திங்கள், 19 ஜூலை, 2010

தமிழீழ வான்புலிகள் நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் (கேணல் சங்கர்) பொறுப்பில் ஆரம்பமான வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முக்கிய இடங்களில் இந்தியாவின் இந்திரா நவீன ரக ராடர்களைப் பொருத்தியுள்ள போதிலும், அவற்றின் திரைகளுக்கு வான்புலிகளின் விமானம் தெரியாமல் மர்மமாகப் பறந்து சென்று இலக்குத் தவறாமல் குண்டு வீசுவது தான் விந்தை.


"காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்" எனும் சுலோகத்தைத் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்.

1. 26 மார்ச் 2007 – கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல்
2. 24 ஏப்ரல் 2007 – பலாலி இராணுவத்தளம் மீதான குண்டுவீச்சு
3. 29 ஏப்ரல் 2007 – கொலன்னாவ எண்ணெய் சேகரிப்பு நிலையம் மீதான தாக்குதல்
4. 22 ஒக்டோபர் 2007 – அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதல்
5. 27 ஏப்ரல் 2008 – வெலிஓயா படைமுன்னரங்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்
6. 26 ஓகஸ்ட் 2008 – திருக்கோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்
7. 9 செப்டம்பர் 2008 – வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல்
8. 28 ஒக்டோபர் 2008 – மன்னார் தள்ளாடி இராணுவத்தலைமையகம் மீதான தாக்குதல்
9. 29 ஒக்டோபர் 2008 – கொழும்பு கனனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தாக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக