் கருத்தில்கொண்டு தமது எதிர் நடவடிக்கையை கைவிட்டு புலிகள் யாழ். குடாநாட்டிலிருந்து பின்வாங்கினர்.

அதன் பின்னர் வன்னியை தலைமையகமாகக் கொண்டு விடுதலைப்புலிகள் நடத்திய ஓயாத அலைகள் 1,2,3 ஊடறுப்பு தாக்குதல்கள், குடாரப்பு தரையிறக்கமென அத்தனை பாரிய படை நடவடிக்கைகளுக்கும் பால்ராஜே தலைமையேற்றார். வெற்றியும் பெற்றார். இதனாலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் `தலைசிறந்த போர்த் தளபதி என்ற வகையில் நான் பால்ராஜை ஆழமாக நேசித்தேன்' என்று கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பால்ராஜ் தலைமையில் நடந்த குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம்.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு போல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார்.



தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல் வடிவம் கொடுக்க தயாரானார்.

ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார்.

குடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட விஷேட படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத் தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.

பால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒவ்வொரு போராளிகளையும் தனது குழந்தைகளாக கருதும் அவர் ஒருவேளை இத் தரையிறக்கம் தோல்விகண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார். குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட விஷேட படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.

ஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல் நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத இலங்கை கடற்படை புலிகளின் விஷேட படையணி தரையிறங்கியவுடன் கடல் வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்க முற்படும். அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறு வழியில்லை.

அதனால் தான் `1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கினார். பிரபாகரனின் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்தே பழக்கப்பட்டுப்போன பால்ராஜ் பிரபாகரனின் இந்தக் கவலையையும் தனது மதிநுட்பத்தால் போக்கினார்.

குடாரப்பு தரையிறக்கம்

26-03-2000 ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது. கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `குருவி'கள் மூலம் இந்த விஷேட படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நிலையெடுத்துக் கொண்டது.

இராணுவத்தின் 54 ஆவது, 53 ஆவது படையணிகளின் இரு பிரிகேட்டுகள் உட்பட 15 ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் ஆனையிறவில் குவிந்திருக்க, அவற்றுக்கு நடுவில் 1200 விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு ஒப்பாக பால்ராஜ் தலைமையில் தரையிறங்கியிருந்தனர்.

இந்தப் படையணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உட்பட இன்னும் பல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 இராணுவத்தினருக்கு சமனாகவே களமிறக்கப்பட்டிருந்தனர்.

பால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப்புலிகளும் குடாரப்பில் தரையிறங்கியிருக்க இன்னும் 3 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 450 விடுதலைப்புலிகள் நீரேரியை கடந்து ஏ9 வீதியை பளைக்கும் முகமாலைக்கும் இடையில் ஊடறுத்தனர்.

தமது கோட்டைக்குள் விடுதலைப்புலிகள் தரையிறங்கிவிட்டதால் பேரதிர்ச்சியடைந்த இராணுவ தலைமைப்பீடம் கொழும்பிலிருந்து பலாலிக்கு வந்து தரையிறங்கியது. அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் மேஜர் ஜெனரல் பலேகல்லவுடன் பலாலி வந்திறங்கினர்.

இதையடுத்து, தரையிறங்கிய விடுதலைப்புலிகள் மீது அரசின் முப்படையும் முழு வேகத் தாக்குதல்களை தொடுத்தன. ஆட்லறிகள், விமானங்கள், கடற்படைக்கப்பல்கள் குண்டுமழை பொழிய பால்ராஜ் தலைமையிலான அணிமீது பாய்ந்தது இராணுவம். இந்த தாக்குதலில் இராணுவமும் தனது விஷேட கொமாண்டோக்களையும் பிரிகேட்களையும் களமிறக்கியது. விடுதலைப்புலிகளின் விஷேட படையணிக்கும் இராணுவத்தின் விஷேட படையணிகளுக்குமிடையில் பெரும் போர் மூண்டது.

பால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய விஷேட படையணியுடன் இலங்கை இராணுவம் 34 நாட்களாக போரிட்டது. இராணுவத்தின் யுத்த டாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24 ரக யுத்தக் ஹெலிகளாலும் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை. மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. விஷேட படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.

தரையிறங்கிய விடுதலைப்புலிகளை அழிக்க முடியாததினால் ஆத்திரமடைந்த இராணுவ உயர்பீடம் தாக்குதலில் ஈடுபட்ட விஷேட படையணியான 53 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் காமினி ஹெட்டியாராச்சி, மற்றும் கேணல் ரொசான் சில்வா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவை நியமித்தது. அவராலும் முடியாது போகவே இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை களத்தில் இறக்கியது. ஆனாலும், இராணுவத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆனையிறவு பெருந் தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக் கொண்டிருக்க. அத்தளத்தின் இதயப்பகுதிக்கும் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பால்ராஜின் படைநகர்த்தல் தொடர்பில் சர்வதேச நாடுகளின் இராணுவ வல்லுநர்களே தமது ஆச்சரியங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத் தரையிறக்கத்தை தற்கொலைக்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்தின் மூலம் வன்னிக்கும் யாழ் குடாநாட்டுக்குமிடையில் பல மைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்து கிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. தன்மானப் போராக இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற ஆனையிறவு சமரில் தமிழினம் வெற்றிக்கொடி நாட்டியது.

ஆனையிறவு தளத்தை கைப்பற்றுவதற்காக முன்னர் விடுதலைப்புலிகள் நடத்திய ஆகாய, கடல், வெளிச்சமரை, கட்டைக்காட்டில் இராணுவத்தின் பெரும் படையணியொன்றை தரையிறக்கியதன் மூலமே இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனைப் படிப்பினையாக வைத்தே தமது அடுத்த முற்றுகையின் போது கட்டைக்காட்டு தரையிறக்கத்துக்கு பதிலடியாக குடாரப்பு தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென திட்டம் வகுத்தவர் பால்ராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே முத்தாய்ப் பாய் அமைந்ததுடன் அது ஒரு புதிய போரியல் வரலாற்றினையும் ஏற்படுத்தியது.

இது மட்டுமன்றி 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படைமுகாம்கள் தாக்கியழிப்பு, 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாய, கடல், வெளிச்சமர், 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டிமலை படைமுகாம் தகர்ப்பு, அதே ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூநகரி இராணுவ முகாம் தகர்ப்பு, யாழ்தேவி படை நடவடிக்கை முறியடிப்பு.

1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிப்பாய்ச்சல், 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 1) முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்ப்பு, 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பரந்தன் ஆட்லறி பீரங்கி தளம் மீதான ஊடறுப்பு சமர் அதே ஆண்டின் பெப்ரவரி மற்றும் செப்டெம்பரில் நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 2) கிளிநொச்சி தளம் தகர்ப்பு. 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட (ஓயாத அலைகள் - 3). 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு, கூட்டுப்படைத்தளம் தகர்ப்பு மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு என்பன பால்ராஜ் தலைமையேற்று நடத்திய முக்கிய சமர்களாகும்.

பால்ராஜின் ஒவ்வொரு தாக்குதல்களும் விடுதலைப்புலிகளை இராணுவ வலிமையில் முன்நோக்கி நகர்த்தியது. பால்ராஜ் தலைமையில் இடம்பெற்ற மண்கிண்டிமலைத் தாக்குதல் விடுதலைப்புலிகளுக்கு முதன்முதலில் 81 மி.மீ. ரக பீரங்கியை பெற்றுக்கொடுத்தது. பூநகரிச் சமர் யுத்த டாங்கியையும் கடற்படைப் படகுகளையும் பெற்றுக் கொடுத்தது. முல்லைத்தீவுச் சமர் 122 மி.மீ. ரக பீரங்கிகளை பெற்றுக் கொடுத்ததுடன் இராணுவத்தின் 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிகேட்டை முற்று முழுதாக அழித்தது.

போரியல் நடவடிக்கைகளில் மட்டுமன்றி மனிதநேய நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தனித்துவமானவர். இலங்கை அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத்த காலத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் தங்கியிருந்த பால்ராஜ் அங்கு ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தில் அகப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால், அதன் பின்னர் அங்கு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடனும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் பல மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்தார்.

இதன் பின்னர் வன்னி திரும்பிய பால்ராஜ் போராளிகளுக்கு போரியல் பயிற்சிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பால்ராஜினால் வளர்த்தெடுக்கப்பட்ட பலர் இன்று தளபதிகளாக உயர்ந்து நிற்கின்றனர். களங்களில் பலியாகிய போராளிகள் கூட சாதனைகள் புரிந்தே சரித்திரமாகியுள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு போராளியும் 10 படையினருக்கு சமமாகவே பால்ராஜால் வளர்த்தெடுக்கப்பட்டனர்.

பால்ராஜின் படைப்பிரிவில் இணைவதற்காக தம்மை வருத்திக் கொண்ட போராளிகள் பலருள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் சேர வேண்டுமானால் கடின பயிற்சி முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் தான் பால்ராஜ் படைப்பிரிவில் இணைய முடியும் என்பதால் அப்பயிற்சிகளில் திறமை காட்ட போராளிகள் ஒவ்வொருவரும் படாதபாடுபடுவார்கள். ்நான் பால்ராஜ் குறூப்ீ என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு போராளிக்கும் உலகத்தை வென்றுவிட்ட பெருமையிருக்கும்.

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக பால்ராஜ் முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பெடுத்த பின்னர் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக லெப். கேணல் கில்மனும், அதன் பின்னர் சுசீலனும் இருந்தனர். தற்போது விஷேட தளபதியாக கோபித் உள்ளார்.

போர்நிறுத்த காலத்தில் தலைசிறந்த போராளிகளை உருவாக்கும் பணியிலீடுபட்டிருந்த பால்ராஜ் இருதய நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கடல்புலிகளை சேர்ந்த லெப். கேணல் வரதா அல்லது ஆதி என்றழைக்கப்படும் போராளிக்கும் பால்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணமே செய்துகொள்வதில்லையென்ற முடிவிலிருந்த பால்ராஜ் தலைவரினதும் சக தளபதிகளினதும் வற்புறுத்தலுக்கமையவே திருமணம் செய்து கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலையில் சில நடவடிக்கைகளுக்காக தங்கியிருந்த போது பாம்பு கடித்ததில் பால்ராஜின் மனைவி லெப். கேணல் வரதா உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவுத் துயர் ஒருபுறமும் இருதய நோயின் தாக்கம் மறுபுறமும் அழுத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது படை நடவடிக்கைகளிலும் போராளிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அண்மைக் காலமாக அவரின் நடவடிக்கைகள் மன்னார், மணலாறு களமுனைகளிலேயே அதிகமாகவிருந்தது.

அதீத உழைப்பு கடின முயற்சிகளால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட பால்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பாத பால்ராஜ் கள நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரம் காட்டினார். இவ்வாறான நிலையிலேயே கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் பால்ராஜ் மரணமானார்