வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஈழத்தின் கதிரவனே!
http://4.bp.blogspot.com/_kkvu2mnBmfk/Sw7cghnJVdI/AAAAAAAAAPc/esfbGJlvSZ8/s1600/thalaivar.jpg
ஈழத்தின் கதிரவன்தான்
என் தலைவன் பிரபாகரன்...

தலைவா உனது பிரிவில்தான்
எங்கள் வாழ்வில் இருள்
சூழ்ந்து கொண்டதை கண்டோம்...

தலைவா உன்னை கொன்று விட்டதாக கூறி
கூவி கொண்டாடுகிறான்
சிங்கள இன வெறியன்...

தலைவா உனது வருகையில்தான்
தமிழ் ஈழத்தின் விடியலும்
விடுதலையும் இருக்கின்றது
என்பதை இவ்வுலகம் அறியும்...

தலைவா உனது வருகையைக் கண்டு
இவ்வுலகமே வியந்து போகும்.
இனவெறியர்களோ பயந்து சாகும்...

ஈழத்தின் கதிரவன்
விரைவில் வருவார்.
தமிழர்கள் வாழ்வுக்கு
விடியலை தருவார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக