திங்கள், 14 ஜூன், 2010

முள்ளிவாய்க்காலிலிருந்து...


ஒரு நூறு தெரு
தள்ளி தான்
கேட்கிறதந்த சப்தம்;

கண்ணீரால் யாரையோ
கூப்பாடு போட்டழைக்கும்
ஒரு ஓலம் அது;
சுலபமாய் சொன்னால்
மரணம் எனலாம்,

வாழ்பவன்
கற்றும் தெளியாத
அல்லது -
கற்காத பாடம்.

மரணம் என்றாலே
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு
மரணமின்றியே இயங்குகிறது
நிறைய சதைகள்;

ஆம், ஜாதி பேசி
மதம் பேசி
இனம் பேசி
ஏற்றத் தாழ்வு பேசி
யாரை கொன்றேனும்
சுயநலம் காக்கும் சதைகளாக தானே
வாழ்கிறோமென சொன்னால்
எத்தனை பேர் ஏற்பீர்களோ
எத்தனை பேர் மறுப்பீர்களோ;
மறுக்க உங்களுக்கு
சுதந்திரமுண்டு -
ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்
சதைகளே;
சதை குவிந்த ஒரு பிண்டமே;
வேண்டுமெனில்
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

டேய்........, யாரையடா
பிணமென்றாய்' என
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..

என்னை விட வேகமாக ஓடி
முட்கம்பிகளை தாண்டி
முள்ளிவைக்காளின் ஒரு
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக