திங்கள், 19 ஜூலை, 2010

23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர்
[புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]



தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.


அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்:

விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர்.

மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் உலகின் மிகப் பயங்கரமான கெரில்லா கடற்படையாக இருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு அவர்கள் பலரை இணைத்து வருகின்றனர்.

இஸ்ரேலியத் தயாரிப்பான டோராப் படகைக் கொண்டு பெண் கடற்புலியொருவர் அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தார்.

பூகோள ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பானது கடலுடன் தொடர்புபட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எண்ணுகிறார்.

தங்களின் கடற்படை பலம் வாய்ந்ததாக இருந்தாலே தங்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் தரைப் பகுதியினைப் பாதுகாக்க முடியும் என்றும் எதிரியை விரட்டியடிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

விடுதலைப் புலிகளின் கடற்படையானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருவதற்கு இதுவே காரணம்.

user posted image
நன்றி ஈழவிசன்

பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்கள் பலருக்கும் கடலுடன் வரலாற்று ரீதியான பிணைப்பும் உள்ளது.

விமான ஓடுபாதையை விட பிரபாகரனின் மனதை நெருங்கியது கடலாகும்.

விடுதலைப் புலிகளிடம் தொடக்கத்தில் சில மீன்பிடி இழுவைப் படகுகளும் கண்ணாடியிழைப் படகுகளுமே இருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே மக்களையும் பொருட்களையும் வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு கொண்டு சென்று கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆயுதக்கப்பல்கள் மட்டுமல்லாது சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர். கடந்த சில வருடங்களில் அவர்கள் துரித வளர்ச்சியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக விடுதலைப் புலிகளின் கே.பி என்பவர் உள்ளார். கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்டுவரப்படுமாயின் அதன் செயற்பாடுகளை சூசை கவனிக்கிறார்.

கே.பி. மற்றும் சூசை ஆகியோரின் செயற்பாட்டினால் இன்று விடுதலைப் புலிகளின் கடற்படையானது போராளிகள், மாலுமிகள், கப்பற் பொறியியலாளர்கள் மற்றும் கப்டன்கள் என வளர்ச்சி கண்டுள்ளது.

கடற்புலிகளின் பொறுப்பாளராக 1991 ஆம் ஆண்டு சூசை நியமிக்கப்பட்டார். இவரின் செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பக்கபலமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக யுத்தத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயத்திற்காக சூசைக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கவும் விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் பலமானது 10 முதல் 15 வரையாக உள்ளது என்று டொக்டர் விஜய் சக்குஜா கடந் ஆண்டு மதிப்பீடு செய்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் செயற்பாடுகள் சிங்கப்பூரிலிருந்து சோழன் கப்பல் வாங்கப்பட்டதையடுத்தும் கேரளாவில் கடல்புறா கப்பல் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும் 1984 ஆம் ஆண்டு தொடங்கின.

அவர்களிடம் தற்போது நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய 11 கப்பல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக தென்னாப்பிரிக்காவிடமிருந்த�
� கொள்வனவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலுடன் அவர்களின் கப்பல்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது என்று புலனாய்வுப்பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கப்பல்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தன. சீன ஆயுதங்களை எடுத்து வருகையில் பல்லவன் கப்பல் சென்னையில் வைத்துக் கைப்பற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு சன்பேர்ட் கப்பல் மலேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டது. ஹொரிசன் கப்பல் 1996 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

அண்மையில் கப்பலைச் சோதனையிட அனுமதியளிக்காமையினால் சோரின் மற்றும் கொய்மார் ஆகிய கப்பல்கள் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானது.

மரம், அரிசி, உரம் போன்றவற்றைக் கொண்டு செல்வதில் இவர்களின் கப்பல்கள் ஈடுபடுகின்றன. சில கப்பல்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுகிறது.

உக்ரெயினிலிருந்து ரி.என்.ரி, ஆர்.டி.எக்சும் கம்போடியாவிலிருந்து சாம்- 7 உம் கப்பல்களில் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

பல படகுகள் ஒன்றாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று திடீரென கடற்படையின் ராடர் இயந்திரத்தில் தெரியத்தக்க வகையில் வந்து உடனடியாக தாக்குதலை நடத்திய பின்னர் ஒவ்வொன்றும் திசைக்கொன்றாக செல்வதால் எந்த படகிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை அடையாளம் காண்பது கடற்படையினருக்கு சிரமமாக உள்ளது.

இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறைகளில் ஒன்றாக உள்ளது. அவர்களின் டோராப் படகுகளும் ஏனைய படகுகளும் தொழில்நுட்ப ரீதியில் அதிகம் முன்னேறியவையாக உள்ளன.

15 வினாடிகளுக்குள் புலிகளின் வெடிபொருள் நிரப்பிய படகுகள் வந்து தாக்குதலை நடத்துகின்றன. விடுதலைப் புலிகள் தங்கள் படகுகளில் குறைந்தபட்சம் இரண்டு 80 குதிரைவேக என்ஜின்களைப் பொருத்தியுள்ளனர்.

user posted image
நன்றி ஈழவிசன்


1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பல்வேறு தாக்குதல்களினால் கடற்படையின் ரோந்துச் சேவைகள் வலுவிழந்திருந்தன.

இஸ்ரேலிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு விடுதலைப் புலிகள் டோரா மற்றும் சுப்பர் டோராப் படகுகள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

1990 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது கடற்படையின் எடிதார கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது.

ஓராண்டிற்குப் பின்னர் இதேபோன்றதொரு தாக்குதலுக்கு கடற்படையின் அபித கப்பல் இலக்கானது.

யுத்த நிறுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையை அமைத்துள்ளமை பற்றிக் கவனம் செலுத்துபவர்கள் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை.

எனினும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையை ஓரிரு நிமிடங்களில் குண்டுவீசித் தகர்த்துவிடலாம் என்றும் அவர்களின் விமான ஓடுபாதை குறித்த விவாதத்திற்கு பதிலளிக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்த நிறுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கடற்பலமானது தற்போது அதிகரித்து வருகின்றது. கண்காணிப்புக்குழுவின் தலைவராக இருந்த ரிக்வே டெலெப்சன் விடுதலைப் புலிகளுக்கு சார்ப்பானவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

விடுதலைப் புலிகளின் கடற்பலத்தை கண்கூடாக அறிந்திருந்த அவரால் தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறும் போது கூட அதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது போனது. சாலை மற்றும் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கடற்படை தங்களின் செயற்பாடுகளை பலம் மிக்கதாகக் கொண்டு நடத்துகிறது.

இது தனது எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துச் செல்லவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் பார்வையிலிருந்து கப்பல்களையும் அப்புறப்படுத்துகிறது. ஒரு கப்பலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வது இலகுவான முறையாக இருந்தாலும் இதற்கென அதிக நேரம் வேலை செய்தாக வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் அனேகமாக கடும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு பூ யுவான் யா - 225 எனும் பெயரைக் கொண்ட சீன மீன்பிடி இழுவைப் படகின் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பயணம் செய்த 26 பேரில் 9 பேரே காப்பாற்றப்பட்டனர். பூ யுவான் யா - 225 வை கடற்படையினரே பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று விடுதலைப்புலிகள் நம்பினர்.

கடற்படையினரைப் போன்று விடுதலைப் புலிகள் தங்களின் உறுப்பினர்களை கடற்கரையோரம் நிறுத்தி வைப்பதில்லை. அதேபோன்று அவர்களை அதிக இடைவெளியிலும் நிறுத்துவதில்லை. அப்படிச் செய்தால் அவர்களால் விரைவில் தாக்குதல்களுக்கு ஒன்று சேர்வது இயலாமல் போகும்.

கடற்புலிகளிடம் அவர்களின் புலனாய்வுத்துறையும் உள்ளது. அவர்களின் சுழியோடிகளினால் கடற்படை முகாம்கள் பற்றியத் தகவல்களை அறியமுடியுமாக உள்ளதுடன் மூழ்கும் கடற்படைக் கப்பலிலிருந்து தேவையானவற்றைப் பெற முடியுமாகவும் உள்ளது. அவர்களின் நீர்மூழ்கி ஸ்கூட்டர்கள் பலவகையிலும் அவர்களுக்கு உதவுகிறது. கடற்புலிகளின் கப்பல்கள் ராடார் வசதிகள் இரவு நேரங்களில் பயணிப்பதற்கான வசதிகளுடன் தரையுடன் சம்பந்தப்பட்டதான ராடார் வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆட்களை ஏற்றியிறக்கும் நடவடிக்கைகளிலும் கடற்புலிகள் பெரும் பணியாற்றுகின்றனர். சிறிலங்கா படையினரால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாக்கப்படுகையில் அவர்கள் கரையோரத்திற்கு வரும்போது கடற்புலி உறுப்பினர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

2000 ஆம் ஆண்டு கடற்புலிகள் திருமலை கடற்படை முகாமிற்குள் ஊடுருவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். கடந்த இரு தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் பெருமளவு உயிரிழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவரின் சிந்தனைகள்

இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன் உறுதிக்கு எதிரி மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சமாதானத்தை நான் ஆத்ம பூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக சுதந்திரமாக கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன்;. இலைமறைகாயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள்கொடுத்தவரும; எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
குட்டக்குட்டக் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலை நிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையேசாரும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும். வரலாற்று புறநிலை தோன்றியிருக்கின்றது.

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"


தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!

ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…

“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.

ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.

இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

தமிழில் ராணுவக் கல்வி!

தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.

Image

இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.

இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…

Image

இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.

Image

புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.

Image

வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:

[img width="200" height="200"]http://www.eelamhomeland.com/forum/postsimage/MM/44d.jpg[/img]

தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.

இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.

அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.

தமிழீழ வான்புலிகள் நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் (கேணல் சங்கர்) பொறுப்பில் ஆரம்பமான வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முக்கிய இடங்களில் இந்தியாவின் இந்திரா நவீன ரக ராடர்களைப் பொருத்தியுள்ள போதிலும், அவற்றின் திரைகளுக்கு வான்புலிகளின் விமானம் தெரியாமல் மர்மமாகப் பறந்து சென்று இலக்குத் தவறாமல் குண்டு வீசுவது தான் விந்தை.


"காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்" எனும் சுலோகத்தைத் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்.

1. 26 மார்ச் 2007 – கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல்
2. 24 ஏப்ரல் 2007 – பலாலி இராணுவத்தளம் மீதான குண்டுவீச்சு
3. 29 ஏப்ரல் 2007 – கொலன்னாவ எண்ணெய் சேகரிப்பு நிலையம் மீதான தாக்குதல்
4. 22 ஒக்டோபர் 2007 – அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதல்
5. 27 ஏப்ரல் 2008 – வெலிஓயா படைமுன்னரங்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்
6. 26 ஓகஸ்ட் 2008 – திருக்கோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்
7. 9 செப்டம்பர் 2008 – வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல்
8. 28 ஒக்டோபர் 2008 – மன்னார் தள்ளாடி இராணுவத்தலைமையகம் மீதான தாக்குதல்
9. 29 ஒக்டோபர் 2008 – கொழும்பு கனனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தாக்குதல்

பிரபாகரன் படை - அதிரடித் தளபதிகள் அறிமுகம்
ஆனந்த விகடன் அசத்தல் ரிப்போர்ட்

prabaharan0001.jpg

லங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில், அப்பாவித் தமிழர்கள் அல்லறுகிறார்கள் என்கிற துன்பச் செய்தி நம் இதயத்தை பிளக்கும நேரத்தில், இலங்கை ராணுவத்தை எதிர்த்து வரும் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது கடந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ‘பிரபாகரன் படை’ என்கிற அலசல் கட்டுரை! நீங்களும் படித்து அறியுங்கள்…

1975, ஜூலை 27.

பிரபாகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டைத் துப்பிய நாள். யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவைக் சுட்டுக் கொன்றது அது!

16 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவரின் வாழக்கை, இப்போது காடுகளுக்குள், பதுங்கு குழிகளுக்குள், பிரபாகரனையும் அவரது உளவுப் படைத் தளபதி பொட்டு அம்மனையும் கைது செய்யும் நாளில்தான் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த வாரத்தில் கர்ஜனை செய்துள்ளார் மகிந்தா ராஜபக்ஷே. அவரது ராணுவத்துக்குத் கடந்த 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் படை. முன்று நாட்களில் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கிவிடுவோம்., 30 நாட்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்று ராணுவம் சொன்னாலும் புலிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் மிரட்டுகின்றன!

தன்னிடம் ராணுவப் பயிற்சி பெற்ற மாத்தையா, கிட்டு, விக்டர், பிலேந்திரன், குமரப்பா ஆகிய 5 பேரைத் தன் தளபதிகளாக பிரபாகரன் அறிவித்ததுதான் இந்த இயக்கத்தின் முதல் அத்தியாயம். அரசியல் பிரிவும் ஆரம்பிக்கப்பட்து. போராளிகள் திரள ஆரம்பித்தார்க்ள. ஆனால், பணமும் ஆயுதமும் இல்லை. கப்பல் கம்பெனி ஆரம்பித்து கடல் வர்த்தகத்தில் இறங்கினார் பிரபாகரன். அடுத்த சில ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல் கம்பெனிகள் உருவாகின. வர்த்தம் செய்தது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்து வரவும் இந்தக் கப்பல்கள் பயன்பட்டன.

இவர்களுக்கான ஆயுத பரிவர்த்தனைகள் அனைத்தையும் இன்று வரை செய்து கொடுப்பதாகச் சொல்லப்படுபவர் கே.பி. என்ற குமரன் பத்மநாபன். ஹாங்காங்கில் கைது, தாய்லாந்தில் கைது என்று செய்திகள் வருமே தவிர, இன்று வரை, இண்டர்போல் உட்பட யார் கையிலும் சிக்காதவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் படித்தவர், தெற்காசியாவில் இருக்கிறார் என்று மையமாகச் சொல்வார்கள். ஆயுத சப்ளையில் புலிகள் இயக்கம் தவிர்த்து, இந்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதல் பலத்தைக் கொடுத்தன. வட கிழக்கு மாகாணங்கள் என்று சொல்லப்படும் தமிழர் பகுதிக்குள் மொத்தமாக சிங்கள ராணுவத்தைத் தடுக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்களாக வலம் வந்தார்க்ள.

இன்றைய நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகள் புலிகள் வசம் உள்ளன. இங்கு அரசாங்கமே இவர்கள் கையில். கல்வி, மருத்துவம், காவல், நிதி ஆகிய முக்கியமான துறைகளின் மூலமாக இப்பகுதியில் நிர்வாகம்செய்கிறார்கள். மூன்று அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. சட்டக்கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வரதட்சினை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டனை. சாதிவிட்டுச் சாதி கல்யாணம் செய்வதை தடுத்தால் தண்டனை. பள்ளிகளில் புதிய பாடத் திட்டங்கள். அனைத்துமே தமிழ் வழியில்தான் படிப்பு. ஆங்கிலமும் ஒரு மொழியாகக் கற்றுத் தரப்படுகிறது. மருத்துவம் உள்பட அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டுவந்துவிட்டார்கள். வேளாண்மைப் பண்ணைகளின் மூலம் விவசாயம் நடக்கிறது. தமிழீழ வைப்பகம் என்ற வங்கி கிளிநொச்சியில் இருக்கிறது. இதற்குப் பல்வேறு இடங்களில் 12 கிளைகள் உள்ளன. ஆதரவற்ற பிள்ளைகள் வாழ செஞ்சோலை என்பது வரை தங்கள் பகுதியில் தனி அரசாங்கத்தை அமைத்து அவற்றை தளபதிகளின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த நிர்வாகத்துக்கும் புலிகளின் ராணுவ அமைப்புக்கும் பெரிய தொடர்புகள் எதுவும் இருக்காது. தலைவர், துணைத் தலைவர், பிரிகேடியர், சிறப்பு தளபதி, தளபதி, கர்னல், லெஃப்டினென்ட், இரண்டாம் லெஃப்டினென்ட், போராளி எனப் பதவி அடுக்குகள் கொண்டது புலிகள் அமைப்பு.

தலைவர் பிரபாகரன். துணைத் தலைவராக மாத்தையா இருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பதவியில் யாரும் அமர்த்தப்படவில்லை.

பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இன்று இருப்பவர் அரசியல் துறையைத் கவனிக்கும் நடேசன். இலங்கை அரசில் போலீஸ்காரராக இருந்தவர். அப்படியே இடம் மாறி, தமிழீழ காவல் துறையை உருவாக்கியவர். இவர் மனைவி சிங்களப் பெண்ணாம். தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பிறகு அரசியல் விவகாரங்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்த முக்கியத்துவம் பொட்டு அம்மனுக்கு. புலிகளின் புலானய்வுப் படை இவர் கையில். ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனுடன் தேடப்படும் நபர் சண்முகநாதன். சிவசங்கரன் என்பது இவர் பெயர்.

கடற்புலிகளின் தளபதி சூசை, காட்டுக்குள் பிரபாகரன் நினைப்பதைச் கடலுக்குள் சாதிக்கும் சாமார்த்தியச்சாலி. கல்விக் கழகத்தைக் கவனிப்பவர் இளங்குமரன். இவரை பேபி சுப்பிரமணியம் என்றால் தமிழ்நாட்டுக்குத் தெரியும். தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர். சமய நூலாக்கப் பிரிவு என்ற அணி, இதுவரை உலக நாடுகளில் உள்ள போர்த் தந்திரங்கள் ஆயுத வரவுகளைப் படித்து புலிகளுக்குப் பாடம் நடத்துகிறது. இது யோகி என்பவரின் பொறுப்பு. நிதித்துறை, தமிழேந்தி என்பவர் வசம்.

பெண் புலிகளின் ராணுவப் பிரிவை விதாஷா, அரசியல் பிரிவை தமிழினி ஆகியோர் நடத்துகின்றனர். இவர்களை அடுத்துதான் மற்ற தளபதிகள் அணி வகுக்கிறார்கள்.

அடுத்த முக்கியத்துவம் பிரசார அணிக்கு. அரசியல் ஆய்வுகளை பாலகுமார் (பழைய ஈராஸ் தலைவர்), ம.திருநாவுக்கரசு ஆகியோர் கவனிக்கிறார்கள். புலிகளுக்கு ஆதரவாக வரும் பத்திரிகைகள், இணையதளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் பட்டியல் கணக்கில்லாதது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1983ல் இருநது இன்று வரை வரும் ஏடு விடுதலைப் புலிகள். இதன் ஆசிரியராக இப்போது ரவி என்பவர் இருக்கிறார். ஈழ நாதம் நாளிதழ் கிளிநொச்சியில் இருந்து வருகிறது. எரிமலை கலை இலக்கிய மாத இதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் சிங்களத்திலும் ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியை தமிழன்பன் என்பவர் கவனிக்கிறார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் ஒலிபரப்பாகிறது. சிறு சம்பவம் நடந்தாலும் அதை மறு நிமிடமே இவாகள் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு பரப்புரைப் பிரிவு என்று பெயர்.

புலிகள் சொல்லும் கணக்குப்படி, காடுகளுக்குள் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதிகபட்சம் ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்கிறது சிங்கள உளவுத்துறை.

சீருடை அணிக்கு போராளிகள் நீங்கலாக மக்கள் படை அமைப்பு சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தினமும் காலையில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டை, கம்பு வைத்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கையில் விவசாயக் கருவியும், இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்துத்தான் வியட்நாம் புரட்சி நடந்தது என்ற ஐடியா. இது தங்களைத் தாங்களே பாதுகாக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது புலிகள் கட்டளை.

தென் இலங்கையையும் தமிழீழப் பகுதியையும் பிரிக்கும் நெடுஞ்சாலையில் அந்தப்பக்கம் சிங்கள ராணுவத்தின் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட படையும் இந்த பக்கம் புலிகள் தரப்பும் நிற்கின்றன. கடைநிலைப் போராளிகள்தான் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களைத் தாண்டி 20க்கும் மேற்பட்ட சிறப்புப் படையணிகள் காத்திருக்கின்றன. போரில் இங்கு சார்லஸ் ஆண்டனி, இம்ரான் பாண்டியன், மாருதி விக்டர், கிட்டு ஆகியோர் பெயரில் இந்தப் படை அணிகளை பிரபாகரன் உருவாக்கியுள்ளார். பெண் புலிகளின் படைகள் மாலதி, அன்பரசி ஆகிய பெயர்களில் உள்ளன. இவை தவிர விமான எதிர்ப்புப் பீரங்கி, மோட்டார், கவச வாகனம் ஆகிய தனிப்பிரிவுகளும் உள்ளன.

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க போர்க் கருவி தொழிற்சாலையும், வெடிபொருள், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், ராணுவ விஞ்ஞானக் கல்லூரியும் இருக்கின்றன.

ஆரம்பத்தில் சிங்கள ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது கடற்புலிகள். கடந்த இரண்டாண்டுகளாக வான்புலிகள் வெலவெலக்கவைத்து வருகிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வான வேடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்து இன்று வரை 8 இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் அனுராதபுரம், வன்னியில் நடத்திய தாக்குதல்களில்தான் உயிரிழப்புகள் அதிகம். சமீபத்தில் சிங்கள ராணுவ தளம், அனல் மின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்திய பிறகுதான் இரண்டு விமானங்கள் அவர்களிடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாம். புலிகளுக்கு பிரபாகரன் விருதுகள் வழங்கிய நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இது போன்ற சில நிகழ்ச்சிகளில்தான் பிரபாகரனை முக்கியத் தளபதிகளால் கூடப் பார்க்க முடியும்.

தமிழ்ச்செல்வன் மரணத்துக்குப் பின்னால், பிரபாகரனின் இடத்தைக் கண்டுபிடிக்க பகீரத முயற்சிகள் நிகழ்ந்தன. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி என்ற இடத்தில் திடீர் தாக்குதலை சிங்கள் ராணுவம் நடத்தியது. இங்குதான் பிரபாரகன் வசிக்கிறார். 40 அடி கொண்ட பதுங்கு குழியில் அவர் வீடு இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போவதாக இருந்தால், இந்த வீட்டில் இருந்து செல்லும் சுரங்கப் பாதை வழியாகத்தான் செல்கிறார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் சொல்லி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுப் பகுதிக்குள் வந்து பிரபாகரன் பார்த்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன. மேலும், அவர் கலந்துகொள்ளும் விழாக்கள் அனைத்தும் இரவில்தான் நடக்கிறதாம். அவரைப் பாதுகாப்பதுதான் புலனாய்வுத்துறையின் முக்கியமான வேலை. அவர் ஒரு முகாமுக்கு வருகிறார் என்றால் அங்கு பிரபாகரனிடம் மட்டும்தான் துப்பாக்கி இருக்கும். அவரது பாதுகாப்பு வீரர்கள்கூட வெளியில்தான் நிறுத்திவைக்கப்படுவார்கள்.

பிரபாகரனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் சார்லஸ் ஆன்டனிக்கு 22 வயது. அவரும் புலிப்படையில் இருக்கிறார். மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகத் தகவல். அடுத்த மகன் பாலச்சந்திரன் அவருடனே இருக்கிறான். பல நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து கடைசியில் கணவருடனே வந்து காட்டில் வாழ்கிறார் மனைவி மதிவதனி.

வரும் 26ம் தேதி பிரபாகரனின் 54வது பிறந்த நாள். அதற்கு மறுநாள் புலிகள் ஆண்டுதோறும் கொண்டாடும் மாவீரர் நாள். அன்று அவர் தமிழீழ மக்களுக்காக வானொலியில் பேசுவார். புலிகளின் அடுத்தகட்டம் என்ன என்று இந்தப் பேச்சில் சொல்லப்படும்.

ரணமாகிப் போன தமிழர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேவும் பிரபாகரன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கிறார்.


புதன், 7 ஜூலை, 2010