வெள்ளி, 29 ஜனவரி, 2010

மீட்பர் வருவார்

ஆர்ப்பரித்து அலைகடல்கள்
அகமகிழ்ந்து குதிக்க
பூப்படைந்து செடிகொடிகள்
பூரிப்பில் மிதக்க
வியப்படைந்த வானில் மேகம்
மின்னல் ஒளி தெளிக்க
மீட்பனவன் வந்துதித்தான்
மண்ணுயிர்கள் மீட்க

பாவமதும் சாபமதும்
ஒன்றாகப் புணர்ந்து
கோரமெனும் ஓர் மகவை
ஈன்றெடுக்க அதுவோ
வேகமென உருவெடுத்து
மக்கள் பலி கேட்க
ஏகனவர் தன்வாழ்வை
இரையாக்கிக் கொண்டார்

சிறுவயதில் குழந்தைத்தனம்
நிரம்பப் பெற்று இருந்தார்
விடலையிலே விடுக்கப்பட்டக்
கட்டளையை உணர்ந்தார்
தனக்குரிய தோழர்களைத்
திறம்படவே தெரிந்து - ஒரு
பெரும் மக்கள் படைதன்னை
தன்பின்னே இணைத்தார்

பிறருக்காகத் தன்வாழ்வை
பிழிந்தெடுத்துக் கொடுத்தும் - சிலர்
சுயலாப நோக்கோடு
துரோகங்கள் இழைக்க
இவர்நம்பும் உயிர்நண்பன்
பணம் பொருளை வேண்டி - இவர்க்
கெதிரான அரசாங்கம்
தனில் காட்டிக் கொடுத்தான்

பிறக்கையிலே செல்வங்களில்
கொழிக்கவில்லை பிறர்போல்
சிறக்கையிலே உலகினிலே
யாருமில்லை இவர்போல்
உறக்கமில்லை ஓய்வுமில்லை
மக்கள்தொண்டில் வாழ்வு
இறக்கவில்லை மீட்பரவர்
இடர்நீக்க வருவார்



தீயான திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஆறரைக்கோடிமக்கள் அன்புடன் இருந்தபோதும்

ஆதரவற்றவராய் அழிந்தோம் ஆனாலும்
அரசியல்வேறு மக்கள்அன்பும்வேறு என்பதினை
அறியாதவரல்ல ஈழத்தமிழர்கள்.

நீறாகிப்போன உன்செயலால்-கண்ணில்
நீராகிநிற்கும் நாங்களும் நீங்களும் என்றும்
நீயாரோ நாம்யாரோ என்றல்ல -அடி
வேரால் இணைந்த உறவுகளல்லவா?

தேரான எம்விடுதலைக்கு தோளாகிஆளாகி
சீராகி வடம்பிடிக்கும் சிலகைகள்தானாகி- அயல்
ஊராகி உளம்உழும்ஏராகி உணர்வுப்பேறாகி
தீயாகிப்போனயே திருக்குமாரா! முத்துக்குமாரா!!

ஓராண்டு நினைவாகும் உன் இன்நாளினிலே
தீராத எம்தாகம்தீர்க்காது தீந்தமிழராய் எமைப்பார்காது
பாரதமாதா தன்அன்புக்கரம்சேர்க்காது பகைவனாய்எமை
வேறாகிப்பார்க்கும்நிலையே நிஜமானதாயுள்ளதையா.

உன்னிலையில் பலபேர்கள் தம்முயிரைத் தந்தபோதும் -தமிழகமோ
தன்னிலையில் தன்பிடியில் தளராது தன்னலமாய் இருந்திடவே
வன்னிமக்கள் பட்டவதைவாழ்வை வகைகூறஇயலாது என்றும்
கன்னித்தமிழன் கண்ணின்று இக்கவலைதீராது தீராது.

சின்னச்சின்ன மழைத்தூறல்களாய் அன்பைசிந்துவோர் சிலரும்
கன்னமிடும் கள்வர்களாய் கைதரவருவோர்களாய் பலபேருமாய்
தன்னலவாதிகளாய் தரணியில் தர்பார்கள்இருப்பதினால்-இன்றுநாம்
என்னென்னவோவானாலும்..... எம்மிருள்கலையும்பொழுதுவிடியும்போது
உன்பெயரும் நன்றியுடன் உயர்வான பதிவுபெறும் மகிமையுறும்.

கேள்வி பதில்

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?
சிவகுமாரன் (1974)

2)
தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?
பசுபதி. ராதாகிருஸ்னன் ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)

3)தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?
முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்)

4)
தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?
முத்தையன் கட்டு வலது கரை..

5)தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?
இரண்டு இடங்களுக்கு..

6)
மிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)
லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர் (12-03- 1986 இல் வீரச்சாவு)
7)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
மன்னார் கொண்டைச்சி(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,1990-06- 21 இல்
8)
இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?
10 ஒக்டோபர் 1987 முதல் வீரச்சாவடைந்தவர் அன்ரன்
இதே நாளில் தான் மாலதியும் வீரச்சாவடைந்தர்

9)
விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானுர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?
1978-09-07 அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,
சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்கஇரத்மலானை வானூர்தி தளத்தில்
தரித்து நின்ற
"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக
....

1)தென் தமிழீழத்தின் முதலாவது தரைக் கரும்புலித் தாக்குதல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது.தற்கொடையாற்றிய கரும்புலி யார்?
05.1201995 அன்று மட்டு - புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்திய கரும்பிலித்தாக்குதலை கரும்புலி மேஜர் ரங்கன் நிகழ்த்தினார்.யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 25 புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

2)
இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?
1986 நவம்பர் மாதம்


3)இலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?
1999 ஆம் ஆண்டு இந்தப் பல்குழல் எறிகணைகள் முதன் முதலில் மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் தகர்ப்பில விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது.

4)
கடற்புலிகளின் துணைத்தளபதியாக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாள்ஸ் அவர்கள் எப்போது, எந்தச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?
கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியின் போது நடைபெற்ற கடற்சமரில் 11.06.1993ல் வீரகாவியம் படைத்தார்.

5)யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்?
பண்டாரவன்னியன்

6)
உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம்

7)தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்.


8)
கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?
user posted image
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது

9)கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
செல்வா

10)தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?
தந்தை செல்வா.

12)மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது?
28.06.1995.

13)
சுமார் 8000 தமிழீழ மக்களின் சாவிற்குக் காரணமான இந்தியத் துருப்புக்களைத் தமிழீழத்திற்கு அனுப்பிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இனந்தெரியாதோரின் குண்டுத் தாக்குதலிற்குப் பலியான ஆண்டு யாது? (மாதம் திகதி உட்பட)
21 வைகாசி 1991


14)லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?
நளாயினி படையணி.


15)லெப். கேணல் ராதா எங்கே நடைபெற்ற மோதலில் களப்பலியானார்?
லெப்.கேணல் ராதா (கனகசபாபதி ஹரிச்சந்திரன்)
புன்னாலைக்கட்டுவனில் 20-05-1987 அன்று சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் மார்பில் குண்டேந்தி வீரச்சாவடைநதார்.

16)ஆயுதப் போராட்டம் மூலமே தமிழ் மக்களது விடுதலையைப் பெற முடியுமென அரசியல் மேடைகளில் அஞ்சாமல் முழங்கிய
இடதுசாரித் தமிழ்த் தலைவர் யார்?
சண்முகதாசன்

17)தமிழீழ நிலப்பரப்பில் வடமாகாண நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீற்றர்?
8879.6 சதுர கிலோ மீற்றர்.

18)லெப். கேணல் சுகந்தன் படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரமரணமடைந்த இடம் எது?
கோதண்ட நொச்சிக்குளம்.

19)முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி பிறந்த கிராமம் எது?
மண்கும்பான் யாழ்ப்பாணம்.

20)இந்திய சதிக்குப் பலியான கேணல் கிட்டு கொண்டு வந்த சமாதானச் செய்தியின் பெயர் என்ன?
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338&postdays=0&postorder=asc&&start=15][size=18]குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்...

21)
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
நீர்வேலி

22
)லெப். கேணல் கிறேசி வீரமரணமடைந்த வீரச்சமர் நடைபெற்ற இடம் எது?
பெரியமடு (மன்னார்)

23)மட்டக்களப்பு மாவட்டத்தில் முருங்கைக்கல் கனிமவளம் காணப்படும் இடம் எது?
கல்குடா

24)தமிழீழத்தில் கப்டன் றோய் ஞாபகார்த படையணி பயிற்சிப்பாசறை எங்கு அமைந்திருந்தது?


25
கடல் கரும்புலி மேஐர் கணேஷ் எந்த தாக்குதலில் வீரச்சாவடைந்தார்?

user posted image
விடுதலைப் புலிகளின் ஈரூடகத் தாக்குதலான தவளைப் பாய்ச்சல் சமரின் போது



வியாழன், 28 ஜனவரி, 2010

1) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?
1995 மார்ச் 9 இல் திருகோணமலை புல்மோட்டைக்கடலில் வைத்து டோராப் படகினைத்தாக்கி வீரச்சாவடைந்தார்.
user posted image

2)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது
(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)
13.02.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் மாவீரர் ஆனார்கள். "விடிவிற்கு முந்திய மரணங்கள்" என்னும் நூலில் இத்தாக்குதல் சம்பவத்தை விபரித்து பங்குபற்றியவர் எழுதியுள்ளார். (எழுதியவர் பாரீசில் தற்போது வசிக்கின்றார்)

3)
http://ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=4613