செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!

ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!

நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!

கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!

நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!

போர்தொடுக்க நீ வரவேண்டும்

வரலாறு படைத்த பெரும்தலைவா
நீ வழிசொல்ல நாம் நடந்தோம்
திசைகெட்டு நிற்கின்றோம் இன்று
நீசென்ற திசை தெரியாது.

திக்கெட்டும் சிங்களம் இங்கு
சிதறுண்டு கிடக்குது தமிழினம்.
புலியாகப்பாய்ந்த நாம் இன்று
புலம்பெயர்ந்து கிடக்கின்றோம் முகாமில்.

என்றைக்கோ ஓர்நாள்
ஓடி நீ வருவாயென்று
உள்மனதில் ஓர்மத்தோடு
உறுதியாக இருக்கின்றோம்.

புரட்சி செய்த மறவர் நாம்
மடியுண்டு இருக்கின்றோம் இங்கு
மனம் திறக்க யாருமில்லை
மானம் கெட்டு மாழ்கின்றோம்.

எமை வேடிக்கை பார்க்கின்றார்கள்
எமக்கு வேதனையைத் தூண்டுகின்றது.
வேதமொழி பேசுவார்கள் வெள்ளையர்கள்
வாளெடுத்து போர்தொடுக்க நீ வருகையில்.

போரெடுத்து பகைமுடித்து
ஈழமதை நாமெடுத்து
இயல்பாக மானத்தோடு நாம் வாழ
வீறுகொண்டு நீ விரைவாக வரவேண்டு

பெண்புலி போராளிகள்....

உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.

ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.

மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.

கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?

பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது

தமிழீழம் மீட்போம் வாருங்கள்

வாழ்க்கைச் சக்கரம் என்றும்
போல் சுழன்றோடிக்
கொண்டிருந்தது.
சிங்களம் மட்டும்
தன்சிந்தனையை மாற்றத்
தொடங்கிய நேரமும்.

இலங்கையில் தமிழர்கள்
வந்தோரை வரவேற்க்கும்
பண்போடு தான் மிக்கமனம்
நிறைந்த மகிழ்ச்சியோடு.

ஆடிப்பாடி மிக்க மகிழ்வோடு
வாழ்ந்து கொண்டிருக்கையில்தான்.
வந்தவன்குடி நித்தம் வாழ்ந்தவன்
குடிஎங்கள் தமிழினத்தின் மீது-

தங்கள் இனவெறியை தீர்க்க
முன்பே அன்று திட்டம்தீட்டிய
திட்டப்படி. சரியான தருணம் பார்த்து
சிங்களத்து இனவெறியைத் தீர்த்தது.

இதைத்தான் இனவெறிச் சிங்களம்
தக்கதருணம் தீட்டிய திட்டம்.
எண்பத்து மூன்றில் கொலையில்
பூத்தது கறுப்பாடிக் கலவரம்.

அன்று தொட்டு இன்றுவரை உலகம்
தமிழனை அழியுங்கள் என்றுதான்.
சிங்களத்திற்க்கு அனுமதி கொடுக்குது
இதுக்குத்தான் உலகத் தமிழர் நாங்கள்.

ஒன்றுபட்டு எம்மினத்தின் மானம் காக்க
எங்கள் தலைவன் கரத்தை பலப்படுத்தி
சிங்களவன் கொட்டம் அழித்து-தமிழர்
எங்கள் தமிழீழம் மீட்போம் வாருங்கள்.

பாயும் ஊகம்


கணப்பொழுது அடிமனதிற்கருத்துடனே எடுத்திடுவாய்நிணரத்தம் பாயும்பூமிநித்தம் நித்தம் சாகும் மக்கள்பணம் பதவி பார்த்திடாமல்பைந்தமிழைக் காத்திடவேகுணக்குன்றாம் வீரன் நீயும்குதித்தோடி வந்திடுவாய்விளக்கற்ற இரவும்விடியலற்ற கனவும்வீறுகொண்ட மைந்தன் நீயும்விடியல்தன்னை நோக்கித்தானேவகுத்ததொரு பாதையிலேவெற்றி நடை போடக்கண்டுவெந்து நொந்தார் வீணரவர்விழுப்புண்பெற்றாய் வீரன் நீயும்அறுவடை செய்யும் தம்பின் களத்தில்அரசியற் சாணக்கிய தம்பிமார்கள்பொறுமையைத்தான் இளக்காத பொற்கொடிகள்போர்தனிலே பாய்ந்து சென்று களமாடச்சிறுமையே உருவான சிறுமதியோர்சிதறுண்டோடிச் சின்னாபின்னம்குறுநிலத்தின் மன்னனைபோற் தம்பிகோலோச்சும் காட்சி என்னே!!!