செவ்வாய், 27 ஏப்ரல், 2010

தமிழீழம் மீட்போம் வாருங்கள்

வாழ்க்கைச் சக்கரம் என்றும்
போல் சுழன்றோடிக்
கொண்டிருந்தது.
சிங்களம் மட்டும்
தன்சிந்தனையை மாற்றத்
தொடங்கிய நேரமும்.

இலங்கையில் தமிழர்கள்
வந்தோரை வரவேற்க்கும்
பண்போடு தான் மிக்கமனம்
நிறைந்த மகிழ்ச்சியோடு.

ஆடிப்பாடி மிக்க மகிழ்வோடு
வாழ்ந்து கொண்டிருக்கையில்தான்.
வந்தவன்குடி நித்தம் வாழ்ந்தவன்
குடிஎங்கள் தமிழினத்தின் மீது-

தங்கள் இனவெறியை தீர்க்க
முன்பே அன்று திட்டம்தீட்டிய
திட்டப்படி. சரியான தருணம் பார்த்து
சிங்களத்து இனவெறியைத் தீர்த்தது.

இதைத்தான் இனவெறிச் சிங்களம்
தக்கதருணம் தீட்டிய திட்டம்.
எண்பத்து மூன்றில் கொலையில்
பூத்தது கறுப்பாடிக் கலவரம்.

அன்று தொட்டு இன்றுவரை உலகம்
தமிழனை அழியுங்கள் என்றுதான்.
சிங்களத்திற்க்கு அனுமதி கொடுக்குது
இதுக்குத்தான் உலகத் தமிழர் நாங்கள்.

ஒன்றுபட்டு எம்மினத்தின் மானம் காக்க
எங்கள் தலைவன் கரத்தை பலப்படுத்தி
சிங்களவன் கொட்டம் அழித்து-தமிழர்
எங்கள் தமிழீழம் மீட்போம் வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக