புதன், 27 ஜனவரி, 2010

விலைபோன தளபதி

தமிழினத் துரோகி

தன் மானத்தமிழன் ஊட்டி வளர்த்திட்ட ஒரு நாகபாம்பு தான் தமிழ் மக்கள் கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட கருணா. தனக்கு என்றொரு அதிகாரத்துடன் தமிழர்களின் மனதிலே இடம் பிடித்த ஒரு சிறந்த இராணுவத்தளபதி.

சிங்கள பேரினவாதத்துக்கு விலை போன எம் இராணுவத்தளபதி கருணா அம்மான். இன்று எம் இனத்தை சிங்கள வெறியன்கள் அழித்து வருவதற்கு எம் தன்மானத் தலைவர் ஊட்டி வளர்த்த தளபதியே காரணம்.

மென்மையான மனம் கொண்ட எம் தலைவர் தன் இனத்திற்கு துரோகம் செய்வான் என்று நினைத்தா! இவனை வளர்த்தார். காசுக்காக பதவி ஆசைக்காக தன் இனத்தை காட்டிக் கொடுக்கும் துரோக வேலையை செய்கிறான்.

உண்மையில் கருணா அம்மான் என்று அன்பாக அழைத்த நாக்குகள் இன்று கருணா என்று அழைக்கின்றன. என்ன தான் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் தமிழர்களின் மனதில் இனிமேல் ஒரு இடம் கிடையாது. நம் தமிழினத்தை பற்றி நன்றாக தெரிந்த ஒரு தலைவன் துரோகம் செய்தவுடன் தமிழர்களின் நெஞ்சம் துடிதுடித்துப் போனது.

லண்டனில் வெந்நீர் ஊற்றினார்கள். இன்னும் எங்கு என்ன நடக்குமோ தெரியாது. எங்கள் தன்மானத் தலைவர் "எதிரியை கொல்லலாம் என் விசுவாசியை எப்படி கொல்வது" என்று விட்டு வைத்தாலும் தமிழர்களின் இரத்தம் கொதிச்சுக்கொண்டே இருக்கும் என்பது கருணாக்கும் நன்றாகத் தெரியும்.

தமிழ் மக்களின் ஆசை என்ன என்றால், தயவு செய்து கருணா அம்மான், கட்டுக்கோப்பான தலைவரின் அமைப்பிலிருந்து நீங்கள் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், எம் மக்களையும் மக்கள் வாழும் இடங்களையும் சிங்கள வெறியன்கள் பிடிப்பதற்கு தயவு செய்து உங்கள் ஒத்துழைப்பு சிறிதேனும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக