புதன், 7 ஏப்ரல், 2010


ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள்

December 21, 2008

army-19121.jpg
வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது.

வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள் இந்தச் சமரில் தமது பெரும்பாலான பற்றாலியன்களை களம் இறக்கியிருந்தன.

அத்துடன் விமானப்படையின் உச்சக் கட்ட உதவித் தாக்குதல், பீரங்கிப் படைகளின் உச்சக் கட்ட சூட்டாதரவு என்று அனைத்து வளங்கரீகீளயும் ஒன்று குவித்து நடத்தியிருந்த இந்தத் தாக்குதல் படைத்தரப்புக்கு வெற்றியை கொடுக்கத் தவறி விட்டது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த 18 ஆம் திகதி 59ஆவது பிறந்த தினம். அன்றைய தினம் அவருக்கு வடரீக்ஷிபார்முனையிலும், கிளிநொ ச்சி பரந்தன் போர்முனையி லும் முக்கிய இடங்களைக் கைப் பற்றி பிறந்தநாள் பரிசளிக்கும் திட்டம் வன்னி,யாழ். படைத்தளபதிகளிடம் இருந்தாகக் கூறப்படு கிறது.

ஆனால் இந்தப் படைத் தளபதிகளின் திட் டம் வெற்றி பெறாமல் போனது. பிரதானமாக வடபோர்முனை, கிளிநொச்சி போர்முனை, பரந்தன் போர்முனை என்று மூன்று முக்கிய கட்டங்களாக இந்த சமர் குறித்துப் பார்க்கலாம்.

வடபோர்முனை

வடபோர்முனையில் பிரதான சண்டைகள் நடந்தது கிளாலிக் களமுனையில் தான். பெரும் எதிர்பார்ப்புகளோடு 53 ஆவது டிவிசனுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த பிரிகேடியர் கமால் குணரட்ணவின் தலைமையில் கிளாலி களமுனையிலும், முகமாலைக் களமுனையில் பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா தலையிமையில் 55ஆவது டிவிசனும் இந்த தாக்குதலில் பங்கேற்றிருந்தன.

யாழ்.படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்தத் தாக்குதலை நெறிப்படுத்தியிருந்தார். 15ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் பிரிகேடியர் கமால் குணரட்ணவின் தலைமையிலான 53 ஆவது டிவிசனின் 6 பற்றாலியன்கள் புலிகளின் நிலைகளை தகர்த்தழித்து முன்னேறும் நோக்கில் களம் இறக்கப்பட்டன.

எயர் மொபைல் பிரிகேட் எனப்படும் அதி உச்ச திறன் வாய்ந்த பிரிகேட்டும் அதில் அடங்கியிருந்தது. 1 ஆவது விஜயபா, 5 ஆவது விஜயபா, 6 ஆவது விஜயபா, 6வது சிங்க றெஜிமென்ட், 6 ஆவது கஜபா ஆகிய சிறப்பு தாக்குதல் பயிற்சிகளைப் பெற்ற காலாற் படை யணிகளின் முன்னகர்வுக்கு 2ஆவது இயந்திர காலாற்படை பற்றாலியன் துணையாக இருந்தது.

முன்னிருள் காலத்தை பயன்படுத்தி இரகசியமாக நகர்ந்து புலிகளின் நிலைகளுக்குள் அல்லது அதற்கு மிக நெருக்கமாக ஊடுருவிய பின்னர் நிலவு வெளிச்சத்தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்குவது தான் படைத்தரப்பின் திட்டமாக இருந்தது. ஆனால் படையினர் எதிர்பாராத வகையில் அவர்களின் இரகசிய நகர்வை மோப்பம் பிடித்திருந்த புலிகள், முன்னேறத் தொடங்கிய படையினர் மீது தாக்குதலைத் தொடுக்க, 15 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் சிறியளவிலான சண்டைகள் ஆரம்பித்தன. மறுநாள் அதிகாலை 1.20 மணியளவில் உண்மையான சமர் வெடித்தது. தொடர்ந்து 9மணி நேரத்துக்கு இது நீண்டது.

53 ஆவது டிவிசனுடன் இணைந்து முகமாலைக் களமுனையில் தாக்குதலைத் தொடங்க வேண்டியிருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55 ஆவது டிவிசனின் முன்னகர்வு சீரற்ற காலநிலையால் தாமதமாகியது. அதற்கிடையில் சண்டை தொடங்கி விட்டதால் உசாரடைந்த புலிகள் கிளாலிமுகமாலைக் களமுனையில் சுமார் 9 கி.மீ நீளமான முன்னரங்கில் உச்சக் கட்ட தாக்குதலை நடத்த 55ஆவது டிவிசன் படையினரின் முன்னகர்வு ஆரம்பத்திலேயே முடங்கி போனது.

வடபோர்முனையில் படை நிலைகளுக்கும் புலிகளின் நிலைகளுக்கும் இடையில் குறுகிய தூரமே இருந்தது. சில இடங்களில் 100மீற்றர் குறுகிய இடைவெளி இருந்தது. வேறு சில இடங்களில் அது 500 மீற்றர் வரை தொலைவில் இருந்தது. படையினர் முன்னகர்ந்து இருதரப்புக்கும்ஙூ€œ இடைப்பட்ட பிரதேசத்தை அடைவதற்குள் சண்டை தொடங்கிவிட அவர்கள் காப்பு நிலைகள் ஏதுமின்றி சண்டையிட நேரிட்டது.

புலிகள் தொடர்ச்சியான எதிர்த் தாக்கு தல்களை நடத்திக் கொண்டிருந்தனர். புலிக ளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனின் தலைமையில் தளபதிகள் முகுந்தன், ஜெரி போன்றோர் புலிகளின் அணிகளை வழிநடத்தியிருந்தனர். உக்கிரமான எதிர்த்தாக்குதலின் ஒரு கட்டத்தில் புலிகள் தமது தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்தி விட புலிகள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதி படைத்தரப்பு தலையை நிமிர்த்திக் கொள்ள ஆட்டிலறி ஷெல்களும் மோட்டார் ஷெல்களும் சரமாரியாக வந்து விழத் தொடங்கின.

குறுகிய நேரத்துக்குள் புலிகள் பொழிந்து தள்ளிய ஷெல்களால் குழப்ப நிலை ஏற்பட்டது. படையினர் தரப்பில் இழப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதனால் முன்னேறிய படையினர் ஏற்கனவே கைப்பற்றியிருந்த சில பகுதிகளையும் கைவிட்டு பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. காலை 10.30 மணிவரை இந்தச் சண்டைகள் நீடித்தன. கிளாலி கடலேரியில் இருந்து கடற்புலிகளும் படையினர் மீது தாக்குதல் தொடுத்திருந்ததோடு படையினரின் பின்புல விநியோக மார்க்கங்களை ஆட்டிலறிகள், கனரக மோட்டார்கள் மூலம் புலிகள் தாக்கியிருந்தனர்.

இந்தச் சண்டைகளில் 18 படையினர் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயமுற்றதாகவும் படைத்தரப்பில் கூறப்பட்டது. ஆனால் புலிகளோ 40 படையினர் கொல்லப்பட்டு 100 படையினர் காயமுற்றதாகவும் அறிவித்திருந்தனர். 8 படையினரின் சடலங்களையும் 18 பல்வேறு வகை ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இது இந்தச் சண்டை புலிகளுக்கு முற்று முழுதாகச் சார்பான நிலையில் இருந்தமைக்கான சான்றாக அமைந்தது.

பரந்தன் களமுனை

கிளாலியில் உக்கிர சண்டைகள் நடந்து கொண்டிருந்தபோது 16ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் பரந்தன் நோக்கிய முன்னகர்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் களமுனையில் 58 ஆவது டிவிசன் பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் தலை மையில் தனது முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி தாக்குதல் தொடுத்திருந்தது. குஞ்சுப் பரந்தனில் இருந்து உருத்திரபுரம் மற்றும் பூநகரிபரந்தன் வீதிக்கு வடக்கு பக்க மாகவுள்ள பகுதியைக் குறிவைத்தே இந்த டிவிசனின் நகர்வுகள் இருந்தன.

லெப்.கேணல் லால் சந்திரசிறி தலைமையிலான 9ஆவது கெமுனுவோச், மேஜர் உடஓவிற்ற தலைமையிலான 10ஆவது கஜபா, லெப்.கேணல் வஜிர வெலகெதர தலைமையிலான 8ஆவது கெமு னுவோச், லெப்.கேணல் சாலிய அனுமு னுகம தலைமையிலான 12ஆவது கஜபா ஆகிய நான்கு பற்றாலியன்களுடன் 8 ஆவது சிங்க றெஜிமென்ட்டின் இரண்டு கொம்பனிகளும் கிட்டத்தட்ட அரை பற்றாலியன் இந்த நடவ டிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தக் களமுனையில் படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த போதும் பரந்தன் பூநகரி வீதிக்கு வடக்கே சிறியளவு பிரதேசத்தை கைப்பற்றியிரருந்தனர். இந்தப் பகுதியில் இருந்தே 15 புலிகளின் சடலங்களை தாம் மீட்டதாகப் படைதரப்பு கூறியது.ஆனால் குஞ்சுப்பரந்தனில் இருந்து உருத்திரபுரம் நோக்கிய சண்டையின் போது படைத்தரப்பில் பலத்த இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் களமுனையில் இருந்தே புலிகள் 18 படையினரின் சடலங்களைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பரந்தனில் இருந்து 7கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சொறிக்கன்குளத்தை படையினர் கைப்பற்றியதாக அறிவித்திருக்கின்றனர். இது ஒன்று தான் இந்தப் பாரிய சமரில் படைத்தரப்புக்கு கிடைத்திருக்கின்ற அனுகூலமாகும்.

கிளிநொச்சிக் களமுனை

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57ஆவது டிவிசனின் 3 பிரிகேட் படையினர் கிளிநொச்சி நோக்கி நான்கு களமுனைகளைத் திறந்திருந்தனர். முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கி லெப்.கேணல் சேனக விஜேசூரிய தலைமையிலான 574பிரிகேட்டும், மலையாளபுரம், புலிக்குளம் பகுதிகளில் இருந்து லெப்.கேணல் தம்மிக ஜெயசுந்தர தலைமையிலான 572 பிரிகேட்டும், புதுமுறிப்பு நோக்கி கேணல் ரவிப்பிரிய தலைமையிலான 571பிரிகேட்டும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் முறிகண்டி, மலையாளபுரம், புலிக்குளம் ஆகிய நகர்வுகள் மாலை 4மணியுடன் நிறுத்தப்பட்டன.

இந்தப் பகுதிகளில் படையினர் முன்னேற முடியாத நிலையில் பழைய நிலைகளுக்குத் திரும்ப புதுமுறிப்பு களமுனையில் மட்டும் அடுத்த நாள் காலை வரையில் சண்டைகள் நீடித்தன.

புதுமுறிப்பில் முன்னேறிய ஒரு தொகுதிப் படையினர் புலிகளின் உக்கிர தாக்குதலுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கமுடியாத நிலை ஏற்பட்டதுடன் காயமுற்ற படையினரை வெளியேற்ற முடியாதளவுக்கு புலிகளின் ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தன.

இதனால் 571 பிரிகேட் பலத்த சேதங்களைச் சந்திக்க நேரிட்டது. குறிப்பாக லெப்.கேணல் ஜெயம்பதி பண்டாரவின் தலைமையிலான 12ஆவது சிங்க றெஜிமென்ட் டைச் சேர்ந்த படையினர் பலர் கொல்லப் பட்டதுடன் அவர்களின் சடலங்களை யும் மீட்கமுடியாத நிலை யேற்பட்டது.

இந்தநிலையில் மறுநாள் புலிகள் 12படையினரின் சடலங்களை புதுமுறிப்பில் இருந்து கைப்பற்றியதோடு பெருமளவு ஆயுதங்களையும் அவர்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களில் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆர்.பி.ஜி.கள் அதிகமாக இருந்ததுடன், சுமார் 50ஆயிரம் வரையான ரவைகளும் அடங்கியிருந்தன.

இந்த இரண்டு நாள் சமரின் போதும் கிளிநொச்சிபரந்தன் களமுனையில் படையினர் தரப்பில் 165 பேர் கொல்லப்பட்டு 375இற்கு மேற்பட்டோர் காயமுற்றதாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால் படைத்தரப்பு தமது தரப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டு 250 பேர் வரை காயமுற்றதை உறுதிசெய்கிறது. ஆனால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இழப்பு 25 படையினர் பலி யானதாகவும் 10பேர் காணாமற் போனதாக வும் 160 பேர் காயமுற்றதாகவுமே இருக் கிறது. இது ஒட்டுமொத்த சண்டைகளின் சேத விபரம்.

அதேவேளை 145 படையினர் வரையில் இருநாள் சண்டைகளிலும் கொல்லப்பட்டதாகவும் 300பேர் காயமுற்றதாகவும் படைத்தரப்புடன் நெருங்கிய சில வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு பற்றி படைத்தரப்பு மிகைப்படுத்துவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். 120 புலிகள் பலியானதாக படைதரப்பு கூறினாலும் 16, 17ம் திகதிய சண்டைகளில் அவர்கள் 25இற்கும் குறைவான போராளிகளையே இழந்திருக்கலாம் என்று தெரிகிறது. படைத்தரப்பில் 25 படையினரே கொல்லப்பட்டதாக கூறிய போதிலும் புலிகள் 38 படையினரின் சடலங்களை கைப்பற்றியிருந்தது இழப்புகளின் கனதியை வெளிக்காட்டியிருந்தது. கிளாலி கிளிநொச்சி பரந்தன் களமுனைகளில் நடந்திருக்கின்ற இந்தச் சண்டையில் நன்கு பயிற்றப்பட்ட 4 டிவிசன்கள் பங்கேற்றிருந்தன. அத்தோடு இராணுவத்தின் கெமுனுவோச், கஜபா, சிங்க, விஜயபா படைப்பரிவு என எல்லா காலாற்படைப்பிரிவுகளும் பங்கேற்றிருந்தன.

ஆனாலும் புலிகள் ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களின் தாக்குதல்களை எதிர்கொண்டு படையினரின் நகர்வை தடுத்து நிறுத்தியமை அவர்களின் பலத்தை வெளிக்காட்டியிருக்கிறது. இது அடுத்துவரும் நாட்களில் இதை விட மோசமான சமர்கள் நடக்கலாம்.அதேவேளை இப்போதும் கிளிநொச்சியைச் சுற்றிவர அவ் வப்போது சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த வெள்ளியன்று காலையில் இரணைமடு நோக்கி 574 பிரி கேட்டைச் சேர்ந்த 3 பற்றாலியன்கள் ஒரு நகர் வைச் செய்திருந்தன.

இந்தச் சண்டையின் போது சிறியளவு தூரம் முன்னேறியதாகப் படைத்தரப்பு கூறியிருக்கின்ற போதும் புலிகளோ படையினரின் முன்னகர்வை முறியடித்து ஒரு இராணுவச் சிப்பாயின் சடலத்தையும் ஆயுதங்களையும் மீட்டதாக கூறியுள்ளனர்.

இப்போதைய சண்டைகளில் இரு தரப்புமே சடலங்களை கைவிட்டு பின்வாங்கும் நிலை அடிக்கடி நிகழ்நத வருகிறது. இது சண்டைகளின் வெற்றி என்பது தனியே ஒரு தரப்புக்கு சாதகமாக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக