செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!

ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!

நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!

கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!

நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!

போர்தொடுக்க நீ வரவேண்டும்

வரலாறு படைத்த பெரும்தலைவா
நீ வழிசொல்ல நாம் நடந்தோம்
திசைகெட்டு நிற்கின்றோம் இன்று
நீசென்ற திசை தெரியாது.

திக்கெட்டும் சிங்களம் இங்கு
சிதறுண்டு கிடக்குது தமிழினம்.
புலியாகப்பாய்ந்த நாம் இன்று
புலம்பெயர்ந்து கிடக்கின்றோம் முகாமில்.

என்றைக்கோ ஓர்நாள்
ஓடி நீ வருவாயென்று
உள்மனதில் ஓர்மத்தோடு
உறுதியாக இருக்கின்றோம்.

புரட்சி செய்த மறவர் நாம்
மடியுண்டு இருக்கின்றோம் இங்கு
மனம் திறக்க யாருமில்லை
மானம் கெட்டு மாழ்கின்றோம்.

எமை வேடிக்கை பார்க்கின்றார்கள்
எமக்கு வேதனையைத் தூண்டுகின்றது.
வேதமொழி பேசுவார்கள் வெள்ளையர்கள்
வாளெடுத்து போர்தொடுக்க நீ வருகையில்.

போரெடுத்து பகைமுடித்து
ஈழமதை நாமெடுத்து
இயல்பாக மானத்தோடு நாம் வாழ
வீறுகொண்டு நீ விரைவாக வரவேண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக