வியாழன், 8 ஏப்ரல், 2010

ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி

ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி



புலிகளின் அணியில் எவ்வளவு பேர் தப்பி காட்டிற்குள் சென்றனர். புலிகளின் முதன்மைத் தளங்கள், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பன குறித்து இவரிடம் கடும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. சந்தர்ப்ப வசத்தால் எதிரியின் கைகளில் கடாபி வீழ்ந்தாலும் அவர் வீரமும், ஆயுதம் முடிந்தபின்னரும் இலங்கை இராணுவத்துடன் கைகலப்பு யுத்தத்தில் ஈடுபட்ட மனத்தைரியமும், போராட்ட வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக